ETV Bharat / state

குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு 42 பேர் மீது சிபிசிஐடியில் புகார்

author img

By

Published : Jan 31, 2020, 1:37 PM IST

சென்னை: குரூப் 2 தேர்விலும் முறைகேட்டின் மூலம் தேர்ச்சிபெற்றதாகச் சந்தேகமடைந்த 42 தேர்வர்களின் பெயர் பட்டியலை சிபிசிஐடியிடம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒப்படைத்துள்ளது.

Group 2A
Group 2A

டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிபிசிஐடி காவல் துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அந்த விசாரணையில், தற்போதுவரை 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலர் ஒருவர் தெரிவிக்கையில், ”குரூப் 2 ஏ தேர்வில் நடைபெற்ற முறைகேடு குறித்து 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் வெற்றிபெற்ற தேர்வர்களின் விடைத்தாள்கள் சோதனை செய்யப்பட்டது.

அந்தச் சோதனையில் 2017ஆம் ஆண்டு குரூப் 2 ஏ தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களில் 42 பேர் ராமேஸ்வரம் தேர்வு மையத்திலிருந்து மட்டுமே தேர்வாகியுள்ளனர். இவர்களின் விடைத்தாள்களை ஆய்வுசெய்ததில் அழியக்கூடிய மை எதுவும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கண்டறிய முடியவில்லை.

குரூப் 2 தேர்வினை எழுதி தற்போது பணியில் உள்ளவர்களின் பட்டியலை சிபிசிஐடியிடம் ஒப்படைத்துள்ளோம். காவல் துறையினர் சந்தேகப்படும் நபர்களை விசாரணைசெய்து முறைகேடு நடைபெற்றதை உறுதிசெய்ய வேண்டும்.

மற்ற மாவட்டங்களில் நடைபெற்ற தேர்வுமையங்களில் குறைந்தளவில் தேர்வர்கள் தேர்ச்சிபெற்றுள்ளனர். ஆனால் ராமேஸ்வரம் தேர்வு மையத்திலிருந்து மட்டும் 42 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே இவர்கள் மீது சிபிசிஐடியில் புகார் அளித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிபிசிஐடி காவல் துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அந்த விசாரணையில், தற்போதுவரை 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலர் ஒருவர் தெரிவிக்கையில், ”குரூப் 2 ஏ தேர்வில் நடைபெற்ற முறைகேடு குறித்து 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் வெற்றிபெற்ற தேர்வர்களின் விடைத்தாள்கள் சோதனை செய்யப்பட்டது.

அந்தச் சோதனையில் 2017ஆம் ஆண்டு குரூப் 2 ஏ தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களில் 42 பேர் ராமேஸ்வரம் தேர்வு மையத்திலிருந்து மட்டுமே தேர்வாகியுள்ளனர். இவர்களின் விடைத்தாள்களை ஆய்வுசெய்ததில் அழியக்கூடிய மை எதுவும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கண்டறிய முடியவில்லை.

குரூப் 2 தேர்வினை எழுதி தற்போது பணியில் உள்ளவர்களின் பட்டியலை சிபிசிஐடியிடம் ஒப்படைத்துள்ளோம். காவல் துறையினர் சந்தேகப்படும் நபர்களை விசாரணைசெய்து முறைகேடு நடைபெற்றதை உறுதிசெய்ய வேண்டும்.

மற்ற மாவட்டங்களில் நடைபெற்ற தேர்வுமையங்களில் குறைந்தளவில் தேர்வர்கள் தேர்ச்சிபெற்றுள்ளனர். ஆனால் ராமேஸ்வரம் தேர்வு மையத்திலிருந்து மட்டும் 42 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே இவர்கள் மீது சிபிசிஐடியில் புகார் அளித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

Intro:குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு
42 பேர் மீது சிபிசிஐடியில் புகார்


Body:சென்னை,



குரூப் 2 நேர்காணல் அல்லாத பதவிகளுக்கு 2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்விலும் முறைகேட்டின் மூலம் தேர்ச்சி பெற்றதாக சந்தேகமடைந்த 42 தேர்வர்களின் பெயர் பட்டியலை சிபிசிஐடியிடம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒப்படைத்துள்ளது.


குரூப்-4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் எழுதியவர்களில் முதல் 100 இடங்களுக்குள் 39 பேர் தேர்வாகினர்.
அந்த தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சிபிசிஐடியில் புகார் அளித்தது.

அந்தப் புகாரினை விசாரிக்க சிபிசிஐடி அதிகாரிகள் அதில் தொடர்புடைய 14 பேரை தற்போது வரை கைது செய்துள்ளனர். சிஐடி அதிகாரிகள் 24 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் 2017 ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று எரிசக்தி துறையில் உதவியாளராக பணிபுரியும் திருகுமரன் (35) தந்தை பெயர் முனுசாமி குரூப்-4 தேர்விற்கு இடைத்தரகராக செயல்பட்டார் எனக் கூறப்பட்டது.

குரூப் 4 தேர்வு முறைகேடு வெளியானபோது குரூப் 2 தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்று இருக்கலாம் என தகவல்கள் பரவியது.

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 ஏ தேர்விலும் தரவரிசை பட்டியலில் 100 இடங்களுக்குள் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர் 37 பேர் இடம் பெற்றுள்ளனர். ஒரு தரவரிசை பட்டியலில் 37-வது நபராக குரூப்-4 முறைகேட்டில் கைதுசெய்யப்பட்ட திருமுருகன் தேர்வாகியுள்ளார். அதேபோல் முதல் 100 இடங்களில் குரூப்-4 தேர்வில் ராமேஸ்வரத்திலிருந்து தேர்வானது போல் இந்த தேர்விலும் முறைகேடுகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு குரூப் குரூப்-2 ஏ தேர்வில் முறைகேடு செய்து வெற்றிபெற்ற திருமுருகன் அதே முறையினை பின்பற்றி குரூப்-4 தேர்வில் முறைகேடு இடைத்தரகராக இருந்துள்ளதாக தெரிகின்றது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகாரி ஒருவர் கூறும்போது, குரூப்-2 ஏ தேர்வில் நடைபெற்ற முறைகேடு குறித்து 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் வெற்றிபெற்ற தேர்வர்களின் விடைத்தாள்கள் சோதனை செய்யப்பட்டது.

அந்த சோதனையில் 2017 ஆம் ஆண்டு குரூப் 2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 42 பேர் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் இருந்து மட்டுமே தேர்வாகியுள்ளனர். இவர்களின் விடைத்தாள்களை ஆய்வு செய்ததில் அழியக்கூடிய மை எதுவும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கண்டறிய முடியவில்லை.

குரூப்-2 தேர்வினை எழுதி தற்போது பணியில் உள்ளவர்களின் பட்டியலை சிபிசிஐடியிடம் ஒப்படைத்து உள்ளோம். காவல்துறையினர் சந்தேகப்படும் நபர்களை விசாரணை செய்து முறைகேடு நடைபெற்றதை உறுதி செய்ய வேண்டும்.
மற்ற மாவட்டங்களில் நடைபெற்ற தேர்வு மையங்களில் குறைந்த அளவில் தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் இருந்து மட்டும் 42 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே இவர்கள் மீது சிபிசிஐடி யில் புகார் அளித்துள்ளோம் என தெரிவித்தார்.






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.