ETV Bharat / state

மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்!

author img

By

Published : Jun 21, 2021, 4:06 PM IST

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களை மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி!
மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி!

கரோனா தாக்கும் அபாயம் உள்ளதால் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது. இதனடிப்படையில், சென்னையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கற்பகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (ஜூன். 21) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மருத்துவம், குடும்பநலத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டது.

மனுவில் ’’கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழ்நாட்டில் மருத்துவர்கள், முன்கள பணியாளர்களுக்கு, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, மூத்த குடிமக்களுக்கு, 45 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு, மாநிலம் முழுவதும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தபட்டு வருகிறது.

தடுப்பூசி வழங்கும் முகாம் உள்ளிட்ட இடங்களில் பல தரப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை கரோனா தடுப்பூசி செலுத்த வரிசையில் நிற்பதை தவிர்க்க உரிய சான்றிதழை காண்பித்து உடனடியாக தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

சிறைச்சாலைகள், சிறப்பு இல்லங்கள் ஆகியவற்றில் உள்ளவர்களுக்கு சமூக நலத்துறை, மாற்று திறனாளிகள் நலன் துறை மூலமாக சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யபட்டுள்ளதாகவும், சென்னையில் உள்ள நடமாட முடியாதவர்களுக்கு, அவர்களின் வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு என மாவட்ட அளவில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருவதாகவும் '' மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் (ஜூன். 29)ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: வலுவான மாநில அரசுகளாலேயே வலிமையான ஒன்றிய அரசை உருவாக்கிட முடியும்!'

கரோனா தாக்கும் அபாயம் உள்ளதால் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது. இதனடிப்படையில், சென்னையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கற்பகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (ஜூன். 21) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மருத்துவம், குடும்பநலத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டது.

மனுவில் ’’கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழ்நாட்டில் மருத்துவர்கள், முன்கள பணியாளர்களுக்கு, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, மூத்த குடிமக்களுக்கு, 45 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு, மாநிலம் முழுவதும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தபட்டு வருகிறது.

தடுப்பூசி வழங்கும் முகாம் உள்ளிட்ட இடங்களில் பல தரப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை கரோனா தடுப்பூசி செலுத்த வரிசையில் நிற்பதை தவிர்க்க உரிய சான்றிதழை காண்பித்து உடனடியாக தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

சிறைச்சாலைகள், சிறப்பு இல்லங்கள் ஆகியவற்றில் உள்ளவர்களுக்கு சமூக நலத்துறை, மாற்று திறனாளிகள் நலன் துறை மூலமாக சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யபட்டுள்ளதாகவும், சென்னையில் உள்ள நடமாட முடியாதவர்களுக்கு, அவர்களின் வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு என மாவட்ட அளவில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருவதாகவும் '' மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் (ஜூன். 29)ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: வலுவான மாநில அரசுகளாலேயே வலிமையான ஒன்றிய அரசை உருவாக்கிட முடியும்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.