ETV Bharat / state

ராணுவ அதிகாரியென்று கூறி olxல் நூதன மோசடி: ரூ. 1 லட்சத்தை இழந்தவர் புலம்பல்!

author img

By

Published : Jan 3, 2020, 12:00 AM IST

சென்னை: ராணுவ அதிகாரி என்று கூறி olx-இல் வாகனத்தை விற்க விளம்பரப்படுத்திய நபரை நம்பி ஒரு லட்சம் ரூபாய் பணத்தை இளைஞர் ஒருவர் இழந்துள்ளார்.

olx cheating  olx army man cheating  ராணுவ அதிகாரி olx ஏமாற்றம்  ராணுவ அதிகாரி மோசடி  olx vehicle cheating
ராணுவ அதிகாரியென்று கூறி olxல் நூதன மோசடி: ரூ. 1 லட்சத்தை இழந்தவர் புலம்பல்

ஆன்லைன் விற்பனை இணையதளமான OLX-இல் பிரமிள் குமார் என்பவர் தான் பல்லாவரம் ராணுவத்தில் வேலை பார்ப்பதாகவும் தான் பணியிட மாறுதல் ஆகி வேறு மாநிலத்திற்குச் செல்ல இருப்பதால்தான் பயன்படுத்திய ராணுவ நான்கு சக்கர வாகனத்தை விற்க இருப்பதாகவும் விளம்பரம் செய்திருக்கிறார்.

இதனைப் பார்த்த சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பாலமுருகன் என்ற இளைஞர் ராணுவ வாகனம் என்பதால் அதன் தரம் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், அவரைத் தொடர்பு கொண்டு இருக்கிறார்.

மேலும் விபரங்களை பாலமுருகன் கேட்கும்பொழுது தான் ராணுவத்தில் தான் வேலை பார்க்கிறேன் என்பதற்காக உறுதி செய்வதற்காக பிரமிள்குமார், ராணுவ அடையாள அட்டை மற்றும் இராணுவ சீருடையுடன் கையில் துப்பாக்கி ஏந்தி நிற்பது போன்ற பல புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.

இதையெல்லாம் பார்த்த பாலமுருகன் அவர் உண்மையான ராணுவ அதிகாரி என்று நம்பி முதல் தவணை தொகையாக இரவு 11 மணியளவில் ராணுவ வீரர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து ரூ. 5 ஆயிரம் ரூபாய் அனுப்பியிருக்கிறார்.

ராணுவ அதிகாரியென்று கூறி olxஇல் நூதன மோசடி: ரூ. 1 லட்சத்தை இழந்தவர் புலம்பல்

மறுநாள் காலையில் எழுந்து தன்னுடைய செல்போனை பார்த்த பாலமுருகன், அவரது வங்கி கணக்கிலிருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனிடையே தன்னுடைய பணம் யாருடைய வங்கிக் கணக்கிற்குச் சென்றது என்பதை பாலமுருகன் தன்னுடைய நண்பர் ஒருவரின் செல்போன் மூலம் கண்டுபிடிக்க முயன்றுள்ளார்.

நண்பரின் செல்போன் எண்ணிலிருந்து அதே பிரமிள்குமார் என்ற போலி ராணுவ அதிகாரியை OLX மூலம் தொடர்புகொண்டபோது, தனக்கு அனுப்பிய அதே அடையாள அட்டைகளை இந்த எண்களுக்கும் அனுப்பியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாலமுருகன் இவர் தான் மோசடியாக செயல்படுகிறார் என்பதை உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் தென் பிராந்திய ராணுவ தலைமை அலுவலகத்தில் புகார் அளித்துள்ள பாலமுருகன், இதே பிரமிள் குமரால் 8க்கும் மேற்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்களும் என்னைப்போலவே காவல் ஆணையரிடமும் ராணுவ தலைமை அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெண்ணிடம் செயின் பறிப்பு முயற்சி: லாவகமாக தப்பிய சிசிடிவி காட்சி வெளியீடு!

ஆன்லைன் விற்பனை இணையதளமான OLX-இல் பிரமிள் குமார் என்பவர் தான் பல்லாவரம் ராணுவத்தில் வேலை பார்ப்பதாகவும் தான் பணியிட மாறுதல் ஆகி வேறு மாநிலத்திற்குச் செல்ல இருப்பதால்தான் பயன்படுத்திய ராணுவ நான்கு சக்கர வாகனத்தை விற்க இருப்பதாகவும் விளம்பரம் செய்திருக்கிறார்.

இதனைப் பார்த்த சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பாலமுருகன் என்ற இளைஞர் ராணுவ வாகனம் என்பதால் அதன் தரம் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், அவரைத் தொடர்பு கொண்டு இருக்கிறார்.

மேலும் விபரங்களை பாலமுருகன் கேட்கும்பொழுது தான் ராணுவத்தில் தான் வேலை பார்க்கிறேன் என்பதற்காக உறுதி செய்வதற்காக பிரமிள்குமார், ராணுவ அடையாள அட்டை மற்றும் இராணுவ சீருடையுடன் கையில் துப்பாக்கி ஏந்தி நிற்பது போன்ற பல புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.

இதையெல்லாம் பார்த்த பாலமுருகன் அவர் உண்மையான ராணுவ அதிகாரி என்று நம்பி முதல் தவணை தொகையாக இரவு 11 மணியளவில் ராணுவ வீரர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து ரூ. 5 ஆயிரம் ரூபாய் அனுப்பியிருக்கிறார்.

ராணுவ அதிகாரியென்று கூறி olxஇல் நூதன மோசடி: ரூ. 1 லட்சத்தை இழந்தவர் புலம்பல்

மறுநாள் காலையில் எழுந்து தன்னுடைய செல்போனை பார்த்த பாலமுருகன், அவரது வங்கி கணக்கிலிருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனிடையே தன்னுடைய பணம் யாருடைய வங்கிக் கணக்கிற்குச் சென்றது என்பதை பாலமுருகன் தன்னுடைய நண்பர் ஒருவரின் செல்போன் மூலம் கண்டுபிடிக்க முயன்றுள்ளார்.

நண்பரின் செல்போன் எண்ணிலிருந்து அதே பிரமிள்குமார் என்ற போலி ராணுவ அதிகாரியை OLX மூலம் தொடர்புகொண்டபோது, தனக்கு அனுப்பிய அதே அடையாள அட்டைகளை இந்த எண்களுக்கும் அனுப்பியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாலமுருகன் இவர் தான் மோசடியாக செயல்படுகிறார் என்பதை உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் தென் பிராந்திய ராணுவ தலைமை அலுவலகத்தில் புகார் அளித்துள்ள பாலமுருகன், இதே பிரமிள் குமரால் 8க்கும் மேற்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்களும் என்னைப்போலவே காவல் ஆணையரிடமும் ராணுவ தலைமை அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெண்ணிடம் செயின் பறிப்பு முயற்சி: லாவகமாக தப்பிய சிசிடிவி காட்சி வெளியீடு!

Intro:Body:*பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் இருந்து பயன்படுத்தப்பட்ட வாகனங்களை OLX ல் விற்பதாக கூறி போலி ராணுவ அதிகாரி ஒருவர் மோசடியில் ஈடுபடுவதாக புகார்.!*

ஆன்லைன் விற்பனை இணைய தளமான OLX ல் பிரமிள் குமார் என்பவர் தான் பல்லாவரம் ராணுவத்தில் வேலை பார்ப்பதாகவும் தான் பணியிட மாறுதல் ஆகி வேறு மாநிலத்திற்கு செல்ல இருப்பதால் தான் பயன்படுத்திய ராணுவ இருசக்கர வாகனத்தை விற்க இருப்பதாகவும் ஓ.எல்.எக்ஸ் இல் விளம்பரம் செய்திருக்கிறார்.


இதனைப் பார்த்த சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பாலமுருகன் என்ற இளைஞர் ராணுவ வாகனம் என்பதால் அதன் தரம் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அவரை தொடர்பு கொண்டு இருக்கிறார்

மேலும் விபரங்களை பாலமுருகன் கேட்கும்பொழுது தான் ராணுவத்தில் தான் வேலை பார்க்கிறேன் என்பதற்காக உறுதி செய்வதற்காக ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மளிகை பொருளுக்கான அடையாள அட்டை, மதுபானம் வழங்குவதற்கான அடையாள அட்டை, மற்றும் இராணுவ சீருடையுடன் கையில் ஏ கே 47 துப்பாக்கி ஏந்தி நிற்பது போன்ற பல புகைப்படங்களை அனுப்பி தான் ராணுவத்தில் வேலை பார்ப்பதாக கூறி யிருக்கிறார்.

இதை எல்லாம் பார்த்த பாலமுருகன் அவர் உண்மையான ராணுவ அதிகாரி என்பதை நம்பிய பின்பு முதல் தவணை தொகையாக இரவு பதினொரு மணி அளவில் ராணுவ வீரர் அனுப்பிய கூகுள் பே கணக்கிற்கு தன்னுடைய கூகுள் பே கணக்கிலிருந்து முன்பணமாக ரூ 5,000 ரூபாய் அனுப்பி இருக்கிறார்

இதன் பின்னர் இராணுவ முத்திரையுடன் முன்பணமாக பெற்றுக்கொண்ட 5,000 ரூபாய் பணத்திற்கு ராணுவத்தில் வழங்கப்படும் ரசீதை பாலமுருகனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் பிரமிள் குமார். இதனை பார்த்த பாலமுருகன் மிகுந்த நம்பிக்கை அடைந்துள்ளார்.


இதன் பின்னர் பாலமுருகன் மறுநாள் காலையில் எழுந்து தன்னுடைய செல்போனை பார்த்த போது அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அவரது கூகுள் பே கணக்கில் இருந்து சுமார் ஒரு லட்ச ரூபாய் பணம் எடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனிடையே தன்னுடைய பணம் யாருடைய வங்கிக் கணக்கிற்கு சென்றது என்பதை பாலமுருகன் தன்னுடைய நண்பர் ஒருவரின் செல்போன் மூலம் கண்டுபிடிக்க முயன்றுள்ளார். நண்பரின் செல்போன் எண்ணில் மூலம் இருந்து அதே பிரமில்குமாரை என்ற போலி ராணுவ அதிகாரியை ஓஎல்எக்ஸ் மூலம் தொடர்புகொண்ட போது, தனக்கு அனுப்பிய அதே அடையாள அட்டைகள் இந்த எண்களுக்கும் அனுப்பப்பட்டதை கண்டு அதிர்ச்சியைந்த பாலமுருகன் இவர் தான் மோசடியாக செயல்படுகிறார் என்பதை கண்டுபிடித்திருக்கிறார். மேலும், தன்னுடைய பணத்தை இந்த நபர்தான் மோசடி செய்துள்ளார் என்பதை பாலமுருகன் உறுதி செய்துள்ளார்.


மேலும் தான் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த போது இதே போன்று இதே பிரமிள் குமரால் ஏமாற்றப்பட்ட சுமார் 8 க்கும் மேற்பட்ட நபர்கள் ஏமாற்றப்பட்டதாக புகாருடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


இதுதொடர்பாக சென்னை மன்றோ சிலை அருகே உள்ள தென் பிராந்திய ராணுவ தலைமை அலுவலகத்திலும் புகார் பாலமுருகன் அளித்த போது அங்கு உள்ள ராணுவ அதிகாரிகள் இதே போன்ற புகார்கள் கடந்த சில நாட்களாக வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பாலமுருகன் தெரிவித்தார்.

((பேட்டி : பாலமுருகன்))Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.