ETV Bharat / state

அரசு மருத்துவமனை நோயாளிகளின் விவரங்கள் இனி இணையதளத்தில் பதிவேற்றம்! - சுகாதாரத்துறை

சென்னை: அரசு மருத்துவமனைகளுக்கு வருகை புரியும் நோயாளிகளின் விபரங்களை கம்ப்யூட்டர் மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் நடைமுறை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

அரசு மருத்துவமனை நோயாளிகளின் விவரங்கள் இனி இணையதளத்தில் பதிவேற்றம்!
அரசு மருத்துவமனை நோயாளிகளின் விவரங்கள் இனி இணையதளத்தில் பதிவேற்றம்!
author img

By

Published : Nov 29, 2019, 11:21 PM IST

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வரும் புறநோயாளிகளின் விபரங்கள் சுகாதார தகவல் மேலாண்மை திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. இதற்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு பதிவு எண்ணுடன் புற நோயாளி சீட்டு வழங்கப்படுகிறது.

அதனைப் பெற்றுக் கொள்ளும் புறநோயாளிகள், அவர்கள் நோய் சம்பந்தப்பட்ட மருத்துவரை சந்திக்கின்றனர். அவரை பரிசோதனை செய்யும் மருத்துவரும் பரிசோதிக்கிறார். இதில் நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்காக தேவைப்படும் ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனை குறித்தும், தேவைப்படும் எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்டவை குறித்தும் அந்த நோயாளியின் பதிவு எண் அடங்கிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து நோயாளி, ஆய்வகங்களுக்கு அங்கு செய்யப்படும் பரிசோதனை முடிவுகளையும் நோயாளியின் பதிவு எண் கொண்ட இணையதள பக்கத்தில் மீண்டும் பதிவிடுகிறார் ஆய்வாளர்.

அரசு மருத்துவமனை நோயாளிகளின் விவரங்கள் இனி இணையதளத்தில் பதிவேற்றம்!

இதன் மூலம் முதல்நாள் வரும் நோயாளி மறுநாள் வரும்போது புறநோயாளிகள் பிரிவில் சென்று அந்த நோயாளியின் விபவரத்தை பெற்று வர தேவையில்லை. நோயாளியின் எண்ணைக் கொண்டே மருத்துவரை பார்க்கலாம், மீண்டும் வரும் மருத்துவ விபரங்களையும் குறிப்பிடலாம். அதுமட்டுமின்றி நோயாளிக்கு தேவையான மருந்துகளை பெற மருந்தகத்திற்கு நோயாளி சீட்டுடன் சென்றால் மருந்துகள் வழங்கப்படும். இந்த முறையினால் ஒரு நோயாளிக்கு பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் அது குறித்து முழு விபரமும் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

இந்த திட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பதியப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு நோயாளிகள், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டம் குறித்து தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை சார்பாக தெரிவிக்கையில், வருங்கால பயன்பாட்டிற்காகவும், ஆராய்ச்சிகளுக்காகவும் இந்த தகவல்கள் சேமிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க... கீழடி ஆய்வுக்குக் காமராசர் பல்கலை. 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு: துணைவேந்தர் தகவல்!

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வரும் புறநோயாளிகளின் விபரங்கள் சுகாதார தகவல் மேலாண்மை திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. இதற்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு பதிவு எண்ணுடன் புற நோயாளி சீட்டு வழங்கப்படுகிறது.

அதனைப் பெற்றுக் கொள்ளும் புறநோயாளிகள், அவர்கள் நோய் சம்பந்தப்பட்ட மருத்துவரை சந்திக்கின்றனர். அவரை பரிசோதனை செய்யும் மருத்துவரும் பரிசோதிக்கிறார். இதில் நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்காக தேவைப்படும் ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனை குறித்தும், தேவைப்படும் எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்டவை குறித்தும் அந்த நோயாளியின் பதிவு எண் அடங்கிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து நோயாளி, ஆய்வகங்களுக்கு அங்கு செய்யப்படும் பரிசோதனை முடிவுகளையும் நோயாளியின் பதிவு எண் கொண்ட இணையதள பக்கத்தில் மீண்டும் பதிவிடுகிறார் ஆய்வாளர்.

அரசு மருத்துவமனை நோயாளிகளின் விவரங்கள் இனி இணையதளத்தில் பதிவேற்றம்!

இதன் மூலம் முதல்நாள் வரும் நோயாளி மறுநாள் வரும்போது புறநோயாளிகள் பிரிவில் சென்று அந்த நோயாளியின் விபவரத்தை பெற்று வர தேவையில்லை. நோயாளியின் எண்ணைக் கொண்டே மருத்துவரை பார்க்கலாம், மீண்டும் வரும் மருத்துவ விபரங்களையும் குறிப்பிடலாம். அதுமட்டுமின்றி நோயாளிக்கு தேவையான மருந்துகளை பெற மருந்தகத்திற்கு நோயாளி சீட்டுடன் சென்றால் மருந்துகள் வழங்கப்படும். இந்த முறையினால் ஒரு நோயாளிக்கு பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் அது குறித்து முழு விபரமும் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

இந்த திட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பதியப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு நோயாளிகள், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டம் குறித்து தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை சார்பாக தெரிவிக்கையில், வருங்கால பயன்பாட்டிற்காகவும், ஆராய்ச்சிகளுக்காகவும் இந்த தகவல்கள் சேமிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க... கீழடி ஆய்வுக்குக் காமராசர் பல்கலை. 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு: துணைவேந்தர் தகவல்!

Intro:அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின்
விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்


Body:அரசு மருத்துவமனைகளில்நோயாளிகளின்
விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்

சென்னை,

அரசு மருத்துவமனைகளுக்கு வருகை புரியும் நோயாளியின் விபரங்களை கம்ப்யூட்டர் மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் நடைமுறை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு புறநோயாளிகளின் விபரங்கள் சுகாதார தகவல் மேலாண்மை திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. இதற்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு பதிவு எண்ணுடன் புற நோயாளி சீட்டு வழங்கப்படுகிறது.
அதனைப் பெற்றுக் கொண்ட புற நோயாளி குறிப்பிட்ட துறையில் மருத்துவரை சந்திக்கிறார். அவரை மருத்துவர் பரிசோதனை செய்கிறார். அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தேவைப்படும் ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனை குறித்தும், தேவைப்படும் எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்டவை குறித்தும் அந்த நோயாளியின் பதிவு எண் அடங்கிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறார்.

அதனைத் தொடர்ந்து நோயாளி ஆய்வாளர்களுக்கு சென்றவுடன் ரத்தம், சிறுநீர் உள்ளிட்டவை பெறப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனையின் முடிவுகளை மார்பகத்தில் உள்ள பணியாளர் அந்த நோயாளியின் பதிவு எண் கொண்ட இணையதள பக்கத்தில் மீண்டும் பதிவிடுகிறார்.

முதல்நாள் புறநோயாளிகள் பிரிவு வந்த அந்த நோயாளி மறுநாள் வரும்போது புறநோயாளிகள் பிரிவில் சென்று ஒரு நோயாளிக்கு பெற்று வர வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே பெற்ற புற நோயாளி சீட்டுடன் அந்தப் பிரிவிற்குச் சென்று தனது சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

மருத்துவர் புற நோயாளியின் பதிவு எண்ணை பதிவு செய்து பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொண்டு அவருக்கு சிகிச்சை அளிப்பார்.

மேலும் அவருக்கு அளிக்க வேண்டிய மாற்றங்கள் குறித்தும் அறிந்து வைத்திருக்கும் ஒரு நோயாளியின் பதிவின் அடங்கிய பக்கத்தில் பதிவேற்றம் செய்து விடுவார். நோயாளி மருந்தகத்திற்கு சென்று அவர் கூறிய ஒரு நோயாளி சீட்டினை அளித்தவுடன் மருந்தகத்தில் அவருக்கு உரிய மருந்துகள் அளிக்கப் படும்.

இந்த முறையினால் ஒரு நோயாளிக்கு பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் அது குறித்து முழு விபரமும் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சுகாதார மேலாண்மை திட்டத்தின் கீழ் புற நோயாளிகளுக்கு பதிவு எண் அளிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் பலராமன் கூறும்போது, நோய்களின் விபரங்கள் முழுவதும் பதிவேற்றம் செய்யப் படுவதால் அவர் எப்போது சிகிச்சைக்கு வந்தாலும் ஏற்கனவே அளிக்கப்பட்ட சிகிச்சை எளிதாக கண்டறிய முடியும்.
இதனால் பல்வேறு துறையில் சிகிச்சை பெற்று இருந்தாலும் அவருக்கு எளிதில் புரிந்து கொண்டு சிகிச்சை அளிக்க முடியும். தற்பொழுது புறநோயாளிகளுக்கும் மட்டும் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த பதிவு முறையினை மேலும் மேம்படுத்தி உள் நோயாளிகளுக்கு செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

இது குறித்து மக்கள் நல்வாழ்வை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் கீழ் தற்போது புற நோயாளிகளின் வருகைப் பதிவு மற்றும் சிகிச்சைகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதனை தகவல் தொழில்நுட்ப பிரிவு உடன் இணைந்து மேம்படுத்தி உள் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.