ETV Bharat / state

மயிலாப்பூரில் ரவுடி வெட்டிக் கொலை!

author img

By

Published : Oct 24, 2020, 10:04 AM IST

சென்னை: மயிலாப்பூரில் முன்விரோதம் காரணமாக அடையாளம் தெரியாத நபர்களால் பிரபல ரவுடி வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார்.

  பிரபல ரவுடி வெட்டிக் கொலை!
பிரபல ரவுடி வெட்டிக் கொலை!

சென்னை மயிலாப்பூர் முத்துகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் என்கின்ற பொட்டை மணி (27). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகேயுள்ள முண்டக கன்னியம்மன் கோயில் சாலையில் நேற்று இரவு 10.15 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திருமலா ஃபுட்ஸ் கடையின் வாசலில் அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் ஆட்டோவில் வந்து அவரை வழிமறித்து பயங்கர ஆயுதம் கொண்டு சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கைகளில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மணிகண்டனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மயிலாப்பூர் காவல்துறையினர், மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதாக தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட மணிகண்டன் மீது இரண்டு கொலை வழக்குகள் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் வசந்த் என்பவரை கொலை செய்த வழக்கில் சிறைக்குச் சென்று ஒரு மாதத்திற்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.

மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கக்கூடிய பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

சென்னை மயிலாப்பூர் முத்துகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் என்கின்ற பொட்டை மணி (27). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகேயுள்ள முண்டக கன்னியம்மன் கோயில் சாலையில் நேற்று இரவு 10.15 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திருமலா ஃபுட்ஸ் கடையின் வாசலில் அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் ஆட்டோவில் வந்து அவரை வழிமறித்து பயங்கர ஆயுதம் கொண்டு சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கைகளில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மணிகண்டனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மயிலாப்பூர் காவல்துறையினர், மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதாக தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட மணிகண்டன் மீது இரண்டு கொலை வழக்குகள் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் வசந்த் என்பவரை கொலை செய்த வழக்கில் சிறைக்குச் சென்று ஒரு மாதத்திற்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.

மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கக்கூடிய பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.