ETV Bharat / state

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க கோரி ஜெயக்குமார் மனு

author img

By

Published : Feb 28, 2022, 10:29 PM IST

திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் சிறையிலுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க கோரி ஜெயக்குமார் மனு
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க கோரி ஜெயக்குமார் மனு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றஞ்சாட்டி திமுக பிரமுகரைத் தாக்கி, சட்டையை கழற்றி அவமானப்படுத்தியதற்காக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் உள்ளார்.

இந்த வழக்கில் ஜாமீன்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி அல்லி, தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது எனவும், கைதாகி சில நாள்களே ஆவதாலும், விசாரணை இன்னும் ஆரம்பகட்டத்தில் இருப்பதாலும் ஜாமீன் தரமுடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் “புகார் அளித்தவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உடலில் காயங்கள் இல்லை. அப்படி உள்ள நிலையில் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்தது தவறு. மருத்துவ அறிக்கையும் காயங்கள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகும் தொடர்ந்து காவல் துறையினர் என்னை வேறு வேறு வழக்குகளில் கைது செய்து வருகின்றனர்.

இதனை முதன்மை அமர்வு நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. எனவே இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க: ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றஞ்சாட்டி திமுக பிரமுகரைத் தாக்கி, சட்டையை கழற்றி அவமானப்படுத்தியதற்காக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் உள்ளார்.

இந்த வழக்கில் ஜாமீன்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி அல்லி, தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது எனவும், கைதாகி சில நாள்களே ஆவதாலும், விசாரணை இன்னும் ஆரம்பகட்டத்தில் இருப்பதாலும் ஜாமீன் தரமுடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் “புகார் அளித்தவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உடலில் காயங்கள் இல்லை. அப்படி உள்ள நிலையில் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்தது தவறு. மருத்துவ அறிக்கையும் காயங்கள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகும் தொடர்ந்து காவல் துறையினர் என்னை வேறு வேறு வழக்குகளில் கைது செய்து வருகின்றனர்.

இதனை முதன்மை அமர்வு நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. எனவே இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க: ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.