ETV Bharat / state

’12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்து புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முயலும் மத்திய அரசு’ - உயர்கல்வியில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு

சென்னை: ”புதிய தேசியக் கல்விக் கொள்கையின் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு என்பதை நடைமுறைப்படுத்தும் செயலாக தான், மத்திய அரசின் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து அறிவிப்பைப் பார்க்கிறோம்” என கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.

உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை
உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை
author img

By

Published : Jun 2, 2021, 9:58 PM IST

Updated : Jun 2, 2021, 11:05 PM IST

பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், "மத்திய அரசு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பொதுத்தேர்வினை ரத்து செய்துள்ளது.

மாணவர்களின் நலன் கருதி தேர்வினை ரத்துச் செய்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் மாணவர்கள் நீட் தேர்வினை எழுத வேண்டும். மேலும் பல்வேறு தகுதி, நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும். இந்தத் தேர்வினை எழுதினால் நோய்த் தொற்று வராதா? மத்திய அரசிற்கு மாணவர்கள்மீது அக்கறை இருந்தால் முதலில் ரத்துச் செய்திருக்க வேண்டியது நீட் தேர்வைத்தான். மருத்துவப் படிப்பிற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நீட் தேர்வு இல்லாமல் தான் கல்லூரிகளில் சேர்ந்தனர். அந்த மாணவர்கள் தற்போதைய கரோனா காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

புதிய தேசியக் கல்விக் கொள்கையில் உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு என்பதை நடைமுறைப்படுத்தும் செயலாகத்தான் மத்திய அரசின் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து என்பதைப் பார்க்கிறோம்.

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்து போல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வினை நடத்திட வேண்டும். கரோனா நோய்த் தொற்று குறைந்த பின்னர் ஜூலை மாதம் இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் மாதத்திலோ தேர்வினை நடத்தலாம். தேர்விற்கு ஒரு மாதம் முன்னர் தேர்வுக்கால அட்டவணையை அளிக்க வேண்டும். 15 நாள்கள் நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு

தேர்வு எழுதுவதில் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதற்காக அவர்கள் படிக்கும் பள்ளியில் எழுதலாம். மாணவர்கள் படித்த பள்ளி இருக்கும் ஊரில் இருந்து சொந்த ஊருக்கு சென்றிருந்தால் அந்த ஊரிலேயே தேர்வு எழுத அனுமதிக்கலாம். ஆசிரியர்கள் இருக்கும் ஊரிலேயே தேர்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தலாம்.

12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்து விட்டு, கல்லூரியில் மாணவர்கள் சேர்வதற்கு தேர்வினை நடத்தினால் மத்திய அரசின் சூழ்ச்சிக்கு இடம் கொடுப்பது போல் அமைந்துவிடும். மாணவர்கள் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்கும்போது, 12ஆம் வகுப்பு தேர்வு நடத்துவதற்கான காரணங்களை எடுத்துக் கூறி கருத்துக் கேட்க வேண்டும். தேர்வு நடக்கும் என்ற உறுதியான அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு மாணவர், பெற்றோர் நலச் சங்கத்தின் தலைவர் அருமைநாதன் இது குறித்து கூறும்போது, “தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தில் பயின்றுவரும் மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும். நோய்த் தொற்றின் தாக்கம் குறைந்த பிறகு தேர்வு நடத்தலாம். தேர்வுத் தேதியை பின்னர் வெளியிடலாம். மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெளிவை ஏற்படுத்தும் வகையில், தேர்வு நடக்கும் என்ற திட்டவட்டமான அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும்” என்றார்.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், "மத்திய அரசு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பொதுத்தேர்வினை ரத்து செய்துள்ளது.

மாணவர்களின் நலன் கருதி தேர்வினை ரத்துச் செய்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் மாணவர்கள் நீட் தேர்வினை எழுத வேண்டும். மேலும் பல்வேறு தகுதி, நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும். இந்தத் தேர்வினை எழுதினால் நோய்த் தொற்று வராதா? மத்திய அரசிற்கு மாணவர்கள்மீது அக்கறை இருந்தால் முதலில் ரத்துச் செய்திருக்க வேண்டியது நீட் தேர்வைத்தான். மருத்துவப் படிப்பிற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நீட் தேர்வு இல்லாமல் தான் கல்லூரிகளில் சேர்ந்தனர். அந்த மாணவர்கள் தற்போதைய கரோனா காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

புதிய தேசியக் கல்விக் கொள்கையில் உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு என்பதை நடைமுறைப்படுத்தும் செயலாகத்தான் மத்திய அரசின் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து என்பதைப் பார்க்கிறோம்.

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்து போல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வினை நடத்திட வேண்டும். கரோனா நோய்த் தொற்று குறைந்த பின்னர் ஜூலை மாதம் இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் மாதத்திலோ தேர்வினை நடத்தலாம். தேர்விற்கு ஒரு மாதம் முன்னர் தேர்வுக்கால அட்டவணையை அளிக்க வேண்டும். 15 நாள்கள் நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு

தேர்வு எழுதுவதில் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதற்காக அவர்கள் படிக்கும் பள்ளியில் எழுதலாம். மாணவர்கள் படித்த பள்ளி இருக்கும் ஊரில் இருந்து சொந்த ஊருக்கு சென்றிருந்தால் அந்த ஊரிலேயே தேர்வு எழுத அனுமதிக்கலாம். ஆசிரியர்கள் இருக்கும் ஊரிலேயே தேர்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தலாம்.

12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்து விட்டு, கல்லூரியில் மாணவர்கள் சேர்வதற்கு தேர்வினை நடத்தினால் மத்திய அரசின் சூழ்ச்சிக்கு இடம் கொடுப்பது போல் அமைந்துவிடும். மாணவர்கள் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்கும்போது, 12ஆம் வகுப்பு தேர்வு நடத்துவதற்கான காரணங்களை எடுத்துக் கூறி கருத்துக் கேட்க வேண்டும். தேர்வு நடக்கும் என்ற உறுதியான அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு மாணவர், பெற்றோர் நலச் சங்கத்தின் தலைவர் அருமைநாதன் இது குறித்து கூறும்போது, “தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தில் பயின்றுவரும் மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும். நோய்த் தொற்றின் தாக்கம் குறைந்த பிறகு தேர்வு நடத்தலாம். தேர்வுத் தேதியை பின்னர் வெளியிடலாம். மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெளிவை ஏற்படுத்தும் வகையில், தேர்வு நடக்கும் என்ற திட்டவட்டமான அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும்” என்றார்.

Last Updated : Jun 2, 2021, 11:05 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.