ஆண்டுதோறும் உழைப்பு தான தினத்தை கடைப்பிடிக்கும் வகையில் அன்று முழுக்க, தங்கள் உழைப்பை சேவைப்பணிக்காக அர்ப்பணித்துவருபவர்கள் பெவிக்கால் சேம்பியன்ஸ் கிளப். இந்நிலையில், சேம்பியன்ஸ் கிளப் சார்பில் சென்னை பெருங்களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்த, 10-க்கும் மேற்பட்ட தச்சு கலைஞர்கள் - வகுப்பறைகள், ஆய்வகங்களில் உடைந்து கிடைந்த, டெஸ்க், பெஞ்சுள், கதவுகள், ஜன்னல்களை மறு சீரமைத்தனர்.
இது குறித்து பெவிக்கால் சேம்பியன்ஸ் கிளப்பினர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு அரசுப் பள்ளியை தேர்ந்தெடுத்து பழுதடைந்த பொருள்களை சீர் செய்துதருகிறோம். ஒழிப்பு தான தினத்தை கொண்டாடும்விதமாக அன்று ஒருநாள் முழுவதும் எங்கள் உழைப்பை தானமாக அளிக்கின்றோம் எனத் தெரிவித்தனர்.
பின்னர் பள்ளியின் தலைமையாசிரியர் அங்கேயர்கனி கூறுகையில், "உழைப்பு தான தினத்தைக் கொண்டாடும்வகையில் பெவிகால் சாம்பியன்ஸ் கிளப்பினருக்கு எங்கள் பள்ளியின் சார்பாக பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து தொண்டு அமைப்புகளும் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற செயல்களால் அரசுப் பள்ளிகள் புத்துணர்ச்சி பெறும்" என்றார்.
இதையும் படிங்க: ஆழ்துளை கிணறுக்காக 2,000 கி.மீ. பயணிப்பேன் -சிவாஜி