ETV Bharat / state

காப்புக்காடுகள் அருகே குவாரிகள் செயல்பட்டால் அவை மூடப்படும்: அமைச்சர் மெய்யநாதன்

காப்புக்காடுகள் அருகே குவாரிகள் செயல்பட்டால் அவை முழுமையாக மூடப்படும், என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வி மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Dec 22, 2022, 5:26 PM IST

காப்புக்காடுகள் அருகே குவாரிகள் செயல்பட்டால் அவை மூடப்படும்: மெய்யநாதன்
காப்புக்காடுகள் அருகே குவாரிகள் செயல்பட்டால் அவை மூடப்படும்: மெய்யநாதன்

சென்னை: தொழில் வர்த்தக சபை எனும் அமைப்பு சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற 'மாசு உமிழ்வற்ற பெருநகருக்கான திட்டமிடல்' எனும் ஒருநாள் கருத்தரங்கை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு பேசிய அமைச்சர், "தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்திற்கு வாங்கப்படும் பேருந்துகளை மின்சார பேருந்துகளாக வாங்குவது சூழ்நிலையைப் பொருத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்வார். கடந்த மாதம் 'தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்' (Climate Change Mission) என்ற திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் எதிர்கால பாதிப்பை தடுப்பதே அரசின் நோக்கம். இதற்கென 500 கோடி ஒதுக்கி இந்த ஆண்டு 73 கோடிக்கு அனுமதி தந்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடற்கரை 1076 கி.மீ. நீளம் கொண்டது, 16 கடற்கரையோர மாவட்டங்களில் 500 கி.மீ., பரப்பளவு அளவிற்கு கடல் அரிப்பு போன்றவற்றைத் தடுப்பதற்காக மண்சார்ந்த பனை, புங்க, வேப்ப மரங்களை நடவு செய்கிறோம். தமிழ்நாட்டில் வனப்பரப்பை 23.8 விழுக்காட்டிலிருந்து 33 விழுக்காடாக உயர்த்த பசுமைத் தமிழகம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காப்புக்காடு, பறவைகள் சரணாலயம், மலைப்பகுதிகளின் அருகில் குவாரிகள் அமைக்கக் கூடாது என சட்டம் இருக்கிறது. இதற்கு முன்பு யாரும் குவாரி அமைத்திருந்தால் அவை முழுவதுமாக மூடப்படும். மேலும் காலநிலை மாற்ற பாதிப்பைத் தடுக்க தமிழ்நாட்டில் அனைத்து துறைகளும் மாற்று அமைச்சர்களின் கூட்டு முயற்சியால் இணைந்து செயல்படுகிறது’’ எனக் கூறினார்.

சென்னை: தொழில் வர்த்தக சபை எனும் அமைப்பு சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற 'மாசு உமிழ்வற்ற பெருநகருக்கான திட்டமிடல்' எனும் ஒருநாள் கருத்தரங்கை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு பேசிய அமைச்சர், "தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்திற்கு வாங்கப்படும் பேருந்துகளை மின்சார பேருந்துகளாக வாங்குவது சூழ்நிலையைப் பொருத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்வார். கடந்த மாதம் 'தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்' (Climate Change Mission) என்ற திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் எதிர்கால பாதிப்பை தடுப்பதே அரசின் நோக்கம். இதற்கென 500 கோடி ஒதுக்கி இந்த ஆண்டு 73 கோடிக்கு அனுமதி தந்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடற்கரை 1076 கி.மீ. நீளம் கொண்டது, 16 கடற்கரையோர மாவட்டங்களில் 500 கி.மீ., பரப்பளவு அளவிற்கு கடல் அரிப்பு போன்றவற்றைத் தடுப்பதற்காக மண்சார்ந்த பனை, புங்க, வேப்ப மரங்களை நடவு செய்கிறோம். தமிழ்நாட்டில் வனப்பரப்பை 23.8 விழுக்காட்டிலிருந்து 33 விழுக்காடாக உயர்த்த பசுமைத் தமிழகம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காப்புக்காடு, பறவைகள் சரணாலயம், மலைப்பகுதிகளின் அருகில் குவாரிகள் அமைக்கக் கூடாது என சட்டம் இருக்கிறது. இதற்கு முன்பு யாரும் குவாரி அமைத்திருந்தால் அவை முழுவதுமாக மூடப்படும். மேலும் காலநிலை மாற்ற பாதிப்பைத் தடுக்க தமிழ்நாட்டில் அனைத்து துறைகளும் மாற்று அமைச்சர்களின் கூட்டு முயற்சியால் இணைந்து செயல்படுகிறது’’ எனக் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.