ETV Bharat / state

விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.31 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

author img

By

Published : Dec 10, 2019, 3:20 PM IST

சென்னை: விமான நிலையத்தில் ரூ. 31 லட்சம் மதிப்புள்ள 800 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

gold
gold

வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்களில் பெருமளவு கடத்தல் பொருள்கள் கொண்டு வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

விமானப்பயணிகள் கடத்திவந்த தங்கம்

அப்போது இலங்கை, சார்ஜாவில் இருந்து சென்னை வந்தடைந்த விமானத்தில் பயணித்த திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆயிஷா சுதிகா, இலங்கையைச் சேர்ந்த முகமது அமாத் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அலுவலர்கள் விசாரித்தனர். விசராணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களின் உடமைகளை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். பின்னர் அவர்களை தனியறையில் வைத்து சோதனை செய்தபோது இருவரும் உள்ளாடைக்குள் வைத்து தங்கத்தை கடத்திவந்தது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து சுங்கத்துறை அலுவலர்கள் 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.31 லட்சம் ஆகும். இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்களில் பெருமளவு கடத்தல் பொருள்கள் கொண்டு வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

விமானப்பயணிகள் கடத்திவந்த தங்கம்

அப்போது இலங்கை, சார்ஜாவில் இருந்து சென்னை வந்தடைந்த விமானத்தில் பயணித்த திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆயிஷா சுதிகா, இலங்கையைச் சேர்ந்த முகமது அமாத் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அலுவலர்கள் விசாரித்தனர். விசராணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களின் உடமைகளை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். பின்னர் அவர்களை தனியறையில் வைத்து சோதனை செய்தபோது இருவரும் உள்ளாடைக்குள் வைத்து தங்கத்தை கடத்திவந்தது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து சுங்கத்துறை அலுவலர்கள் 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.31 லட்சம் ஆகும். இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Intro:சென்னை விமான நிலையத்தில் 31 லட்சம் மதிப்புள்ள 800கிராம் தங்கம் பறிமுதல். இரண்டு பயணிகள் கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணைBody:சென்னை விமான நிலையத்தில் 31 லட்சம் மதிப்புள்ள 800கிராம் தங்கம் பறிமுதல். இரண்டு பயணிகள் கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்களில் பெருமளவு கடத்தல் பொருள்கள் கொண்டு வருவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இலங்கை மற்றும் சார்ஜாவில் இருந்து விமானம் வந்த விமானத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆயிஷா சுதிகா(32) மற்றும் இலங்கையைச் சேர்ந்த முகமது அமாத்(28)ஆகியோரை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் நிறுத்தி விசாரணை செய்தனர்.அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களின் உடமைகளை சோதனை செய்தபோது அதில் எதுவும் இல்லாததால். அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்ததில் உள்ளாடைக்குள் தங்கத்தை எடுத்து வந்தது தெரியவந்தது. பின்னர் அவர்களிடமிருந்து 31 லட்சம் மதிப்புடைய 800 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.