ETV Bharat / state

'நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடுகிறாரா என்பது முக்கியமில்லை' - பச்சையாகத் திட்டிய திருநாவுக்கரசர்! - nirmala sitarama about onion price

சென்னை: நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடுகிறாரா என்பது முக்கியமில்லை, நாட்டு மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதே முக்கியம் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

It doesn't matter whether Nirmala Sitharaman eats onions - Thirunavukkarasar MP
It doesn't matter whether Nirmala Sitharaman eats onions - Thirunavukkarasar MP
author img

By

Published : Dec 5, 2019, 8:44 PM IST

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், '' நாடாளுமன்றத்தில் மற்ற உறுப்பினர்கள் வெங்காயம் தட்டுப்பாடு குறித்து நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் நான் வெங்காயம் சாப்பிடவில்லை எனக்கூறியது வேடிக்கையாக உள்ளது. அதில் சாதி, மதம் ஆகியவை புகுத்தி விமர்சனம் செய்ய விரும்பவில்லை.

மத்திய அமைச்சராக இருப்பவர் என்ன சாப்பிடுகிறார் என்பது முக்கியமில்லை; மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதே முக்கியம். அதற்கு தகுந்த பதிலை அவர் கூறியிருக்க வேண்டும். ஆனால், அவர் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு கூறிவிட்டார். அவர் இதுபோல பொறுப்பற்றத்தனமாக பேசியதை தவிர்த்திருக்க வேண்டும்.

குளறுபடிகள் இல்லாமல் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தற்போது ஊரக பஞ்சாயத்துக்கு மட்டும் தேர்தல் நடக்கவிருக்கிறது. எனினும், ஒட்டுமொத்தமாக தேர்தலை நடத்த வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

கோவையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுப்பது தேவை இல்லாத ஒன்று. மழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்து உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்களின் குடும்பத்திற்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும்.

திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

இதுபோன்ற சூழ்நிலையில் இருக்கின்ற மழைக்காலங்களில் பாதிக்கக்கூடிய ஏழை, எளிய மக்கள் வசிக்கின்ற இடங்களை அரசு கண்காணித்து எதிர்காலத்தில் இது போன்று நடக்காதவாறு உதவி செய்ய வேண்டும். உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்குவோம். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் வந்தவுடன் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்'' என்றார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், '' நாடாளுமன்றத்தில் மற்ற உறுப்பினர்கள் வெங்காயம் தட்டுப்பாடு குறித்து நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் நான் வெங்காயம் சாப்பிடவில்லை எனக்கூறியது வேடிக்கையாக உள்ளது. அதில் சாதி, மதம் ஆகியவை புகுத்தி விமர்சனம் செய்ய விரும்பவில்லை.

மத்திய அமைச்சராக இருப்பவர் என்ன சாப்பிடுகிறார் என்பது முக்கியமில்லை; மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதே முக்கியம். அதற்கு தகுந்த பதிலை அவர் கூறியிருக்க வேண்டும். ஆனால், அவர் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு கூறிவிட்டார். அவர் இதுபோல பொறுப்பற்றத்தனமாக பேசியதை தவிர்த்திருக்க வேண்டும்.

குளறுபடிகள் இல்லாமல் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தற்போது ஊரக பஞ்சாயத்துக்கு மட்டும் தேர்தல் நடக்கவிருக்கிறது. எனினும், ஒட்டுமொத்தமாக தேர்தலை நடத்த வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

கோவையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுப்பது தேவை இல்லாத ஒன்று. மழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்து உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்களின் குடும்பத்திற்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும்.

திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

இதுபோன்ற சூழ்நிலையில் இருக்கின்ற மழைக்காலங்களில் பாதிக்கக்கூடிய ஏழை, எளிய மக்கள் வசிக்கின்ற இடங்களை அரசு கண்காணித்து எதிர்காலத்தில் இது போன்று நடக்காதவாறு உதவி செய்ய வேண்டும். உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்குவோம். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் வந்தவுடன் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்'' என்றார்.

Intro:திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் சென்னை விமானநிலையத்தில் பேட்டிBody:திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் சென்னை விமானநிலையத்தில் பேட்டி

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நான் வெங்காயம் சாப்பிட வில்லை என நாடாளுமன்றத்தில் கூறியதற்கு

நாடாளுமன்றத்தில் எம்பிகள் வெங்காயம் விலையை குறித்து கேள்வி எழுப்பிய போது அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் நான் வெங்காயம் சாப்பிடவில்லை எனக்கூறியது வேடிக்கையாக உள்ளது.அதில் சாதி,மதம் ஆகியவை புகுத்தி விமர்சனம் செய்ய விரும்பவில்லை.

மத்திய அமைச்சராக இருப்பவர் என்ன சாப்பிடுகிறார் என்பது முக்கியமில்லை. மக்கள் என்ன சாப்பிடுகிறார் என்பதற்குத் தான் தான் பதில் சொல்ல வேண்டும். மத்திய அமைச்சர் கூறிய பதில் தவிர்த்திருக்க வேண்டும். அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டார் அவர் பொறுப்பாக பேசவேண்டும் என தெரிவித்தார்.

புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கருத்து குறித்து கேட்டதற்கு

குளறுபடிகள் இல்லாமல் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தற்பொழுது ஊரக பஞ்சாயத்துக்கு மட்டும் தேர்தல் நடக்க இருக்கிறது. இது தவிர்த்து ஒட்டுமொத்தமாக தேர்தல் நடத்த வேண்டும் என்பது என்னுடைய அபிப்ராயம் என தெரிவித்தார்.


பாஜக மாநில துணைத் தலைவர் அரசகுமார் அதிமுகவில் இணைந்துள்ளார் இதைப் பற்றி கேட்டதற்கு

அவர் ஏற்கனவே மாவட்ட இலக்கிய அணி செயலாளராக திமுகவிலிருந்து உள்ளார். மீண்டும் கூட்டணி கட்சியான திமுகவில் இணைந்ததை வரவேற்கிறேன் என தெரிவித்தார்

கோவையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுப்பது தேவை இல்லாத ஒன்று. மழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்து உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்களின் குடும்பத்திற்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில் இருக்கின்ற மழைக்காலங்களில் பாதிக்கக்கூடிய ஏழை எளிய மக்கள் வசிக்கின்ற இடங்களை அரசு கண்காணித்து எதிர்காலத்தில் இது போன்ற நடக்காதவாறு உதவி செய்ய வேண்டும் என தெரிவித்தார்

உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் தொடங்குவோம். மாநிலத் தலைவர் வந்தவுடன் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தார்





Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.