ETV Bharat / state

’சேப்பாக்கம் சேகுவேரா...’ - உதயநிதியைத் தாக்கும் ஜெயக்குமார்!

author img

By

Published : Sep 15, 2021, 2:44 PM IST

”திரைப்படத்தில் ஜாலியாக இருந்த உதயநிதியை வலுக்கட்டாயமாக சட்டப்பேரவையில் அமர வைத்தால் அவருக்கு போர் அடிக்கத்தான் செய்யும்” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

உதயநிதியை கிண்டல் செய்த முன்னாள் அமைச்சர்
உதயநிதியை கிண்டல் செய்த முன்னாள் அமைச்சர்

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளையொட்டி அண்ணாசாலையிலுள்ள அவரது சிலையின் கீழ் அலங்கரிக்கப்பட்டிருந்து திருவுருவப்படத்திற்கு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், மாஃபா. பாண்டியராஜன், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

அண்ணாவிற்கு மரியாதை
அண்ணாவிற்கு மரியாதை

இழப்பு அதிமுகவுக்கு இல்லை; பாமகவுக்கு!

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற தத்துவத்தை சொல்லி ஏழை எளிய மக்களுக்கு நல்லத்திட்டங்களை கொண்டுவந்து தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த அண்ணாவின் பிறந்தநாளில், உலக தமிழ் மக்கள் அனைவரும் அவரது நினைவில் உள்ளனர்.

அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதால் இழப்பு பாமகவுக்குதான், அதிமுகவுக்கு இல்லை. கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் அந்தந்த கட்சியின் தலைமைக்கு உண்டு.

திமுக ஆட்சி - சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!

ஆனால் பாமக அதிமுகவை விமர்சித்தால் எங்களால் ஏற்க முடியாது. விமர்சிப்பது தொடர்ந்தால் நாங்கள் பதில் விமர்சனம் செய்வோம். யாருடைய கட்டாயத்தின் பெயரில் பாமக இந்த முடிவு எடுத்தது எனத் தெரியவில்லை. எழுதப்படாத ஒப்பந்தம் இருப்பதாகத் தெரிகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் ஜெயலலிதா வழியில் பலவற்றை செய்தோம். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை திமுக கூறியுள்ளது. திமுகவினர் மக்களை மொட்டை அடித்து விட்டனர். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூறியதன் தாக்கம் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு தெரியும், உள்ளாட்சித் தேர்தல் முடிவு திமுகவுக்கு எதிராக இருக்கும். மக்கள் அதிமுகவுடன் இருக்கின்றனர்.

அதிமுகவின் உள்கட்சிப் பிரச்சனை குறித்து பேச மற்றவர்களுக்கு தகுதி கிடையாது. ஜெயலலிதா இறந்த பிறகு சின்னத்தை மீட்டோம், இடைத்தேர்தலில் வென்றோம். உள்ளாட்சி தேர்தலில் மகத்தான் வெற்றி பெறுவோம். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

'சேப்பாக்கம் சேகுவேரா...'

எம்எல்ஏ பதவி என்பது மக்களுக்கு நன்றிக்கடன்பட்டது. அதற்கு, தியாகம் செய்து போராட்டம் நடத்தி, நீண்ட நாள் அரிசியலில் இருந்து மக்களின் கஷ்ட நஷ்டம் தெரிந்திருக்க வேண்டும்.

திரைப்படத்தில் ஜாலியாக நடித்து வந்த உதயநிதியை வலுக்கட்டாயமாக சட்டப்பேரவையில் உட்கார வைத்தால் அவருக்கு போர் அடிக்கத்தான் செய்யும். உதயநிதியின் பேச்சு பேரவையை அவமதிக்கும் விதமாக அமைந்துள்ளது. 'சேப்பாக்கம் சேகுவேரா..' எங்கிருக்கிறார் என யாருக்குமே தெரியவில்லை" என்று கூறினார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி- பாமக திடீர் அறிவிப்பு

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளையொட்டி அண்ணாசாலையிலுள்ள அவரது சிலையின் கீழ் அலங்கரிக்கப்பட்டிருந்து திருவுருவப்படத்திற்கு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், மாஃபா. பாண்டியராஜன், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

அண்ணாவிற்கு மரியாதை
அண்ணாவிற்கு மரியாதை

இழப்பு அதிமுகவுக்கு இல்லை; பாமகவுக்கு!

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற தத்துவத்தை சொல்லி ஏழை எளிய மக்களுக்கு நல்லத்திட்டங்களை கொண்டுவந்து தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த அண்ணாவின் பிறந்தநாளில், உலக தமிழ் மக்கள் அனைவரும் அவரது நினைவில் உள்ளனர்.

அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதால் இழப்பு பாமகவுக்குதான், அதிமுகவுக்கு இல்லை. கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் அந்தந்த கட்சியின் தலைமைக்கு உண்டு.

திமுக ஆட்சி - சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!

ஆனால் பாமக அதிமுகவை விமர்சித்தால் எங்களால் ஏற்க முடியாது. விமர்சிப்பது தொடர்ந்தால் நாங்கள் பதில் விமர்சனம் செய்வோம். யாருடைய கட்டாயத்தின் பெயரில் பாமக இந்த முடிவு எடுத்தது எனத் தெரியவில்லை. எழுதப்படாத ஒப்பந்தம் இருப்பதாகத் தெரிகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் ஜெயலலிதா வழியில் பலவற்றை செய்தோம். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை திமுக கூறியுள்ளது. திமுகவினர் மக்களை மொட்டை அடித்து விட்டனர். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூறியதன் தாக்கம் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு தெரியும், உள்ளாட்சித் தேர்தல் முடிவு திமுகவுக்கு எதிராக இருக்கும். மக்கள் அதிமுகவுடன் இருக்கின்றனர்.

அதிமுகவின் உள்கட்சிப் பிரச்சனை குறித்து பேச மற்றவர்களுக்கு தகுதி கிடையாது. ஜெயலலிதா இறந்த பிறகு சின்னத்தை மீட்டோம், இடைத்தேர்தலில் வென்றோம். உள்ளாட்சி தேர்தலில் மகத்தான் வெற்றி பெறுவோம். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

'சேப்பாக்கம் சேகுவேரா...'

எம்எல்ஏ பதவி என்பது மக்களுக்கு நன்றிக்கடன்பட்டது. அதற்கு, தியாகம் செய்து போராட்டம் நடத்தி, நீண்ட நாள் அரிசியலில் இருந்து மக்களின் கஷ்ட நஷ்டம் தெரிந்திருக்க வேண்டும்.

திரைப்படத்தில் ஜாலியாக நடித்து வந்த உதயநிதியை வலுக்கட்டாயமாக சட்டப்பேரவையில் உட்கார வைத்தால் அவருக்கு போர் அடிக்கத்தான் செய்யும். உதயநிதியின் பேச்சு பேரவையை அவமதிக்கும் விதமாக அமைந்துள்ளது. 'சேப்பாக்கம் சேகுவேரா..' எங்கிருக்கிறார் என யாருக்குமே தெரியவில்லை" என்று கூறினார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி- பாமக திடீர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.