ETV Bharat / state

கலசத்திலிருந்து நகைகளை வெளியே எடுக்கக்கூடாது - போலி சாமியார் - jewelry theft issue in chennai

சென்னை: திருமணமாகாத பெண்களுக்கு சிறப்பு பூஜை செய்வதாகக் கூறி நூதனமுறையில் நகைகளை திருடும் போலி சாமியார் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

fake-preacher
author img

By

Published : Sep 14, 2019, 4:10 PM IST

சென்னை அமைந்தகரை, பிள்ளைத்தோட்டம் பகுதியைச் சேர்த்தவர் ஆனந்தன்(24). இவர் அதே பகுதியில் தன்னை சாமியார் என்று சொல்லிக்கொண்டு திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணமாக சிறப்பு பூஜைகள் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் பூஜை செய்யும் இவர், வீட்டில் இருப்பவர்களிடம் அவர்களின் தங்க நகைகளை எடுத்துவர சொல்லி பூஜை செய்து, அதை கலசத்தில் அடைத்து, 21 நாட்களுக்கு நகைகளை வெளியில் எடுக்கக் கூடாது என கூறிவிட்டு அந்த நகைகளை நூதன முறையில் திருடி சென்றுள்ளார்.

இதையறிந்த, பொதுமக்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆனந்தன், அமைந்தகரை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறார்.

சென்னை அமைந்தகரை, பிள்ளைத்தோட்டம் பகுதியைச் சேர்த்தவர் ஆனந்தன்(24). இவர் அதே பகுதியில் தன்னை சாமியார் என்று சொல்லிக்கொண்டு திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணமாக சிறப்பு பூஜைகள் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் பூஜை செய்யும் இவர், வீட்டில் இருப்பவர்களிடம் அவர்களின் தங்க நகைகளை எடுத்துவர சொல்லி பூஜை செய்து, அதை கலசத்தில் அடைத்து, 21 நாட்களுக்கு நகைகளை வெளியில் எடுக்கக் கூடாது என கூறிவிட்டு அந்த நகைகளை நூதன முறையில் திருடி சென்றுள்ளார்.

இதையறிந்த, பொதுமக்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆனந்தன், அமைந்தகரை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறார்.

Intro:Body:திருமணமாகாத பெண்களை குறிவைத்து 100சவரன் வரை நூதன முறையில் மோசடியில் ஈடுப்பட்ட போலி சாமியார் கைது.

அமைந்தகரை பொண்ணுவேல் பிள்ளை தோட்டம் 5 வது தெரு பகுதியில் ஆனந்தன்(24).இவர் அதே பகுதியில் போலி சாமியாராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணமாகாத பெண்களுக்கு சிறப்பு பூஜை செய்வதாக கூறி வீட்டில் பூஜை செய்யும் போது தங்க நகைகளை கொண்டுவந்து பூஜையில் வைக்க சொல்லி கூறியுள்ளார்.

இந்த நகையை 21 நாள் கலசத்தில் இருந்து வெளியே எடுக்க கூடாது எனக்கூறிவிட்டு லாவகமாக திருடி சென்று
அந்த பகுதியில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி 100சவரன் நகை வரை நூதன முறையில் திருடி அதே பகுதியில் உள்ள நகை அடகு கடையில் வைத்து தான் வாங்கிய கடன் அடைக்க இந்த அடகு பணத்தை ஆனந்தன் செலவழித்துள்ளார்.

பின்னர் இவரை கைது செய்து அமைந்தகரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.