ETV Bharat / state

'இந்தியா முதல் இடத்திற்கு வர வேண்டும்' - செஸ் வீராங்கனை சிகப்பி

author img

By

Published : Aug 8, 2022, 5:55 PM IST

இந்தியா முதல் இடத்திற்கு வர வேண்டும் என்று ஹாங்காங் செஸ் வீராங்கனையும் இந்திய வம்சாவளியுமான சிகப்பி தெரிவித்துள்ளார்.

செஸ் வீராங்கனை சிகப்பி
செஸ் வீராங்கனை சிகப்பி

சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய சார்பில் 30 வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இவர்கள் மட்டுமின்றி இந்திய வம்சாவளியான அம்மா மற்றும் மகன் ஹாங்காங் அணிக்காக ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்று உள்ளனர். இந்தியப் பெண் சிகப்பி மற்றும் அவரது மகன் தண்ணீர்மலை தற்போது ஹாங்காங்கிற்கான ஒலிம்பியாட் போட்டியில் விளையாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி சிகப்பியின் கணவர் பி.ஆர்.கண்ணப்பன் ஹாங்காங் செஸ் கூட்டமைப்பின் பொருளாளராக உள்ளார்.

செஸ் வீராங்கனை சிகப்பி

இந்த நிலையில் இன்றைய போட்டி முடிந்தவுடன் குடும்பத்துடன் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது முதலில் பேசிய சிகப்பி, "பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரை தான். எட்டு வயது முதல் செஸ் விளையாடி வருகிறேன். 2005 குடும்பத்துடன் ஹாங்காங் சென்றுவிட்டேன். 2006 முதல் அங்கு விளையாட தொடங்கினேன். அங்கு பெண்கள் அணி என தனியாக இல்லை, 2016 ஆம் ஆண்டு பெண்கள் அணி உருவாக்கினோம்.

நம்ம ஊரில் விளையாடுவது பெருமையாக உள்ளது. ஹாங்காங் - கில் கரோனா காரணமாக அதிகளவில் கட்டுப்பாடு உள்ளது. மீண்டும் ஹாங்காங் சென்றாலும் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு வீட்டிற்கு செல்ல முடியும். இந்தியாவிற்கு வர வேண்டும் என்று நீண்ட நாளாக ஆசை இருந்தது. ஆனால் இதுபோன்று விளையாட வரவேண்டும் என்று இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி மிகவும் அருமையாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சிறு வயதில் தேசிய அளவிலான இறுதி போட்டியில் விளையாடினேன். ஆனால் தோற்று இருப்பினும் என்னுடைய செய்தி அனைத்து இடங்களுக்கும் சென்று விட்டது. அதற்குப் பிறகு என்னுடைய பயிற்சியாளர்கள் எனக்கு அதிக அளவில் பயிற்சிகளை வழங்கினார்கள். 14 வயதுக்குப் பிறகு பெரிதாக விளையாடவில்லை அதன் பிறகு கல்லூரியில் ஒரே ஒரு முறை மட்டும் விளையாடினேன்.

பிரக்ஞானந்தா, குகேஷ் விளையாடும் வீடியோவை நாங்கள் தவறவிட்டதே இல்லை. தமிழக வீரர்கள் தான் இன்ஸ்பிரேஷன் (inspiration) . இந்தியா முதல் இடத்திற்கு வரவேண்டும் என்று தினமும் பிராத்திக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தண்ணீர்மலை, "சிறுவயது முதல் விளையாடி வருகிறேன். மூன்று நபர்களை நான் தொடர்ந்து பின்பற்றி வருகிறேன். அதில் பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் விளையாடுவதை தொடர்ந்து பின்பற்றி வருகிறேன். அவர்கள் தான் என்னுடைய பிடித்த வீரர்களாகவும் இருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆக.17 ஆம் தேதி துணை வேந்தர்கள் மாநாடு: அமைச்சர் பொன்முடி

சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய சார்பில் 30 வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இவர்கள் மட்டுமின்றி இந்திய வம்சாவளியான அம்மா மற்றும் மகன் ஹாங்காங் அணிக்காக ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்று உள்ளனர். இந்தியப் பெண் சிகப்பி மற்றும் அவரது மகன் தண்ணீர்மலை தற்போது ஹாங்காங்கிற்கான ஒலிம்பியாட் போட்டியில் விளையாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி சிகப்பியின் கணவர் பி.ஆர்.கண்ணப்பன் ஹாங்காங் செஸ் கூட்டமைப்பின் பொருளாளராக உள்ளார்.

செஸ் வீராங்கனை சிகப்பி

இந்த நிலையில் இன்றைய போட்டி முடிந்தவுடன் குடும்பத்துடன் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது முதலில் பேசிய சிகப்பி, "பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரை தான். எட்டு வயது முதல் செஸ் விளையாடி வருகிறேன். 2005 குடும்பத்துடன் ஹாங்காங் சென்றுவிட்டேன். 2006 முதல் அங்கு விளையாட தொடங்கினேன். அங்கு பெண்கள் அணி என தனியாக இல்லை, 2016 ஆம் ஆண்டு பெண்கள் அணி உருவாக்கினோம்.

நம்ம ஊரில் விளையாடுவது பெருமையாக உள்ளது. ஹாங்காங் - கில் கரோனா காரணமாக அதிகளவில் கட்டுப்பாடு உள்ளது. மீண்டும் ஹாங்காங் சென்றாலும் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு வீட்டிற்கு செல்ல முடியும். இந்தியாவிற்கு வர வேண்டும் என்று நீண்ட நாளாக ஆசை இருந்தது. ஆனால் இதுபோன்று விளையாட வரவேண்டும் என்று இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி மிகவும் அருமையாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சிறு வயதில் தேசிய அளவிலான இறுதி போட்டியில் விளையாடினேன். ஆனால் தோற்று இருப்பினும் என்னுடைய செய்தி அனைத்து இடங்களுக்கும் சென்று விட்டது. அதற்குப் பிறகு என்னுடைய பயிற்சியாளர்கள் எனக்கு அதிக அளவில் பயிற்சிகளை வழங்கினார்கள். 14 வயதுக்குப் பிறகு பெரிதாக விளையாடவில்லை அதன் பிறகு கல்லூரியில் ஒரே ஒரு முறை மட்டும் விளையாடினேன்.

பிரக்ஞானந்தா, குகேஷ் விளையாடும் வீடியோவை நாங்கள் தவறவிட்டதே இல்லை. தமிழக வீரர்கள் தான் இன்ஸ்பிரேஷன் (inspiration) . இந்தியா முதல் இடத்திற்கு வரவேண்டும் என்று தினமும் பிராத்திக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தண்ணீர்மலை, "சிறுவயது முதல் விளையாடி வருகிறேன். மூன்று நபர்களை நான் தொடர்ந்து பின்பற்றி வருகிறேன். அதில் பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் விளையாடுவதை தொடர்ந்து பின்பற்றி வருகிறேன். அவர்கள் தான் என்னுடைய பிடித்த வீரர்களாகவும் இருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆக.17 ஆம் தேதி துணை வேந்தர்கள் மாநாடு: அமைச்சர் பொன்முடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.