ETV Bharat / state

ரேஷன் கடைகளில் கபசுரக் குடிநீர் பாக்கெட்டுகள்!

author img

By

Published : Jun 22, 2021, 2:00 PM IST

Updated : Jun 23, 2021, 10:47 AM IST

சென்னை: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கபசுரக் குடிநீர் பாக்கெட்டுகளை இலவசமாக வழங்கக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கபசுரகுடீநீர் பாக்கெட்டுகள்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கபசுரகுடீநீர் பாக்கெட்டுகள்!

கரோனா பாதிப்பைத் தடுக்கும் வகையில், உடலில் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் சித்த மருத்துவ மருந்தான கபசுரக் குடிநீர் பாக்கெட்டுகளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்கக் கோரி, திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், மத்திய ஆயுஷ் அமைச்சகம், கபசுரக் குடிநீர் விநியோகத்தை விரைவுபடுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

கபசுரக் குடிநீர் விநியோகிக்கக் கோரி மனு

கரோனா தொற்று பாதித்து உயிரிழப்போரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும், பதிவுசெய்யப்பட்ட சித்த மருத்துவர்களைக் கொண்டு சித்தா சிகிச்சை முகாம்களை நடத்த வேண்டும் என மனுவில் கோரியுள்ளார். இதுசம்பந்தமாக தமிழ்நாடு அரசுக்கு அளித்த கோரிக்கை மனுவைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

முடிவெடுக்கத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராம்மூர்த்தி அடங்கிய அமர்வு, இது மாநில அரசின் கொள்கை சம்பந்தப்பட்டது எனவும், கபசுரக் குடிநீரின் நோய் எதிர்ப்புத் திறனை அறிவியல் பூர்வமாக மதிப்பீடு செய்ய வேண்டும் எனக் கூறி, மனுதாரரின் கோரிக்கை மனுவைப் பரிசீலித்துத் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பிணை கோரி மனு

கரோனா பாதிப்பைத் தடுக்கும் வகையில், உடலில் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் சித்த மருத்துவ மருந்தான கபசுரக் குடிநீர் பாக்கெட்டுகளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்கக் கோரி, திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், மத்திய ஆயுஷ் அமைச்சகம், கபசுரக் குடிநீர் விநியோகத்தை விரைவுபடுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

கபசுரக் குடிநீர் விநியோகிக்கக் கோரி மனு

கரோனா தொற்று பாதித்து உயிரிழப்போரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும், பதிவுசெய்யப்பட்ட சித்த மருத்துவர்களைக் கொண்டு சித்தா சிகிச்சை முகாம்களை நடத்த வேண்டும் என மனுவில் கோரியுள்ளார். இதுசம்பந்தமாக தமிழ்நாடு அரசுக்கு அளித்த கோரிக்கை மனுவைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

முடிவெடுக்கத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராம்மூர்த்தி அடங்கிய அமர்வு, இது மாநில அரசின் கொள்கை சம்பந்தப்பட்டது எனவும், கபசுரக் குடிநீரின் நோய் எதிர்ப்புத் திறனை அறிவியல் பூர்வமாக மதிப்பீடு செய்ய வேண்டும் எனக் கூறி, மனுதாரரின் கோரிக்கை மனுவைப் பரிசீலித்துத் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பிணை கோரி மனு

Last Updated : Jun 23, 2021, 10:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.