ETV Bharat / state

'பொன். மாணிக்கவேல் செயல் ஆர்.எஸ்.எஸ்-க்கு துணையாகிவிட கூடாது..!' - கே. பாலகிருஷ்ணன் - போராட்டம்

சென்னை: "பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக பொன். மாணிக்கவேலின் நடவடிக்கைகள் இருந்துவிட கூடாது" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாலகிருஷ்ணன் பேட்டி
author img

By

Published : Feb 5, 2019, 9:01 PM IST

கோவில், மடம், அறக்கட்டளை, வக்ஃபோர்டு, தேவாலயங்கள் ஆகியவற்றுக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்கள் மற்றும் சாகுபடி, சிறுவணிகம் செய்பவர்களுக்கு, அறநிலைய சட்டம் 34-ன் படி நியாயமான விலையை தீர்மானித்து, அவர்களுக்கே அந்த நிலங்களை சொந்தமாக்ககோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்,

"தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற பல லட்சக் கணக்கான மக்கள், கோயில் நிலங்களில் குடியிருந்து வருகின்றனர். சாகுபடி செய்து வருகின்றனர். அவர்களையெல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லட்சக் கணக்கான மக்களை இவ்வாறு வெளியேற்றினால் அவர்கள் எங்கே போவது என்ற கேள்வியை எழுப்பும் விதமாக இந்த நடவடிக்கை உள்ளது. ஆகையால் அவர்களை வெளியேற்றாமல், அந்த நிலத்தையே அவர்களுக்கு சொந்தமாக்க பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெறும் இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்கிறது என்றார்.

மேலும் அவர், "பொன். மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு சிலைகளை திருடுபவர்களை கைது செய்வதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள், தமிழ்நாட்டில் உள்ள இந்து அறநிலையத் துறையை இல்லாமல் செய்து, அதன் கட்டுப்பாட்டில் இருக்கின்ற நிலங்களையெல்லாம் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். அந்த போராட்டத்துக்கு வலு சேர்க்கின்ற வகையில் பொன். மாணிக்கவேலின் நடவடிக்கைகள் இருந்துவிட கூடாது என்பதை வலியுறுத்துகிறோம்" என்றும் தெரிவித்தார்.

undefined

கோவில், மடம், அறக்கட்டளை, வக்ஃபோர்டு, தேவாலயங்கள் ஆகியவற்றுக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்கள் மற்றும் சாகுபடி, சிறுவணிகம் செய்பவர்களுக்கு, அறநிலைய சட்டம் 34-ன் படி நியாயமான விலையை தீர்மானித்து, அவர்களுக்கே அந்த நிலங்களை சொந்தமாக்ககோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்,

"தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற பல லட்சக் கணக்கான மக்கள், கோயில் நிலங்களில் குடியிருந்து வருகின்றனர். சாகுபடி செய்து வருகின்றனர். அவர்களையெல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லட்சக் கணக்கான மக்களை இவ்வாறு வெளியேற்றினால் அவர்கள் எங்கே போவது என்ற கேள்வியை எழுப்பும் விதமாக இந்த நடவடிக்கை உள்ளது. ஆகையால் அவர்களை வெளியேற்றாமல், அந்த நிலத்தையே அவர்களுக்கு சொந்தமாக்க பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெறும் இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்கிறது என்றார்.

மேலும் அவர், "பொன். மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு சிலைகளை திருடுபவர்களை கைது செய்வதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள், தமிழ்நாட்டில் உள்ள இந்து அறநிலையத் துறையை இல்லாமல் செய்து, அதன் கட்டுப்பாட்டில் இருக்கின்ற நிலங்களையெல்லாம் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். அந்த போராட்டத்துக்கு வலு சேர்க்கின்ற வகையில் பொன். மாணிக்கவேலின் நடவடிக்கைகள் இருந்துவிட கூடாது என்பதை வலியுறுத்துகிறோம்" என்றும் தெரிவித்தார்.

undefined
கோவில், மடம், அறக்கட்டளை, வக்ஃபோர்டு, தேவாலயங்கள் ஆகியவற்றுக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி, சிறுவணிகம் செய்பவர்களுக்கு அறநிலைய சட்டம் 34ன் படி நியாயமான விலையை தீர்மானித்து அவர்களுக்கே சொந்தமாக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நா.பெரியசாமி, ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழக துணை தலைவர் கலி.பூங்குன்றன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “ தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற பல லட்சக் கணக்கான மக்கள் கோயில் நிலங்கலில் குடியிருந்து வருகின்றனர். சாகுபடி செய்து வருகின்றனர். அவர்களையெல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. லட்சக் கணக்கான மக்களை வெளியேற்றினால அவர்கள் எங்கே போவது என்ற கேள்வி எழுகிறது. எனவே அவர்களை வெளியேற்றாமல் அந்த நிலத்தையே அவர்களுக்கு சொந்தமாக்க பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இங்கு போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

பொன். மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலைகளை திருடுபவர்களை கைது செய்வதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் இந்து அறநிலையத் துறையை இல்லாமல் செய்து அதன் கட்டுப்பாட்டில் இருக்கின்ற நிலங்களையெல்லாம் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். அந்த போராட்டத்துக்கு வலு சேர்க்கின்ற வகையில் பொன். மாணிக்கவேலின் நடவடிக்கைகள் இருந்துவிட கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். அதுமட்டுமில்லாமல் லட்சக் கணக்கான நிலங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அவைகளையெல்லாம் கண்டுபிடிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எடப்பாடி அரசாங்கம் ஊழல், ஊதாரித்தனமான அரசாங்கமாக மாறி போயுள்ளது. கொடைக்கானலில் நடைபெற்ற கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் ஏராலமான விவரங்கள் இன்றைக்கு வெளியிலே வந்திருக்கிறது. இந்த நிலையில் முதல்வர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து எனக்கும் இந்த கொலைக்கும் சமப்ந்தம் இருப்பதை போல் ஊடகங்களில் செய்திகள் வெளியிட கூடாது, யாரும் பேட்டி அளிக்க கூடாது என்று தடை உத்தரவு வாங்கியிருக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் நடந்த இந்த கொலை, கொள்ளையானது ஏதோ மூடு மந்திரம் போல் நடைபெறுகிறது என்று சொன்னால் இதற்கு அரசாங்கம் பொறுப்பு ஏற்க வேண்டாமா. முதல்வர் பதில் சொல்ல வேண்டாமா. இதற்கு யார் காரணம் என்று விளக்க வேண்டாமா. எனவே இதுபற்றி தெளிவுபடுத்த முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அப்படி வெளியிடுவதற்கு நீங்கள் தயார் இல்லை என்று சொன்னால் இதில் உங்களுக்கு சம்பந்தம் உள்ளது என்பதை தமிழக மக்கள் நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

மோடி அரசாங்கம் நான்கரை வருடமாக திட்டங்களை அறிவித்து கிடப்பில் போட்டுவிட்டு விவச்சயிகளுக்கு ஆறாயிரம் ரூபாய் அறிவித்து உடனடியாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். கேவலம் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு தேர்தலில் வாக்குகளை பெற்றுவிட வேண்டும் என்று நயவஞ்சக முறையில் செயல்பட்டு வருகிறார். விவசாயிகள் பெற்றிருக்கும் கடன்களை தள்ளுபடி செய்யுங்கள். அவர்களுக்கு நியாயமான விலை கொடுக்கிற காரியத்தையும் சேர்த்து செய்யுங்கள். தினமும் பத்து விரலில் பாடுபடுகின்ற நிலம் இல்லாத பெரும்பகுதியான விவசாய தொழிலாளிக்கு என்ன செய்ய போகிறது இந்த அரசு. எனவே இப்படிப்பட்ட ஏற்பாடுகளின் மூலம் மோடி தன்னுடைய தோல்வியை தடுத்துவிட முடியாது. தமிழ்நாட்டில் மோடியோடு யார் சேர்ந்தாலும் அவர்களும் மோடியோடு சேர்ந்து படுதோல்வி அடைவார்கள் என்று நிச்சயிக்கப்பட்டுள்ளது.

ஆறுமுகசாமி தலைமையில் நடைபெறுகிற விசாரனை கமிஷன் நோக்கத்தோடு நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்து வழக்கை கி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று கூறியவர் ஓ.பி,எஸ். ஆனால் அவர் ஆஜராக வேண்டும் என்று  நான்கு முறை சம்மன் அனுப்பப்பட்டும் இதுவரை ஆஜராகவில்லை. துணை முதல்வரே ஆஜராகவில்லை என்பது திட்டமிட்டு எதையோ மறைப்பதற்கான ஏற்பாடு. அதுமட்டுமின்றி இந்த விசாரணை ஆணையமானது நேர் கோட்டில் போகிறதா என்ற சந்தேகமும் மக்களிடையே எழுந்துள்ளது. ஆட்சியில் இருப்பவர்கள் தங்களை பாதுகாத்து கொண்டு வேறு யாரையோ அடையாளம் காட்டுகிற முறையில் இந்த விசாரணை ஆணையம் அமையுமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது” என்று தெரிவித்தார்.   

 

          
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.