ETV Bharat / state

'டெல்டா மாவட்டங்களில் இடியுடன்கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்'

author img

By

Published : Jun 4, 2021, 1:49 PM IST

சென்னை: டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை, Rain
கனமழை, Rain

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

வெப்பச்சலனம், தமிழ்நாட்டின் தென் கடலோரத்தில் (1.5 கிலோ மீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், குமரிக்கடல், இலங்கை ஒட்டி (3.1 முதல் 4.5 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், கர்நாடக முதல் தென் தமிழ்நாடு வரை (1 கிலோ மீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் இன்று டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும்.

மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன்கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூன் 5: தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூன் 6: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஜூன் 7, 8: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

'டெல்டா மாவட்டங்களில் இடியுடன்கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்'
'டெல்டா மாவட்டங்களில் இடியுடன்கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்'

சென்னை

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன்கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):

சித்தாறு (கன்னியாகுமரி) 14,

சிவலோகம் (கன்னியாகுமாரி) 12,

பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) 11,

பெருஞ்சாணி (கன்னியாகுமரி) 10,

மாரண்டஹள்ளி (தர்மபுரி) 9,

நிலக்கோட்டை (திண்டுக்கல்), உசிலம்பட்டி (மதுரை) தலா 7,

காரியாபட்டி (விருதுநகர்), நாமக்கல் தலா 6,

வால்பாறை (கோவை) 5,

காங்கேயம் (திருப்பூர்) 4,

துவாக்குடி (திருச்சிராப்பள்ளி), ஓமலூர் (சேலம்), ஓசூர் (கிருஷ்ணகிரி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) தலா 3,

மீனவர்களுக்கான எச்சரிக்கை

ஜூன் 4, 5: குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஜூன் 4, 5: கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவுப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூன் 4 முதல் 8 வரை: தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

'டெல்டா மாவட்டங்களில் இடியுடன்கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்'
'டெல்டா மாவட்டங்களில் இடியுடன்கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்'

மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் தென்மேற்குப் பருவமழை இன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் முன்னேறியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

வெப்பச்சலனம், தமிழ்நாட்டின் தென் கடலோரத்தில் (1.5 கிலோ மீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், குமரிக்கடல், இலங்கை ஒட்டி (3.1 முதல் 4.5 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், கர்நாடக முதல் தென் தமிழ்நாடு வரை (1 கிலோ மீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் இன்று டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும்.

மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன்கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூன் 5: தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூன் 6: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஜூன் 7, 8: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

'டெல்டா மாவட்டங்களில் இடியுடன்கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்'
'டெல்டா மாவட்டங்களில் இடியுடன்கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்'

சென்னை

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன்கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):

சித்தாறு (கன்னியாகுமரி) 14,

சிவலோகம் (கன்னியாகுமாரி) 12,

பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) 11,

பெருஞ்சாணி (கன்னியாகுமரி) 10,

மாரண்டஹள்ளி (தர்மபுரி) 9,

நிலக்கோட்டை (திண்டுக்கல்), உசிலம்பட்டி (மதுரை) தலா 7,

காரியாபட்டி (விருதுநகர்), நாமக்கல் தலா 6,

வால்பாறை (கோவை) 5,

காங்கேயம் (திருப்பூர்) 4,

துவாக்குடி (திருச்சிராப்பள்ளி), ஓமலூர் (சேலம்), ஓசூர் (கிருஷ்ணகிரி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) தலா 3,

மீனவர்களுக்கான எச்சரிக்கை

ஜூன் 4, 5: குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஜூன் 4, 5: கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவுப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூன் 4 முதல் 8 வரை: தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

'டெல்டா மாவட்டங்களில் இடியுடன்கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்'
'டெல்டா மாவட்டங்களில் இடியுடன்கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்'

மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் தென்மேற்குப் பருவமழை இன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் முன்னேறியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.