ETV Bharat / state

போக்குவரத்து செலவை மிச்சமாக்க வந்துள்ளது ஸ்மார்ட் பைக் திட்டம்! - சென்னையில் அறிமுகமான ஸ்மார்ட் பைக் திட்டம்

சென்னை: போக்குவரத்தைக் கட்டுப்படுத்த மெட்ரோ தொடர் வண்டியைக் கொண்டு வந்தது போல், தற்போது சுற்றுச்சூழல், உடல்நலனை பாதுகாக்கும் வகையில் ஸ்மார்ட் பைக்குகளை அரசு அறுமுகப்படுத்தியுள்ளது குறித்து சிறு பார்வை இதோ.

Smart Bike
author img

By

Published : Nov 21, 2019, 11:39 PM IST

எப்போதும் பரபரப்புடனே காணப்படும் சென்னை மாநகரவாசிகள், கடும் போக்குவரத்து, கூட்ட நெரிசல் என ஓய்வற்று கிடக்கும் சாலைகளில் குறைந்த தூர பயணத்திற்கும் அதிகப் பணம் செலவு செய்யும் நிலையிலேயே ஒவ்வொரு நாளும் கழிகிறது. இப்படியான சூழலில் ஒரு சைக்கிள் இருந்தால், குறைந்த பட்ஜெட்டிலேயே பயணச் செலவை முடித்துவிடலாம் என யோசிக்காதவர்களே இருக்க மாட்டார்கள்.

ஸ்மார்ட் பைக்

அதுவும் தேவைப்படும் இடத்தில் ஒரு சைக்கிளை எடுத்துச் சென்று, பயன்படுத்தியபின் அதனை மற்றொரு இடத்தில் விட்டுச் செல்லலாம் என்ற வசதி இருந்தால் இன்னும் எப்படி இருக்கும்? தற்போது அதைதான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது அரசு. தலைநகர் டெல்லி, ஹைதராபாதைத் தொடர்ந்து இந்தத் திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஸ்மார்ட் பைக் என்பது கியர் வசதியுடன் கூடிய சைக்கிள்தான். 5000 ஸ்மார்ட் பைக்குகள் இத்திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்மார்ட் பைக்கில் ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாயும், அதற்கு மேல் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் 9 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுதவிர ஒரு நாள் பாஸ் முதல் 3 மாத பாஸ் வரை இதிலுள்ளது.

பரத்

"இன்று நாமெல்லாம் கார், பைக் வைத்திருக்கிறோம், உடல் ஆரோக்கியத்திற்காக பலரும் சைக்கிளை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும்" என்கிறார் ஸ்மார்ட் பைக் விரும்பி பரத். இவற்றில் கியர் வசதி உள்ளதால் வெகு தூரத்தையும் எளிமையாகக் கடந்து செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

நான்சி

ஸ்மார்ட் பைக்குகள் அனைவரது கவனத்தையும் பெற்றிருந்தாலும் அதன் செயலியில் இருக்கும் சில குறைபாடுகள் மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் முதல் முறையாக ஸ்மார்ட் பைக்கைப் பயன்படுத்திய நான்சி கூறுகையில் 'க்யூஆர் கோடை' ஸ்கேன் செய்தாலும், செயலிக்குள் செல்வதற்கு சிரமமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

சக்தி

ஸ்மார்ட் பைக் உடல் நலத்திற்கு மட்டுமல்ல, பூமியின் நலனுக்கும் ஏற்றது எனக் கூறும் ஆர்ஜே. சக்தி, " ஸ்மார்ட் பைக்கை எடுத்த இடத்திலேயே திரும்ப வைக்க வேண்டும் என கட்டாயமில்லாதது வசதியாக உள்ளது. இன்றைக்கு காற்று மாசு குறித்து நாம் பேசி வருகிறோம். ஸ்மார்ட் பைக்கை பயன்படுத்துவதன் மூலம் சென்னையை காற்று மாசில்லாத நகரமாக மாற்ற முடியும்" என்றும் கூறுகிறார்.

சம்பாதிக்கும் பணத்தில் கால்வாசியை போக்குவரத்திற்கே செலவு செய்யும் நடுத்தரவர்க்கத்தினருக்கு இந்த ஸ்மார்ட் பைக் திட்டத்தினை செழுமைப் படுத்தினால் ஆட்டோ, கால்டாக்சியில் செல்லும் அவசியமும் இருக்காது, ஆட்டோ ஓட்டுநரிடம் பேரம் பேசும் வேலையும் இருக்காது. பல்வேறு வகைகளிலும் சிறந்ததாக இருக்கும் இந்தத் திட்டம், மக்களிடம் பரவலாக சென்றடையும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

எப்போதும் பரபரப்புடனே காணப்படும் சென்னை மாநகரவாசிகள், கடும் போக்குவரத்து, கூட்ட நெரிசல் என ஓய்வற்று கிடக்கும் சாலைகளில் குறைந்த தூர பயணத்திற்கும் அதிகப் பணம் செலவு செய்யும் நிலையிலேயே ஒவ்வொரு நாளும் கழிகிறது. இப்படியான சூழலில் ஒரு சைக்கிள் இருந்தால், குறைந்த பட்ஜெட்டிலேயே பயணச் செலவை முடித்துவிடலாம் என யோசிக்காதவர்களே இருக்க மாட்டார்கள்.

ஸ்மார்ட் பைக்

அதுவும் தேவைப்படும் இடத்தில் ஒரு சைக்கிளை எடுத்துச் சென்று, பயன்படுத்தியபின் அதனை மற்றொரு இடத்தில் விட்டுச் செல்லலாம் என்ற வசதி இருந்தால் இன்னும் எப்படி இருக்கும்? தற்போது அதைதான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது அரசு. தலைநகர் டெல்லி, ஹைதராபாதைத் தொடர்ந்து இந்தத் திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஸ்மார்ட் பைக் என்பது கியர் வசதியுடன் கூடிய சைக்கிள்தான். 5000 ஸ்மார்ட் பைக்குகள் இத்திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்மார்ட் பைக்கில் ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாயும், அதற்கு மேல் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் 9 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுதவிர ஒரு நாள் பாஸ் முதல் 3 மாத பாஸ் வரை இதிலுள்ளது.

பரத்

"இன்று நாமெல்லாம் கார், பைக் வைத்திருக்கிறோம், உடல் ஆரோக்கியத்திற்காக பலரும் சைக்கிளை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும்" என்கிறார் ஸ்மார்ட் பைக் விரும்பி பரத். இவற்றில் கியர் வசதி உள்ளதால் வெகு தூரத்தையும் எளிமையாகக் கடந்து செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

நான்சி

ஸ்மார்ட் பைக்குகள் அனைவரது கவனத்தையும் பெற்றிருந்தாலும் அதன் செயலியில் இருக்கும் சில குறைபாடுகள் மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் முதல் முறையாக ஸ்மார்ட் பைக்கைப் பயன்படுத்திய நான்சி கூறுகையில் 'க்யூஆர் கோடை' ஸ்கேன் செய்தாலும், செயலிக்குள் செல்வதற்கு சிரமமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

சக்தி

ஸ்மார்ட் பைக் உடல் நலத்திற்கு மட்டுமல்ல, பூமியின் நலனுக்கும் ஏற்றது எனக் கூறும் ஆர்ஜே. சக்தி, " ஸ்மார்ட் பைக்கை எடுத்த இடத்திலேயே திரும்ப வைக்க வேண்டும் என கட்டாயமில்லாதது வசதியாக உள்ளது. இன்றைக்கு காற்று மாசு குறித்து நாம் பேசி வருகிறோம். ஸ்மார்ட் பைக்கை பயன்படுத்துவதன் மூலம் சென்னையை காற்று மாசில்லாத நகரமாக மாற்ற முடியும்" என்றும் கூறுகிறார்.

சம்பாதிக்கும் பணத்தில் கால்வாசியை போக்குவரத்திற்கே செலவு செய்யும் நடுத்தரவர்க்கத்தினருக்கு இந்த ஸ்மார்ட் பைக் திட்டத்தினை செழுமைப் படுத்தினால் ஆட்டோ, கால்டாக்சியில் செல்லும் அவசியமும் இருக்காது, ஆட்டோ ஓட்டுநரிடம் பேரம் பேசும் வேலையும் இருக்காது. பல்வேறு வகைகளிலும் சிறந்ததாக இருக்கும் இந்தத் திட்டம், மக்களிடம் பரவலாக சென்றடையும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Intro:Body:


ஸ்மார்ட் பைக்

சென்னை:

சென்னையில் தேவைப்படும் இடத்தில் ஒரு சைக்கிளை எடுத்துச் சென்று, அதனை தேவைக்கு ஏற்ப மற்றொரு இடத்தில் விட்டுச் செல்வது எவ்வளவு வசதியாக இருக்கும். பரபரப்பான போக்குவரத்து, கூட்ட நெரிசல் நிறைந்த சென்னையில் குறைந்த தூர பயணத்திற்காக அதிக பணம் செலவு செய்து ஆட்டோ, கால்டாக்சியில் செல்லும் அவசியமும் இருக்காது. இதற்காக ஆட்டோ ஓட்டுநரிடம் பேரம் பேசும் வேலையும் இருக்காது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் ஸ்மார்ட் பைக்குள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஸ்மார்ட் பைக் என்பது கியர் வசதியுடன் கூடிய சைக்கிள்களே. 5000 ஸ்மார்ட் பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தொடக்கத்தில் அனைவரது கவனத்தையும் பெற்ற இந்த ஸ்மார்ட் பைக்குகள் தற்போது தனது பொலிவை இழந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக பலரும் கூறுவது ஸ்மார்ட் பைக்கை வாடகைக்கு எடுக்க பயன்படுத்தும் செயலியில் உள்ள தொழில்நுட்ப பிரச்னைதான். இது தொடர்பாக முதல் முறையாக ஸ்மார்ட் பைக்கைப் பயன்படுத்திய நான்சி பேசும்போது, "க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தாலும், செயலிக்குள் செல்வதற்கு சிரமமாக இருந்தது, இதனை சரிசெய்தால் நன்றாக இருக்கும். மெட்ரோவும் அருகாமையில் உள்ளதால் இதனை ஏராளமான மக்கள் பயன்படுத்த முடியும். டவுண்டேடு செய்து பயன்படுத்தும்போது பிரச்னையை ஏற்படுகிறது. இதனை சரி செய்தால் நன்றாக இருக்கும்" என்றார். ஸ்மார்ட் பைக்கில் ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாயும், அதற்கு மேல் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு 9 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடுகையில், குறுகிய தூரத்திற்கு இது மிக மலிவான போக்குவரத்து என்றே கூறலாம். இது தவிர ஒரு நாள் பாஸ் முதல் 3 மாத பாஸ் வரையுள்ளது. பயணாளிகள் தங்களுக்கு ஏற்ற திட்டத்தை தேர்வு செய்துகொள்ளலாம். "இன்று நாமெல்லாம் கார், பைக் வைத்திருக்கிறோம், உடல் ஆரோக்கியத்திற்காக பலரும் சைக்கிளை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். அப்படிபட்டவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும்" என்றார் ஸ்மார்ட் பைக் விரும்பி பரத். இவற்றில் கியர் உள்ளதால் வெகு தூரத்தையும் எளிமையாகக் கடந்து செல்ல முடியும் என்றும், பொருட்களை வைக்க கூடை வழங்கப்பட்டுள்ளது வசதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஸ்மார்ட்பைக் உடல் நலத்திற்கு மட்டுமல்ல பூமியின் நலனுக்கும் எற்றது என்று கூறுகிறார் ஆர்ஜே. சக்தி. "ஸ்மார்ட் சைக்கிளை எப்படி பயன்படுத்த வேண்டும் என இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. வைத்த இடத்திலேயே திரும்ப வைக்க வேண்டும் என கட்டாயமில்லை. இதனால் வசதியாக உள்ளது. இன்றைக்கும் நாம் காற்று மாசு குறித்து பேசி வருகிறோம், ஆனால் அதனைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. ஸ்மார்ட் பைக்கை பயன்படுத்துவதன் மூலம் சென்னையை காற்று மாசில்லாத நகரமாக மாற்ற முடியும்" என்றார். பல வகைகளில் சிறந்ததாக இருந்தாலும் இந்த திட்டம் மக்களைச் சென்றடையும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பேட்டி 1. நான்சி
2.பரத்
3.சக்தி

Use Visuals in mojo and wrap
Conclusion:Additional visuals, bite in wrap
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.