ETV Bharat / state

தமிழ்நாட்டில் 7 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி.. மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் கடிதம்!

author img

By

Published : Dec 15, 2021, 1:04 PM IST

நைஜீரியாவில் இருந்து சென்னை வந்தவர் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட ஏழு பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ள நிலையில்,அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையருக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

ஒமைக்ரான்
ஒமைக்ரான்

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று (டிச.15) அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டில் இன்னும் டெல்டா வகை மாறுபாடுகள் பரவலாக கண்டறியப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் புதிதாக உருமாறிய கரோனா தொற்று ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது.

மூன்று நாட்களுக்கு முன் நைஜீரியாவில் இருந்து சென்னை திரும்பியவர் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட ஏழு பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், ஒமைக்ரான் முதற்கட்ட பரிசோதனையான டேக் பாத் சோதனையில் எஸ்-வகை (S வகை) மரபணு மாற்றம் கண்டறியப்பட்டு அவர்களது மாதிரிகள் சந்தேகத்திற்குரிய மாதிரிகளாகப் பதிவு செய்யப்பட்டு பெங்களூரு மரபணு பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தயார் நிலையில் படுக்கைகள்

இந்நிலையில் அனைத்து மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் தடுப்பூசி செலுத்தத் தவறிய மற்றும் குறித்த காலத்திற்குள்ளாக இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். மருத்துவமனையில் படுக்கைகள், ஆக்ஸிஜன் படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், மருந்துகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தற்போது பெரும்பாலான மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில் படுக்கைகள் காலியாக உள்ளன. அவை அனைத்தையும் புதுப்பித்து மீண்டும் வார்டுகளை முன்னெச்சரிக்கையுடன் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

கிளஸ்டர் கண்டறியப்பட்ட இடங்களில் அதிக கவனம்

மேலும், "பொது மற்றும் உள்ளரங்குகளில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதையும், தடுப்பூசி செலுத்தி இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கிளஸ்டர் கண்டறியப்பட்ட இடங்கள் மற்றும் அதிக நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட இடங்களில் நோயாளி தொடர்பு தொற்றாளர்கள் உடனடியாக கண்டறிவதுடன் மாதிரிகளை சேகரித்து தேவைப்படும் இடங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

புதிய வகை உருமாறிய கரோனா தொற்றா என்பதை கண்டறியவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விமான நிலையங்களில் அரசு வழிகாட்டுதல்படி பயணிகள் முறையாக கண்காணிக்கப் பட வேண்டும். தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட வேண்டும்" என்று கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: ’கரோனாவுக்கு முடிவு எப்போது?’; வைராலஜிஸ்ட் ஜேக்கப் ஜான் பேட்டி!

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று (டிச.15) அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டில் இன்னும் டெல்டா வகை மாறுபாடுகள் பரவலாக கண்டறியப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் புதிதாக உருமாறிய கரோனா தொற்று ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது.

மூன்று நாட்களுக்கு முன் நைஜீரியாவில் இருந்து சென்னை திரும்பியவர் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட ஏழு பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், ஒமைக்ரான் முதற்கட்ட பரிசோதனையான டேக் பாத் சோதனையில் எஸ்-வகை (S வகை) மரபணு மாற்றம் கண்டறியப்பட்டு அவர்களது மாதிரிகள் சந்தேகத்திற்குரிய மாதிரிகளாகப் பதிவு செய்யப்பட்டு பெங்களூரு மரபணு பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தயார் நிலையில் படுக்கைகள்

இந்நிலையில் அனைத்து மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் தடுப்பூசி செலுத்தத் தவறிய மற்றும் குறித்த காலத்திற்குள்ளாக இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். மருத்துவமனையில் படுக்கைகள், ஆக்ஸிஜன் படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், மருந்துகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தற்போது பெரும்பாலான மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில் படுக்கைகள் காலியாக உள்ளன. அவை அனைத்தையும் புதுப்பித்து மீண்டும் வார்டுகளை முன்னெச்சரிக்கையுடன் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

கிளஸ்டர் கண்டறியப்பட்ட இடங்களில் அதிக கவனம்

மேலும், "பொது மற்றும் உள்ளரங்குகளில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதையும், தடுப்பூசி செலுத்தி இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கிளஸ்டர் கண்டறியப்பட்ட இடங்கள் மற்றும் அதிக நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட இடங்களில் நோயாளி தொடர்பு தொற்றாளர்கள் உடனடியாக கண்டறிவதுடன் மாதிரிகளை சேகரித்து தேவைப்படும் இடங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

புதிய வகை உருமாறிய கரோனா தொற்றா என்பதை கண்டறியவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விமான நிலையங்களில் அரசு வழிகாட்டுதல்படி பயணிகள் முறையாக கண்காணிக்கப் பட வேண்டும். தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட வேண்டும்" என்று கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: ’கரோனாவுக்கு முடிவு எப்போது?’; வைராலஜிஸ்ட் ஜேக்கப் ஜான் பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.