ETV Bharat / state

மளிகை கடைகளில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை - மூவர் கைது!

author img

By

Published : Nov 6, 2020, 5:23 PM IST

சென்னை: தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கிவைத்து மளிகை கடைகளில் விற்பனை செய்து வந்த மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

gutka-tobacco-seized-in-chennai
gutka-tobacco-seized-in-chennai

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், அண்ணாநகர் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் பிரசாந்த் (35). இவர் தனது வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதோடு, சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மளிகை கடைகளுக்கு விநியோகம் செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து, சங்கர் நகர காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் பொழிச்சலூர் நேரு நகரில் மளிகை கடை நடத்தி வரும் செல்வராஜ் (34), ராம பாண்டியன் (61) என்பவரின் கடையை சோதனையிட்டதில் கடையில் 5 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மளிகை கடைகளில் குட்கா,புகையிலை பொருட்கள் விற்பனை
மளிகை கடைகளில் குட்கா,புகையிலை பொருட்கள் விற்பனை

அதனடிப்படையில் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் பிரசாந்திடம் இருந்து புகையிலை பொருட்களை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் பிரசாந்த் வீட்டில் சோதனை செய்து சுமார் 120 கிலோ அளவிலான குட்கா, எம்டிஎம் பாக்கு, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்து விசாரணை பேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: நீரில் மூழ்கி மாணவர்கள் உயிரிழப்பு: பவானிசாகர் எம்எல்ஏ நிதியுதவி!

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், அண்ணாநகர் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் பிரசாந்த் (35). இவர் தனது வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதோடு, சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மளிகை கடைகளுக்கு விநியோகம் செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து, சங்கர் நகர காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் பொழிச்சலூர் நேரு நகரில் மளிகை கடை நடத்தி வரும் செல்வராஜ் (34), ராம பாண்டியன் (61) என்பவரின் கடையை சோதனையிட்டதில் கடையில் 5 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மளிகை கடைகளில் குட்கா,புகையிலை பொருட்கள் விற்பனை
மளிகை கடைகளில் குட்கா,புகையிலை பொருட்கள் விற்பனை

அதனடிப்படையில் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் பிரசாந்திடம் இருந்து புகையிலை பொருட்களை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் பிரசாந்த் வீட்டில் சோதனை செய்து சுமார் 120 கிலோ அளவிலான குட்கா, எம்டிஎம் பாக்கு, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்து விசாரணை பேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: நீரில் மூழ்கி மாணவர்கள் உயிரிழப்பு: பவானிசாகர் எம்எல்ஏ நிதியுதவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.