தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல், மே மாதத்தில் நடக்கலாம் என எதிர்பார்க்ப்படும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையைத் தொடங்கிவிட்டன. அந்த வகையில், தேசிய கட்சியான பாஜக ஏற்கனவே தேர்தல் பரப்புரையைத் தொடங்கி, பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக சார்பில் இளைஞரணி மாநாடு வரும் பிப்ரவரி ஆறாம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ளது. இதில், பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ்.பி செல்வம் தலைமை தாங்குகிறார்.
சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அமைச்சர்களின் பார்வை தமிழ்நாடு நோக்கி திரும்பியுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!