ETV Bharat / state

அண்ணா பல்கலைக் கழகத்தில் தேர்வுக் கட்டணம் செலுத்த காலஅவகாசம் நீட்டிப்பு

author img

By

Published : Sep 4, 2020, 3:25 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பருவத் தேர்விற்கான கட்டணத்தை செலுத்துவதற்கு காலஅவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அண்ணாப் பல்கலைக் கழகத்தின் தேர்வுக் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு
அண்ணாப் பல்கலைக் கழகத்தின் தேர்வுக் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு

அண்ணா பல்கலைக் கழகத்தின் வளாகக் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி, கட்டடக் கலை பள்ளி ஆகியவற்றில் படிக்கும் மாணவர்கள் நடப்பு பருவத்திற்கான கல்விக் கட்டணங்களை ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

தற்பொழுது மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அதனை செப்டம்பர் 19 ஆம் தேதி வரையில் நீட்டித்து அறிவித்துள்ளனர்.

அதேபோல் அண்ணா பல்கலைக் கழகத்தின் 16 உறுப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இந்தப் பருவத்திற்கான கட்டணத்தை செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கி அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் வளாகக் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி, கட்டடக் கலை பள்ளி ஆகியவற்றில் படிக்கும் மாணவர்கள் நடப்பு பருவத்திற்கான கல்விக் கட்டணங்களை ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

தற்பொழுது மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அதனை செப்டம்பர் 19 ஆம் தேதி வரையில் நீட்டித்து அறிவித்துள்ளனர்.

அதேபோல் அண்ணா பல்கலைக் கழகத்தின் 16 உறுப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இந்தப் பருவத்திற்கான கட்டணத்தை செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கி அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.