ETV Bharat / state

மாமியார் கொடுமை: 4 மாத கர்ப்பிணி தற்கொலை

சென்னையில் மாமியார் கொடுமையால் 4 மாத கர்ப்பிணி தற்கொலையால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Jul 25, 2022, 10:11 AM IST

திருமணம் ஆன ஐந்தே மாதத்தில் மாமியார் கொடுமையால் 4 மாத கர்ப்பிணி ஆடியோ வெளியிட்டு தற்கொலை!
திருமணம் ஆன ஐந்தே மாதத்தில் மாமியார் கொடுமையால் 4 மாத கர்ப்பிணி ஆடியோ வெளியிட்டு தற்கொலை!

சென்னை: வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் இந்துமதி (25), இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் தி.நகரைச் சேர்ந்த குமரன் (37), என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணம் ஆன நாள் முதலே இந்துமதியை அவரது மாமியார் சாந்தி, ராசியில்லாதவள், நீ அதிகம் படிக்கவில்லை, குறைவாக சாப்பிடு என பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருமணம் ஆகி 5 மாதம் மட்டுமே ஆன நிலையில் 4 மாத கர்ப்பிணியாக உள்ள ப இந்துமதி மாமியாரின், தொடர் துன்புறுத்தல் காரணமாக ஒன்றரை மாதத்திற்கு முன்பு வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து இந்துமதியை அழைத்துச் செல்ல கணவர் வராததால் சோகத்தில் இருந்துள்ளார். கணவர் தாய் பேச்சைக் கேட்டுக் கொண்டு நம்மைக் கண்டு கொள்வதில்லையே என்ற விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலையால் உயிரிழந்தார்.

மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது அக்காவிற்கு வாட்ஸ் அப் மூலம் ஆடியோ ஒன்றில் என் சாவுக்கு குமரன் அம்மா தான் காரணம் நானும் பாப்பாவும் செல்கிறோம் என்று ஆடியோ மெசேஜை அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்த இந்துமதியின் அக்கா வீட்டிற்குள் வந்து பார்ப்பதற்குள் அவர் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார்.

இதையடுத்து தகவலறிந்து வந்த வேளச்சேரி காவல்துறையினர் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து திருமணம் ஆகி 5 மாதமே ஆனதால் கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரை செய்தனர். இந்நிலையில் திருமணமாகி நான்கு மாதமே ஆன பெண் தற்கொலையால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இந்து போல நடித்து இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய இளைஞர் - போலீஸ் வலை!

சென்னை: வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் இந்துமதி (25), இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் தி.நகரைச் சேர்ந்த குமரன் (37), என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணம் ஆன நாள் முதலே இந்துமதியை அவரது மாமியார் சாந்தி, ராசியில்லாதவள், நீ அதிகம் படிக்கவில்லை, குறைவாக சாப்பிடு என பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருமணம் ஆகி 5 மாதம் மட்டுமே ஆன நிலையில் 4 மாத கர்ப்பிணியாக உள்ள ப இந்துமதி மாமியாரின், தொடர் துன்புறுத்தல் காரணமாக ஒன்றரை மாதத்திற்கு முன்பு வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து இந்துமதியை அழைத்துச் செல்ல கணவர் வராததால் சோகத்தில் இருந்துள்ளார். கணவர் தாய் பேச்சைக் கேட்டுக் கொண்டு நம்மைக் கண்டு கொள்வதில்லையே என்ற விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலையால் உயிரிழந்தார்.

மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது அக்காவிற்கு வாட்ஸ் அப் மூலம் ஆடியோ ஒன்றில் என் சாவுக்கு குமரன் அம்மா தான் காரணம் நானும் பாப்பாவும் செல்கிறோம் என்று ஆடியோ மெசேஜை அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்த இந்துமதியின் அக்கா வீட்டிற்குள் வந்து பார்ப்பதற்குள் அவர் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார்.

இதையடுத்து தகவலறிந்து வந்த வேளச்சேரி காவல்துறையினர் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து திருமணம் ஆகி 5 மாதமே ஆனதால் கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரை செய்தனர். இந்நிலையில் திருமணமாகி நான்கு மாதமே ஆன பெண் தற்கொலையால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இந்து போல நடித்து இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய இளைஞர் - போலீஸ் வலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.