ETV Bharat / state

பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் பஸ் பாஸ் - பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் பஸ் பாஸ்

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு இந்தாண்டு வழங்கப்படவுள்ள பஸ் பாஸ் ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

bus
author img

By

Published : Jun 2, 2019, 4:04 PM IST

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு இலவச பஸ் பாஸ்களை வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் - ஆகஸ்ட் காலகட்டத்திற்குள் இந்த பாஸ் கொடுக்கப்பட்டுவிடும். இதன்மூலம் ஆண்டுதோறும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவார்கள். இந்நிலையில், கடந்த ஆண்டில் இலவச பாஸ் வழங்குவதில் தாமதமானது.

இதனால் அரசு பஸ்களில் பயணிக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்,அடிக்கடி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. எனவே, மாணவர்களுக்கு இம்முறை எவ்விதமான சிக்கலும் இல்லாமல் பஸ் பாஸ்களை வழங்க வேண்டிய நிலைக்கு போக்குவரத்துத் துறை அலுவலர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நடப்பாண்டில் ஸ்மார்ட் கார்டு வடிவிலான பாஸ்களை வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் - 3,60,000, விழுப்புரம் - 4,70,435, சேலம்- 2,94,800, கோவை-3,40,000, கும்பகோணம் - 3,76,558, மதுரை- 3,30,000, திருநெல்வேலி- 2,49,555 என மொத்தமாக 24,21,348 பஸ் பாஸ்கள் வழங்கப்படவுள்ளன. தற்போது வழங்கப்படும் பஸ் பாஸ், மாணவர்களின் விவரம் அனைத்தும் அடங்கிய பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படவுள்ளது. தற்போது அதற்கான பணியில் ஈடுபட்டு வருவதாகவும் ரூ.1.90 கோடி செலவில் ஸ்மார்ட் கார்டு வடிவிலான பாஸ்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் போக்குவரத்து உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வழங்கப்படவுள்ள ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதால், மாணவர்கள் பழைய பாஸில் பேருந்துகளில் பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு இலவச பஸ் பாஸ்களை வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் - ஆகஸ்ட் காலகட்டத்திற்குள் இந்த பாஸ் கொடுக்கப்பட்டுவிடும். இதன்மூலம் ஆண்டுதோறும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவார்கள். இந்நிலையில், கடந்த ஆண்டில் இலவச பாஸ் வழங்குவதில் தாமதமானது.

இதனால் அரசு பஸ்களில் பயணிக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்,அடிக்கடி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. எனவே, மாணவர்களுக்கு இம்முறை எவ்விதமான சிக்கலும் இல்லாமல் பஸ் பாஸ்களை வழங்க வேண்டிய நிலைக்கு போக்குவரத்துத் துறை அலுவலர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நடப்பாண்டில் ஸ்மார்ட் கார்டு வடிவிலான பாஸ்களை வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் - 3,60,000, விழுப்புரம் - 4,70,435, சேலம்- 2,94,800, கோவை-3,40,000, கும்பகோணம் - 3,76,558, மதுரை- 3,30,000, திருநெல்வேலி- 2,49,555 என மொத்தமாக 24,21,348 பஸ் பாஸ்கள் வழங்கப்படவுள்ளன. தற்போது வழங்கப்படும் பஸ் பாஸ், மாணவர்களின் விவரம் அனைத்தும் அடங்கிய பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படவுள்ளது. தற்போது அதற்கான பணியில் ஈடுபட்டு வருவதாகவும் ரூ.1.90 கோடி செலவில் ஸ்மார்ட் கார்டு வடிவிலான பாஸ்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் போக்குவரத்து உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வழங்கப்படவுள்ள ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதால், மாணவர்கள் பழைய பாஸில் பேருந்துகளில் பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் பஸ் பாஸ் - போக்குவரத்து துறை அதிகாரிகள்  தகவல்

நடப்பாண்டிற்கான இலவச ஸ்மார்ட் பஸ் பாஸை ரூ.1.90 கோடி செலவில் தயாரிக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . தமிழகம் முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களை பயன்படுத்தி பள்ளி, கல்லூரிக்கு செல்வோருக்கு அரசு இலவச பஸ் பாஸ்களை வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் - ஆகஸ்ட் காலகட்டத்திற்குள் பாஸ் கொடுக்கப்பட்டு விடும். ஆண்டுதோறும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதனால் பயனடைவார்கள். இந்நிலையில், கடந்த ஆண்டில் இலவச பாஸ் வழங்குவதில் தாமதமானது.

இதனால் அரசு பஸ்களில் பயணிக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். . இதனால் அடிக்கடி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் இந்த ஆண்டு கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. எனவே, மாணவர்களுக்கு இம்முறை எவ்விதமான சிக்கலும் இல்லாமல் பஸ் பாஸ்களை வழங்க வேண்டிய நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது அதற்கான பணியில் ஈடுபட்டு வருவதாகவும் ,ரூ.1.90 கோடி செலவில் ஸ்மார்ட் கார்டு வடிவிலான பாஸ்களை தயாரிக்க  திட்டமிட்டுள்ளதாகவும் போக்குவரத்து உயர் அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள்  மேலும்  தெரிவித்ததாவது :

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு ,  ஐடிஐ, அரசு கலை அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எளிதாக பள்ளி, கல்லூரிக்கு சென்று வரும் வகையில் பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் ஸ்மார்ட் கார்டு வடிவிலான பாஸ்களை வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது . இதில், சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகம் - 3,60,000 பஸ் பாஸ்களும், விழுப்புரம் - 4,70,435; சேலம்- 2,94,800; கோவை-3,40,000; கும்பகோணம் - 3,76,558; மதுரை- 3,30,000; திருநெல்வேலி- 2,49,555 என மொத்தமாக 24,21,348 பஸ் பாஸ்கள் இந்தாண்டு வழங்கப்பட உள்ளது. தற்போது வழங்கப்படும் பஸ் பாஸ், மாணவர்களின் விவரம் அனைத்தும் அடங்கிய பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.1.90 கோடி செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணி வேகமாக நடந்து வருகிறது. விரைவில் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்  .

தற்போது வழங்கப்பட உள்ள பாஸ்கள் ,தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதால்  பாஸ்கல் வழங்கப்படும் வரை மாணவர்கள் பழைய பாஸில் பேருந்துகளில் பயணிக்கலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது . 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.