ETV Bharat / state

பொய்யான வாக்குறுதியளித்து மக்களுக்கு பட்டை, நாமம் போட்டுவிட்டது திமுக: ஜெயக்குமார்

author img

By

Published : Jan 17, 2023, 5:32 PM IST

’தேர்தலுக்கு முன்னர் பல வாக்குறுதிகளை அளித்த திமுக, இதுவரை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தாமல், பொய்யான வாக்குறுதியளித்து மக்களுக்கு பட்டை நாமம் போட்டு விட்டது’ என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

பொய்யான வாக்குறுதியளித்து மக்களுக்கு பட்டை, நாமம் போட்டுவிட்டது திமுக
பொய்யான வாக்குறுதியளித்து மக்களுக்கு பட்டை, நாமம் போட்டுவிட்டது திமுக

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது, "மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனமருமான எம்ஜிஆர் திரை உலகிலும், அரசியலிலும் ஜாம்பவானாகத் திகழ்ந்தார். திமுகவை 13 வருடங்கள் வனவாசம் அனுப்பியவர். குடும்ப ஆட்சியை எதிர்த்தவர், எம்ஜிஆர்.

எடப்பாடி பழனிசாமியை சசிகலா சந்திக்க இருப்பதாகக் கூறிய கருத்தினை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டுமென்றால் டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் அனைவரும் இணைந்து ஒரே அணியாக செயல்படலாம். அதில் நாங்கள் தலையிடமாட்டோம். அதே நேரத்தில் அதிமுக கட்சி விவகாரங்களில் அவர்கள் மூக்கை நுழைக்க வேண்டாம். திமுகவைப் பொறுத்தவரை கட்சியை குடும்ப கட்சியாக்கிவிட்டது. கழகமே குடும்பம் என்பது போய் குடும்பமே கழகமாகிவிட்டது. எனவே அழகிரியும் திமுகவில் சேரலாம்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பாக கருத்துக் கணிப்புக் கூட்டத்தில் தேர்தல் ஆணையத்திடம் இருந்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமிக்கு முறையான அழைப்புகள் வரவில்லை. மேலும் இல்லாத ஒரு பதவிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் மூலம் மனித சக்தி விரயம், பொருளாதார சக்தி விரயம் தடுக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, ’’திமுகவிற்கு மத்திய அரசின் இந்த முடிவானது வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ஏனெனில் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலில் நடத்த வாய்ப்பு இருக்கிறது என்பதால் திமுக பீதியில் இருக்கிறது. மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கும், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 கொடுக்கும் அறிவிப்பு வெளியிட்டு கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் முடிய உள்ள நிலையில், இதுவரை திமுக அந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. மேலும் தேர்தல் அறிக்கையில் திமுக கூறிய பல்வேறு திட்டங்களை, அறிவிப்புகளை செயல்படுத்தாமல், தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டை நாமம் போட்டுவிட்டது" என குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: சே குவேரா மகள் அலெய்டா குவேரா சென்னை வருகை; விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது, "மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனமருமான எம்ஜிஆர் திரை உலகிலும், அரசியலிலும் ஜாம்பவானாகத் திகழ்ந்தார். திமுகவை 13 வருடங்கள் வனவாசம் அனுப்பியவர். குடும்ப ஆட்சியை எதிர்த்தவர், எம்ஜிஆர்.

எடப்பாடி பழனிசாமியை சசிகலா சந்திக்க இருப்பதாகக் கூறிய கருத்தினை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டுமென்றால் டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் அனைவரும் இணைந்து ஒரே அணியாக செயல்படலாம். அதில் நாங்கள் தலையிடமாட்டோம். அதே நேரத்தில் அதிமுக கட்சி விவகாரங்களில் அவர்கள் மூக்கை நுழைக்க வேண்டாம். திமுகவைப் பொறுத்தவரை கட்சியை குடும்ப கட்சியாக்கிவிட்டது. கழகமே குடும்பம் என்பது போய் குடும்பமே கழகமாகிவிட்டது. எனவே அழகிரியும் திமுகவில் சேரலாம்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பாக கருத்துக் கணிப்புக் கூட்டத்தில் தேர்தல் ஆணையத்திடம் இருந்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமிக்கு முறையான அழைப்புகள் வரவில்லை. மேலும் இல்லாத ஒரு பதவிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் மூலம் மனித சக்தி விரயம், பொருளாதார சக்தி விரயம் தடுக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, ’’திமுகவிற்கு மத்திய அரசின் இந்த முடிவானது வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ஏனெனில் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலில் நடத்த வாய்ப்பு இருக்கிறது என்பதால் திமுக பீதியில் இருக்கிறது. மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கும், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 கொடுக்கும் அறிவிப்பு வெளியிட்டு கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் முடிய உள்ள நிலையில், இதுவரை திமுக அந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. மேலும் தேர்தல் அறிக்கையில் திமுக கூறிய பல்வேறு திட்டங்களை, அறிவிப்புகளை செயல்படுத்தாமல், தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டை நாமம் போட்டுவிட்டது" என குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: சே குவேரா மகள் அலெய்டா குவேரா சென்னை வருகை; விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.