ETV Bharat / state

'நாங்க நிச்சயதார்த்தம் செஞ்சிட்டோம். நீங்க தான் நல்லபடியாக திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும்' - கலகலப்பாய் பேசிய கடம்பூர் ராஜூ

author img

By

Published : Apr 26, 2022, 9:21 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(ஏப்.26) அதிமுக - திமுக இடையே கலகலப்பான விவாதம் ஏற்பட்டது.

’நாங்க நிச்சயதார்த்தம் செஞ்சிட்டோம், நீங்க தான் நல்லபடியா திருமணம் நடத்தி வைக்க வேண்டும் ‘ - கலகலப்பாய் பேசிய கடம்பூர் ராஜூ
’நாங்க நிச்சயதார்த்தம் செஞ்சிட்டோம், நீங்க தான் நல்லபடியா திருமணம் நடத்தி வைக்க வேண்டும் ‘ - கலகலப்பாய் பேசிய கடம்பூர் ராஜூ

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜு, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் கல்லூரி அமைக்க அரசு முன் வருமா எனக்கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”கோவில்பட்டியிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் விருதுநகர் மாவட்டத்தில் 100 இருக்கைகளுடன் 1 அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் 1 அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

அனைத்து மாவட்டத்திலும் செவிலியர் பயிற்சிப்பள்ளி அல்லது செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்கப்படும் என முதலமைச்சர் முன்னதாகவே அறிவித்திருந்தார். தூத்துக்குடியில் 1 அரசு செவிலியர் பள்ளி செயல்பட்டு வருகிறது. எனினும், கோவில்பட்டியில் அரசு செவிலியர் கல்லூரி குறித்து உறுப்பினர் கேட்டுள்ளார். அதற்கான நிலம் மாற்றும் பணிகள் 2020ஆம் ஆண்டே தொடங்கியுள்ளனர். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாகப் பணிகள் நடைபெறவில்லை. இது முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. நிச்சயம் நடவடிக்கைகள் எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.

’நாங்க நிச்சயதார்த்தம் செஞ்சிட்டோம். நீங்க தான் நல்லபடியா திருமணம் நடத்தி வைக்க வேண்டும் ‘ - கலகலப்பாய் பேசிய கடம்பூர் ராஜூ

’நாங்கள் நிச்சயதார்த்தம் செய்துவிட்டோம்...!’:இதற்கு சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜூ, ”மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி பகுதி வளர்ந்து வருகிறது. அந்தப் பகுதியில் செவிலியர் பயிற்சிப்பள்ளி வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. பல்வேறு பணிகளும் அங்கு நடந்தன. ஆனால், தேர்தல் வந்து அது நிலுவையிலுள்ளது. விரைவில் அந்தப் பணிகளை முடித்துத் தர வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தார்.

இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”சுகாதாரத்துறைக்கு அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்க நில மாற்றம் செய்தது 2020ஆம் ஆண்டு தான். அதன் பிறகு எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. இருப்பினும் கல்லூரி அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.

இதற்கு சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜு, ”நில வகைப்பாடு பணிகள் முடிந்துள்ளன. பகுதி மக்கள் கோரிக்கை என்னவென்றால் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் திருமணம் நடைபெற வேண்டும் என்பது தான் பாக்கி. நாங்கள் நிச்சயதார்த்தம் செய்துவிட்டோம். இந்த அரசு திருமணத்தை நல்லபடியாக செய்து தர வேண்டும் ” என கலகலப்பாகப் பேசினார்.

கலாய்த்த சபாநாயகர் அப்பாவு: இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”நிச்சயதார்த்தம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், உண்மையில் நில மாற்றம் மட்டுமே நடந்திருக்கிறது” என்றார்.

குறுக்கீடு செய்த சபாநாயகர் அப்பாவு, ”பெண் பார்த்திருக்காங்க...” என நக்கலடித்தார். அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”பெண் பார்ப்பது தான் தொடங்கியிருக்கு. இருந்தாலும் நிச்சயதார்த்தம் நடத்தி நிச்சயம் திருமணம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

திருமணம் - நிச்சயதார்த்தம் என அதிமுக - திமுக பேசியது பேரவையில் கலகலப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 'அணில் பிரச்னையை விடுங்க..., அணிலை அடிச்சு சாப்பிட்டாச்சு' - கலகலப்பாக பேசிய சபாநாயகர் அப்பாவு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜு, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் கல்லூரி அமைக்க அரசு முன் வருமா எனக்கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”கோவில்பட்டியிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் விருதுநகர் மாவட்டத்தில் 100 இருக்கைகளுடன் 1 அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் 1 அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

அனைத்து மாவட்டத்திலும் செவிலியர் பயிற்சிப்பள்ளி அல்லது செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்கப்படும் என முதலமைச்சர் முன்னதாகவே அறிவித்திருந்தார். தூத்துக்குடியில் 1 அரசு செவிலியர் பள்ளி செயல்பட்டு வருகிறது. எனினும், கோவில்பட்டியில் அரசு செவிலியர் கல்லூரி குறித்து உறுப்பினர் கேட்டுள்ளார். அதற்கான நிலம் மாற்றும் பணிகள் 2020ஆம் ஆண்டே தொடங்கியுள்ளனர். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாகப் பணிகள் நடைபெறவில்லை. இது முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. நிச்சயம் நடவடிக்கைகள் எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.

’நாங்க நிச்சயதார்த்தம் செஞ்சிட்டோம். நீங்க தான் நல்லபடியா திருமணம் நடத்தி வைக்க வேண்டும் ‘ - கலகலப்பாய் பேசிய கடம்பூர் ராஜூ

’நாங்கள் நிச்சயதார்த்தம் செய்துவிட்டோம்...!’:இதற்கு சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜூ, ”மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி பகுதி வளர்ந்து வருகிறது. அந்தப் பகுதியில் செவிலியர் பயிற்சிப்பள்ளி வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. பல்வேறு பணிகளும் அங்கு நடந்தன. ஆனால், தேர்தல் வந்து அது நிலுவையிலுள்ளது. விரைவில் அந்தப் பணிகளை முடித்துத் தர வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தார்.

இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”சுகாதாரத்துறைக்கு அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்க நில மாற்றம் செய்தது 2020ஆம் ஆண்டு தான். அதன் பிறகு எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. இருப்பினும் கல்லூரி அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.

இதற்கு சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜு, ”நில வகைப்பாடு பணிகள் முடிந்துள்ளன. பகுதி மக்கள் கோரிக்கை என்னவென்றால் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் திருமணம் நடைபெற வேண்டும் என்பது தான் பாக்கி. நாங்கள் நிச்சயதார்த்தம் செய்துவிட்டோம். இந்த அரசு திருமணத்தை நல்லபடியாக செய்து தர வேண்டும் ” என கலகலப்பாகப் பேசினார்.

கலாய்த்த சபாநாயகர் அப்பாவு: இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”நிச்சயதார்த்தம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், உண்மையில் நில மாற்றம் மட்டுமே நடந்திருக்கிறது” என்றார்.

குறுக்கீடு செய்த சபாநாயகர் அப்பாவு, ”பெண் பார்த்திருக்காங்க...” என நக்கலடித்தார். அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”பெண் பார்ப்பது தான் தொடங்கியிருக்கு. இருந்தாலும் நிச்சயதார்த்தம் நடத்தி நிச்சயம் திருமணம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

திருமணம் - நிச்சயதார்த்தம் என அதிமுக - திமுக பேசியது பேரவையில் கலகலப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 'அணில் பிரச்னையை விடுங்க..., அணிலை அடிச்சு சாப்பிட்டாச்சு' - கலகலப்பாக பேசிய சபாநாயகர் அப்பாவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.