ETV Bharat / state

குரூப்-4 தேர்வு முறைகேடு: சிபிசிஐடி போலீஸ் புதிய தகவல்

author img

By

Published : Jan 31, 2020, 10:02 AM IST

சென்னை: குரூப்-4 தேர்வில் பிரத்யேக பேனாவினை பயன்படுத்தி தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

குரூப்-4 தேர்வு முறைகேடு பிரத்யேக பேனா உபயோகிப்பு-சிபிசிஐடி
குரூப்-4 தேர்வு முறைகேடு பிரத்யேக பேனா உபயோகிப்பு-சிபிசிஐடி

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிபிசிஐடி காவல் துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில், தற்போதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த முறைகேட்டிற்கு மூளையாக விளங்கியவராகக் கருதப்படும் சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜெயகுமார் தலைமறைவாகியுள்ளார்.

இதனையடுத்து, சிபிசிஐடி டிஎஸ்பி, மதுரவாயல் வட்டாச்சியர் ஜெயராமன் ஆகியோர் கொண்ட குழுவினர், நீதிமன்ற உத்தரவினை பெற்றுக்கொண்டு, முகப்பேரில் உள்ள ஜெயகுமார் இல்லத்திற்குச் சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டப்ட்டிருந்த நிலையில், கதவினை உடைத்து வீட்டின் உள்ளே சென்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 73 ஆயிரத்து 800 ரூபாய் பணம், 45 சவரன் தங்க நகை, லேப் டாப், பென் ட்ரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறிப்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட பிரத்யேக பேனாவையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஜெயகுமார் வீட்டில் ரெய்டு


இதனைத் தொடர்ந்து ஜெயகுமார் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், ஜெயகுமார் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக சென்னை விமான நிலையத்தில் லுக் அவுட் நோட்டிஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெண் குழந்தைக்கு தாயானார் 90ஸ் ஹீரோயின்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிபிசிஐடி காவல் துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில், தற்போதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த முறைகேட்டிற்கு மூளையாக விளங்கியவராகக் கருதப்படும் சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜெயகுமார் தலைமறைவாகியுள்ளார்.

இதனையடுத்து, சிபிசிஐடி டிஎஸ்பி, மதுரவாயல் வட்டாச்சியர் ஜெயராமன் ஆகியோர் கொண்ட குழுவினர், நீதிமன்ற உத்தரவினை பெற்றுக்கொண்டு, முகப்பேரில் உள்ள ஜெயகுமார் இல்லத்திற்குச் சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டப்ட்டிருந்த நிலையில், கதவினை உடைத்து வீட்டின் உள்ளே சென்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 73 ஆயிரத்து 800 ரூபாய் பணம், 45 சவரன் தங்க நகை, லேப் டாப், பென் ட்ரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறிப்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட பிரத்யேக பேனாவையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஜெயகுமார் வீட்டில் ரெய்டு


இதனைத் தொடர்ந்து ஜெயகுமார் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், ஜெயகுமார் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக சென்னை விமான நிலையத்தில் லுக் அவுட் நோட்டிஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெண் குழந்தைக்கு தாயானார் 90ஸ் ஹீரோயின்

Intro:டிஎன்பிசி தேர்வு முறைகேட்டில் பிரத்யேகமான பேனா பயன்படுத்தப்பட்டுள்ளது என சிபிசிஐடி தகவல்Body:டிஎன்பிசி தேர்வு முறைகேட்டில் பிரத்யேகமான பேனா பயன்படுத்தப்பட்டுள்ளது என சிபிசிஐடி தகவல்


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முறைகேடு தொடர்பாக 14 பேரை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான வழக்கில் சென்னை முகப்பேரைச் சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமார் என்பவர் தலைமறைவாக இருந்து வருகிறார்.இந்த நிலையில் சிபிசிஐடி டிஎஸ்பி மற்றும் மதுரவாயல் வட்டாட்சியர் ஜெயராமன் ஆகியோர் அடங்கிய குழுவினர்
நீதிமன்ற உத்தரவின்படி கதவ உடைத்து உள்ளே சென்றனர். காலை 11 மணி சென்ற
சிபிசிஐடி தொடர்ந்து 11 மணி நேரம் சோதனை செய்து இரவு 10.10 மணிக்கு சோதனை முடித்தனர். இதில் ஜெயகுமார் வீட்டில் 73 ஆயிரத்து 800 ரூபாய் பணம், 45 சவரன் தங்க நகை மற்றும் லேப் டாப்,பென் ட்ரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணக்களை கைப்பற்றினர். குறிப்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்களுக்கு தேர்வு எழுத பிரத்யேகமாக வழங்கப்பட்ட 2 வகையான பேனாக்களை பறிமுதல் செய்துள்ளனர்.இதனை தொடர்ந்து ஜெயகுமார் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் ஜெயகுமார் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க சென்னை விமான நிலையத்தில் லுக் அவுட் நோட்டிசும் ஒட்டப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.