ETV Bharat / state

துளசியாப்பட்டினத்தில் ஒளவையாருக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

author img

By

Published : May 4, 2022, 8:04 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை முக்கிய அறிவிப்புகளை அத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்.

அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(மே4) இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய அறிவிப்புகளை அத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். அவை பின்வருமாறு,

  1. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் துளசியாப்பட்டினம் கிராமம் ஔவையார் விஸ்வநாத சுவாமி திருக்கோயிலில் தமிழ் மூதாட்டி ஔவையாருக்கு ஒரு கோடி செலவில் மணிமண்டபம் அமைத்து அவரது பாடல்கள் கல்வெட்டாக பதிக்கப்படும்.
  2. நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கனவே ஐந்து திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது. இத்திட்டமானது தற்போது தெளிவுபடுத்தப்பட்டு ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மற்றும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
  3. 11 திருக்கோயில்களில் 100 கோடி மதிப்பீட்டில் அன்னதானக் கூடங்கள் கட்டப்படும். 10 திருக்கோயில்களில் அன்னதான திட்டம் புதிதாக தொடங்கப்படும். மேலும் திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் தற்போது வழங்கப்பட்டு வரும் அன்னதான திட்டத்தை விரிவுபடுத்தி முக்கிய திருவிழா நாள்களில் நாளொன்றுக்கு 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
  4. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத்திற்கு பாதயாத்திரை வருகை தரும் பக்தர்களுக்கு வழித்தடங்களில் திருக்கோயில் சார்பில் அந்த நாள்களில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
  5. அதிக அளவில் பக்தர்கள் வருகை புரியும் திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மேலும் ஐந்து திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் புதிதாக அமைக்கப்படும்.
  6. 121 திருக்கோயில்களில் பராமரிக்கப்பட்டு வரும் பசு மடங்கள் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  7. திருக்கோயில்களுக்கு தானமாக வழங்கப்படுகின்ற கால்நடைகளைப் பராமரிக்க நவீன வசதிகளுடன் கூடிய பசு மடம் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டம் கோயில் பதாகை அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 25 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் புதிதாக ஏற்படுத்தப்படும் இதற்கென ரூபாய் 20 கோடி செலவிடப்படும்.
  8. திருச்சி மாவட்டம் திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் ரூபாய் 2.50 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பசு மடம் அமைக்கப்படும்.
  9. திருக்கோயில்களில் பராமரிக்கப்படும் யானைகளுக்கான குளியல் தொட்டிகள் திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் எட்டு திருக்கோயில்களில் புதிதாக குளியல் தொட்டிகள் ரூபாய் 1 கோடி செலவில் அமைக்கப்படும். திருக்கோயில்களில் இறைப்பணியில் ஈடுபட்டு இறைவனடி சேர்ந்த யானைகளுக்கு மணிமண்டபம் கட்டப்படும்.
  10. சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் திருக்கோயில் உள்பட 19 கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் மற்றும் அலுவலகக் கட்டடங்கள் ரூ. 4 கோடி மதிப்பில் கட்டப்படும்.
  11. திருக்கோயில்களில் அன்னை தமிழில் வழிபாடு செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு கட்டண சீட்டுகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்கான கட்டணத்திலிருந்து 60% அர்ச்சகருக்கு பங்குத் தொகையாக வழங்கப்படும்.
  12. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா கடந்த ஆண்டு நடத்தப்பட்டது போல் இந்த ஆண்டு 5 சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா நடத்தப்படும்.
  13. சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் அமைக்கப்படும்.
  14. திருக்கோயில்களில் உள்ள இறை பணியில் ஈடுபட்டு இறைவனடி சேர்ந்த திருக்கோயில் யானைகளை சிறப்பிக்கும் வகையில் முதற்கட்டமாக 10 திருக்கோயில்களில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்.
  15. திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ரூ. 4 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித்தேர் உருவாக்கப்படும்.
  16. திருக்கோயில்களில் பணியாற்றிவரும் அர்ச்சகர், பூசாரி, பட்டாச்சாரியார் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் குறைதீர்ப்பு கூட்டம் ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும்.
  17. ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் இருந்து காசி அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோயிலுக்கு இவ்வாண்டில் 200 நபர்கள் ஆன்மீகப்பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவுத்தொகை ரூபாய் 50 லட்சத்தை அரசு ஏற்கும்.
  18. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் மேலும் இத்திருக்கோயில் திருப்பணிக்கான பணிகள் தொடங்கப்படும்.
  19. 1500 கோயில்களில் ரூ. 1000 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
  20. 1000 கோயில்களில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இதையும் படிங்க: ராமானுஜரின் 1005ஆவது அவதார பிரம்மோற்சவம்: களைகட்டிய ஸ்ரீபெரும்புதூர் தேரோட்டம்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(மே4) இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய அறிவிப்புகளை அத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். அவை பின்வருமாறு,

  1. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் துளசியாப்பட்டினம் கிராமம் ஔவையார் விஸ்வநாத சுவாமி திருக்கோயிலில் தமிழ் மூதாட்டி ஔவையாருக்கு ஒரு கோடி செலவில் மணிமண்டபம் அமைத்து அவரது பாடல்கள் கல்வெட்டாக பதிக்கப்படும்.
  2. நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கனவே ஐந்து திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது. இத்திட்டமானது தற்போது தெளிவுபடுத்தப்பட்டு ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மற்றும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
  3. 11 திருக்கோயில்களில் 100 கோடி மதிப்பீட்டில் அன்னதானக் கூடங்கள் கட்டப்படும். 10 திருக்கோயில்களில் அன்னதான திட்டம் புதிதாக தொடங்கப்படும். மேலும் திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் தற்போது வழங்கப்பட்டு வரும் அன்னதான திட்டத்தை விரிவுபடுத்தி முக்கிய திருவிழா நாள்களில் நாளொன்றுக்கு 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
  4. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத்திற்கு பாதயாத்திரை வருகை தரும் பக்தர்களுக்கு வழித்தடங்களில் திருக்கோயில் சார்பில் அந்த நாள்களில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
  5. அதிக அளவில் பக்தர்கள் வருகை புரியும் திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மேலும் ஐந்து திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் புதிதாக அமைக்கப்படும்.
  6. 121 திருக்கோயில்களில் பராமரிக்கப்பட்டு வரும் பசு மடங்கள் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  7. திருக்கோயில்களுக்கு தானமாக வழங்கப்படுகின்ற கால்நடைகளைப் பராமரிக்க நவீன வசதிகளுடன் கூடிய பசு மடம் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டம் கோயில் பதாகை அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 25 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் புதிதாக ஏற்படுத்தப்படும் இதற்கென ரூபாய் 20 கோடி செலவிடப்படும்.
  8. திருச்சி மாவட்டம் திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் ரூபாய் 2.50 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பசு மடம் அமைக்கப்படும்.
  9. திருக்கோயில்களில் பராமரிக்கப்படும் யானைகளுக்கான குளியல் தொட்டிகள் திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் எட்டு திருக்கோயில்களில் புதிதாக குளியல் தொட்டிகள் ரூபாய் 1 கோடி செலவில் அமைக்கப்படும். திருக்கோயில்களில் இறைப்பணியில் ஈடுபட்டு இறைவனடி சேர்ந்த யானைகளுக்கு மணிமண்டபம் கட்டப்படும்.
  10. சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் திருக்கோயில் உள்பட 19 கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் மற்றும் அலுவலகக் கட்டடங்கள் ரூ. 4 கோடி மதிப்பில் கட்டப்படும்.
  11. திருக்கோயில்களில் அன்னை தமிழில் வழிபாடு செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு கட்டண சீட்டுகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்கான கட்டணத்திலிருந்து 60% அர்ச்சகருக்கு பங்குத் தொகையாக வழங்கப்படும்.
  12. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா கடந்த ஆண்டு நடத்தப்பட்டது போல் இந்த ஆண்டு 5 சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா நடத்தப்படும்.
  13. சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் அமைக்கப்படும்.
  14. திருக்கோயில்களில் உள்ள இறை பணியில் ஈடுபட்டு இறைவனடி சேர்ந்த திருக்கோயில் யானைகளை சிறப்பிக்கும் வகையில் முதற்கட்டமாக 10 திருக்கோயில்களில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்.
  15. திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ரூ. 4 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித்தேர் உருவாக்கப்படும்.
  16. திருக்கோயில்களில் பணியாற்றிவரும் அர்ச்சகர், பூசாரி, பட்டாச்சாரியார் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் குறைதீர்ப்பு கூட்டம் ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும்.
  17. ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் இருந்து காசி அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோயிலுக்கு இவ்வாண்டில் 200 நபர்கள் ஆன்மீகப்பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவுத்தொகை ரூபாய் 50 லட்சத்தை அரசு ஏற்கும்.
  18. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் மேலும் இத்திருக்கோயில் திருப்பணிக்கான பணிகள் தொடங்கப்படும்.
  19. 1500 கோயில்களில் ரூ. 1000 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
  20. 1000 கோயில்களில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இதையும் படிங்க: ராமானுஜரின் 1005ஆவது அவதார பிரம்மோற்சவம்: களைகட்டிய ஸ்ரீபெரும்புதூர் தேரோட்டம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.