ETV Bharat / state

பயங்கரவாதிகளை இயக்கிய தலைவன் யார்? - கியூ பிரிவு காவல் துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை

author img

By

Published : Jan 19, 2020, 10:04 PM IST

Updated : Jan 19, 2020, 10:26 PM IST

பயங்கரவாதிகளை இயக்கியவர்கள் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பெங்களூருவில் கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

பொலிசெ
பொலிசெ

2014ஆம் ஆண்டு இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சையது அலி நவாஸ், அப்துல் சமீம், கடலூரைச் சேர்ந்த காஜா மொய்தீன் உள்ளிட்டோர் பிணையில் வெளிவந்து தலைமறைவாகினர்.

இவர்களை தேசிய புலனாய்வு முகமை, உளவுத் துறை, தமிழ்நாடு கியூ பிரிவு காவல் துறை தீவிரமாகத் தேடிவந்தது. இந்தச் சூழலில் கஜா மொய்தீனும் சையது அலி நவாசும் கடந்த 9ஆம் தேதி டெல்லியில் துப்பாக்கிகளுடன் சிறப்பு புலனாய்வு காவல் துறையினரிடம் பிடிபட்டனர். மேலும் அவர்களுடன் அப்துல் சமத் என்பவரும் சிக்கினார்.

இவர்களுக்கு துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் வழங்கி அடைக்கலம் கொடுத்த பயங்கரவாதிகள் இம்ரான்கான், முகமது சையத், ஹனீஃப் கான் உள்ளிட்ட மூன்று பேர் கடந்த 8ஆம் தேதி பெங்களூருவில் கைதுசெய்யப்பட்டனர்.

இதனிடையே, களியக்காவிளையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலைசெய்த வழக்கில் தலைமறைவாக இருந்த அப்துல் சமீமும், தவுபிக் என்பவரும் கைதுசெய்யப்பட்டனர்.

இதையடுத்து, பெங்களூருவில் கைதான மூன்று பயங்கரவாதிகளையும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய கியூ பிரிவு காவல் துறையினர் அவர்களை காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

விசாரணையில் பயங்கரவாதிகள் பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. காஜா மொய்தீன், தங்களை இயக்கும் தலைமை பயங்கரவாதி குறித்தும் விசாரணையில் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

காஜா மொய்தீன் தலைமை பயங்கரவாதியிடம் புதிய மென்பொருள் வசதி மூலம் தொடர்புகொண்டு பேசியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்தத் தலைமை பயங்கரவாதி யார் என்பது குறித்தும் அவர் எந்த நாட்டிலிருந்து இவர்களை இயக்குகிறார் என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

2014ஆம் ஆண்டு இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சையது அலி நவாஸ், அப்துல் சமீம், கடலூரைச் சேர்ந்த காஜா மொய்தீன் உள்ளிட்டோர் பிணையில் வெளிவந்து தலைமறைவாகினர்.

இவர்களை தேசிய புலனாய்வு முகமை, உளவுத் துறை, தமிழ்நாடு கியூ பிரிவு காவல் துறை தீவிரமாகத் தேடிவந்தது. இந்தச் சூழலில் கஜா மொய்தீனும் சையது அலி நவாசும் கடந்த 9ஆம் தேதி டெல்லியில் துப்பாக்கிகளுடன் சிறப்பு புலனாய்வு காவல் துறையினரிடம் பிடிபட்டனர். மேலும் அவர்களுடன் அப்துல் சமத் என்பவரும் சிக்கினார்.

இவர்களுக்கு துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் வழங்கி அடைக்கலம் கொடுத்த பயங்கரவாதிகள் இம்ரான்கான், முகமது சையத், ஹனீஃப் கான் உள்ளிட்ட மூன்று பேர் கடந்த 8ஆம் தேதி பெங்களூருவில் கைதுசெய்யப்பட்டனர்.

இதனிடையே, களியக்காவிளையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலைசெய்த வழக்கில் தலைமறைவாக இருந்த அப்துல் சமீமும், தவுபிக் என்பவரும் கைதுசெய்யப்பட்டனர்.

இதையடுத்து, பெங்களூருவில் கைதான மூன்று பயங்கரவாதிகளையும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய கியூ பிரிவு காவல் துறையினர் அவர்களை காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

விசாரணையில் பயங்கரவாதிகள் பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. காஜா மொய்தீன், தங்களை இயக்கும் தலைமை பயங்கரவாதி குறித்தும் விசாரணையில் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

காஜா மொய்தீன் தலைமை பயங்கரவாதியிடம் புதிய மென்பொருள் வசதி மூலம் தொடர்புகொண்டு பேசியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்தத் தலைமை பயங்கரவாதி யார் என்பது குறித்தும் அவர் எந்த நாட்டிலிருந்து இவர்களை இயக்குகிறார் என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

Intro:Body:


ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 19.01.20

தீவிரவாதிகளை இயக்கியவர்கள் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. பெங்களூரில் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் புதிய தகவல்கள்....

தீவிரவாதிகள் பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. காஜா மொய்தீனை இயக்கும் தலைமை தீவிரவாதி குறித்து போலீஸ் விசாரணையில் பல தகவல் வெளியாகி உள்ளது. காஜா மொய்தீன் அந்த தலைவன் தீவிரவாதியிடம் புதிய சாப்ட்வேர் மூலம் தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்துள்ளது.

அந்த தலைமை தீவிரவாதி யார் என்பது குறித்தும் அவர் எந்த நாட்டில் இருந்து இவர்களை இயக்கியது என்பது குறித்தும்
மீண்டும் தீவிர விசாரணை தொடர்கிறது.
கடந்த 8 ம் தேதி தமிழக கியூ பிரான்ச் போலீசார் பெங்களூரில் வைத்து தீவுரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என முகமது ஹனிப் கான், முகமது ஜெயித் மற்றும் இம்ரான் கான் ஆகிய மூன்று பேரை கைது செய்து , அவர்களை கடந்த 10ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பத்து நாள் போலீஸ் காவலில் வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் வெளியாகி உள்ளது என காவல்துறையினர் தரப்பில் தகவல்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது..

tn_che_02_further_informations_leaked_by_qbranch_investigation_about_extremists_script_7204894

Conclusion:
Last Updated : Jan 19, 2020, 10:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.