ETV Bharat / state

'வி ஆர் கம்மிங் ஃபுரம் ஐ.டி.' - கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது, இருவருக்கு வலைவீச்சு!

author img

By

Published : Jan 22, 2020, 7:39 PM IST

சென்னை: வருமானவரித் துறை அலுவலர்கள் போல் நடித்து கும்பல் ஒன்று 10 சவரன் நகை, ரூ. 1.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

வருமான வரித்துறையினர் போல் நடித்த குற்றவாளிகள்
வருமான வரித்துறையினர் போல் நடித்த குற்றவாளிகள்

சென்னை நெற்குன்றம் பல்லவன் நகர் பள்ளிக்கூடம் தெருவைச் சேர்ந்தவர் நூருல்லா (48). இவர் பூந்தமல்லி நெடுஞ்சாலைப் பகுதியில் கறிக்கடை நடத்திவருகிறார்.

கடந்த திங்கள்கிழமையன்று காலை நூருல்லா வீட்டிற்கு காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், தாங்கள் வருமானவரித் துறை அலுவலர்கள் என்று அறிமுகப்படுத்தி கொண்டுள்ளனர். பின்னர் அந்தக் கும்பல், நூரூல்லா வீட்டில் சோதனை செய்யப்போவதாகக் கூறி வீட்டினுள்ளே நுழைந்துள்ளனர்.

பின்னர், பீரோவிலிருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் 10 சவரன் நகைகளையும் எடுத்துள்ளனர். அப்போது, அதனைத் தடுத்த நூருல்லாவை, அந்தக் கும்பல் சரமாரியாகத் தாக்கிவிட்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து, நூருல்லா கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையை தொடங்கியுள்ளனர்.

குற்றவாளி செந்தில்குமார்
குற்றவாளி செந்தில்குமார்

முதற்கட்ட விசாரணையில், அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை தொடங்கினர். இதன்மூலம், தென்காசியைச் சேர்ந்த செந்தில்குமார், வெங்கடேஷ் ஆகியோரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

குற்றவாளி வெங்கடேஷ்
குற்றவாளி வெங்கடேஷ்

பின்னர், அவர்களிடமிருந்த போலி வருமானவரித் துறை அலுவலர் அடையாள அட்டைகளையும் பணம், நகைகள் உள்ளிட்டவற்றைகளையும் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். மேலும், இரண்டு குற்றவாளிகளை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆந்திரா தங்க நகை வியாபாரி வழக்கு: 4 ஈரானிய கொள்ளையர்கள் கைது!

சென்னை நெற்குன்றம் பல்லவன் நகர் பள்ளிக்கூடம் தெருவைச் சேர்ந்தவர் நூருல்லா (48). இவர் பூந்தமல்லி நெடுஞ்சாலைப் பகுதியில் கறிக்கடை நடத்திவருகிறார்.

கடந்த திங்கள்கிழமையன்று காலை நூருல்லா வீட்டிற்கு காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், தாங்கள் வருமானவரித் துறை அலுவலர்கள் என்று அறிமுகப்படுத்தி கொண்டுள்ளனர். பின்னர் அந்தக் கும்பல், நூரூல்லா வீட்டில் சோதனை செய்யப்போவதாகக் கூறி வீட்டினுள்ளே நுழைந்துள்ளனர்.

பின்னர், பீரோவிலிருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் 10 சவரன் நகைகளையும் எடுத்துள்ளனர். அப்போது, அதனைத் தடுத்த நூருல்லாவை, அந்தக் கும்பல் சரமாரியாகத் தாக்கிவிட்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து, நூருல்லா கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையை தொடங்கியுள்ளனர்.

குற்றவாளி செந்தில்குமார்
குற்றவாளி செந்தில்குமார்

முதற்கட்ட விசாரணையில், அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை தொடங்கினர். இதன்மூலம், தென்காசியைச் சேர்ந்த செந்தில்குமார், வெங்கடேஷ் ஆகியோரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

குற்றவாளி வெங்கடேஷ்
குற்றவாளி வெங்கடேஷ்

பின்னர், அவர்களிடமிருந்த போலி வருமானவரித் துறை அலுவலர் அடையாள அட்டைகளையும் பணம், நகைகள் உள்ளிட்டவற்றைகளையும் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். மேலும், இரண்டு குற்றவாளிகளை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆந்திரா தங்க நகை வியாபாரி வழக்கு: 4 ஈரானிய கொள்ளையர்கள் கைது!

Intro:Body:வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து 10 சவரன் நகை மற்றும் 1.50 பணம் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது உட்பட 4 போலி வருமான வரித்துறை அதிகாரி கைது.

சென்னை நெற்குன்றம் பல்லவன் நகர் பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்தவர் நூருல்லா(48).இவர் பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார்.

கடந்த திங்கள் காலை நூருல்லா வீட்டிற்கு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று தாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தி கொண்டனர்.பின்னர் அந்த கும்பல் நூரூல்லா வீட்டில் சோதனை செய்ய வேண்டும் கூறி சோதனையிட்டனர்.
பின்னர் பீரோவில் இருந்த 1.5 லட்சம் பணம் மற்றும் 10 சவரன் நகைகளை எடுத்துள்ளனர்.அப்போது அதை தடுத்த நூருல்லாவை அந்த கும்பல் சரமாரியாக தாக்கி விட்டு காரில் தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக நூருல்லா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கோயம்பேடு போலீசார் அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
விசாரணையில் பிடிபட்ட நபர்கள் தென்காசியை சேர்ந்த செந்தில்குமார், வெங்கடேசன் என தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து போலி வருமான வரித்துறை அதிகாரி அடையாள அட்டைகள் பணம், நகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.