ETV Bharat / state

10 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 10am

author img

By

Published : May 24, 2020, 9:51 AM IST

ஈடிவி பாரத்தின் 10 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-10-am
etv-bharat-top10-news-10-am

இந்தியா-சீனா சச்சரவு- எல்லையில் ராணுவம் குவிப்பு

டெல்லி : எல்லைப் பிரச்னை காரணமாக இந்தியா-சீனா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு அருகே இருதரப்பினரும் தங்களது படையினரைக் குவித்துள்ளனர்.

ஒரு லட்சம் கோடி வேண்டும் - மத்திய அரசுக்கு மம்தா வலியுறுத்தல்

கொல்கத்தா : ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் நிவாரண, மறுசீரமைப்பு, புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ஒரு லட்சம் கோடி வழங்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

இரண்டாயிரத்து 600 ரயில்கள் அடுத்த 10 நாட்களில் இயக்கப்படும் - ரயில்வே துறை

டெல்லி: இரண்டாயிரத்து 600 ஷ்ராமிக் ரயில்கள் வரும் நாட்களில் இயக்கப்பட்டு 36 லட்சம் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

ஆம்பன் புயலால் கரோனா கணக்கெடுக்கும் பணியில் தொய்வு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயலின் தாக்கத்தால் கரோனா வைரஸ் பரிசோதனை அளவு மாநிலத்தில் பாதியாக குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஏறிக் கொண்டே போகும் காவல் துறையின் அபராத தொகை!

சென்னை: ஊரடங்கை மீறியதாக காவல்துறையினரால் வசூலிக்கப்பட்ட அபராத தொகை ரூ. 7 கோடியை தாண்டியது.

தமிழ்நாட்டில் மே 25 ரமலான் பண்டிகை: தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ரமலான் பண்டிகை, திங்கள்கிழமையன்று கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஐபிஎம்!

சான் பிரான்சிஸ்கோ: கரோனா பாதிப்பால் தொழிலின் வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் 1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக ஐபிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலக முடிவு

வாஷிங்டன் : ஓபன் ஸ்கைஸ் என்ற சர்வதேச பாதுகாப்பு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க அரசு தன்னிச்சையாக வெளியேற முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்த கருவி மூலம் பறவைக் காய்ச்சலை 20 நிமிடங்களில் கண்டுபிடிக்க முடியும்!

ரத்த மாதிரிகளைக் கொண்டு பறவைக் காய்ச்சலுக்கு எதிரான ஆன்டிபாடிகளை 20 நிமிடங்களில் கண்டறியும் பரிசோதனை கருவியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கரோனா பரவலிருந்து தப்பிக்க புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் அமைப்புகள்

ஹைதராபாத்: கிருமிகள் பரவலிலிருந்து மக்களை காத்துக்கொள்ள உருவாக்கப்பட்ட சில புதிய கண்டுபிடிப்புகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்தியா-சீனா சச்சரவு- எல்லையில் ராணுவம் குவிப்பு

டெல்லி : எல்லைப் பிரச்னை காரணமாக இந்தியா-சீனா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு அருகே இருதரப்பினரும் தங்களது படையினரைக் குவித்துள்ளனர்.

ஒரு லட்சம் கோடி வேண்டும் - மத்திய அரசுக்கு மம்தா வலியுறுத்தல்

கொல்கத்தா : ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் நிவாரண, மறுசீரமைப்பு, புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ஒரு லட்சம் கோடி வழங்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

இரண்டாயிரத்து 600 ரயில்கள் அடுத்த 10 நாட்களில் இயக்கப்படும் - ரயில்வே துறை

டெல்லி: இரண்டாயிரத்து 600 ஷ்ராமிக் ரயில்கள் வரும் நாட்களில் இயக்கப்பட்டு 36 லட்சம் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

ஆம்பன் புயலால் கரோனா கணக்கெடுக்கும் பணியில் தொய்வு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயலின் தாக்கத்தால் கரோனா வைரஸ் பரிசோதனை அளவு மாநிலத்தில் பாதியாக குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஏறிக் கொண்டே போகும் காவல் துறையின் அபராத தொகை!

சென்னை: ஊரடங்கை மீறியதாக காவல்துறையினரால் வசூலிக்கப்பட்ட அபராத தொகை ரூ. 7 கோடியை தாண்டியது.

தமிழ்நாட்டில் மே 25 ரமலான் பண்டிகை: தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ரமலான் பண்டிகை, திங்கள்கிழமையன்று கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஐபிஎம்!

சான் பிரான்சிஸ்கோ: கரோனா பாதிப்பால் தொழிலின் வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் 1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக ஐபிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலக முடிவு

வாஷிங்டன் : ஓபன் ஸ்கைஸ் என்ற சர்வதேச பாதுகாப்பு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க அரசு தன்னிச்சையாக வெளியேற முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்த கருவி மூலம் பறவைக் காய்ச்சலை 20 நிமிடங்களில் கண்டுபிடிக்க முடியும்!

ரத்த மாதிரிகளைக் கொண்டு பறவைக் காய்ச்சலுக்கு எதிரான ஆன்டிபாடிகளை 20 நிமிடங்களில் கண்டறியும் பரிசோதனை கருவியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கரோனா பரவலிருந்து தப்பிக்க புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் அமைப்புகள்

ஹைதராபாத்: கிருமிகள் பரவலிலிருந்து மக்களை காத்துக்கொள்ள உருவாக்கப்பட்ட சில புதிய கண்டுபிடிப்புகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.