ETV Bharat / state

மின்சார ரயில் சேவைகள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு - ஃபோனி புயல்

சென்னை: பல்வேறு பராமரிப்பு பணிகள்  காரணமாக நாளை (மே 5) மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

File pic
author img

By

Published : May 4, 2019, 1:45 PM IST

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துளதாவது, சென்னை மூர்மார்கெட்டில் இருந்து வில்லிவாக்கம் வரையிலும், சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரையிலும் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நாளை (மே 5) நடைபெற உள்ளன.

இதனால், மூர்மார்க்கெட்டில் இருந்து திருத்தணி வரை இயக்கப்படும் மின்சார ரயில் மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி வரை ரத்து செய்யப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு ஆவடி முதல் திருத்தணி வரை இயக்கப்படுகிறது.

மேலும் அரக்கோணம் முதல் மூர்மார்க்கெட் வரையும், திருவள்ளூர் முதல் மூர்மார்க்கெட் வரையும், பட்டாபிராம் முதல் மூர்மார்க்கெட் வரையும், திருத்தணி முதல் மூர்மார்க்கெட் வரையும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு ஆவடி வரை இயக்கப்படுகிறது.

வேளச்சேரிக்கு சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 2. 00 மணி முதல் ரயில்கள் இயக்கப்படும். அதேபோல், வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரை பிற்பகல் 2.10 மணி முதல் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், ஃபோனி புயல் காரணமாக திப்ரூகர்-தாம்பரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் நாளையும், முஷார்பூர்-யஷ்வந்த்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் 6ஆம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துளதாவது, சென்னை மூர்மார்கெட்டில் இருந்து வில்லிவாக்கம் வரையிலும், சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரையிலும் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நாளை (மே 5) நடைபெற உள்ளன.

இதனால், மூர்மார்க்கெட்டில் இருந்து திருத்தணி வரை இயக்கப்படும் மின்சார ரயில் மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி வரை ரத்து செய்யப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு ஆவடி முதல் திருத்தணி வரை இயக்கப்படுகிறது.

மேலும் அரக்கோணம் முதல் மூர்மார்க்கெட் வரையும், திருவள்ளூர் முதல் மூர்மார்க்கெட் வரையும், பட்டாபிராம் முதல் மூர்மார்க்கெட் வரையும், திருத்தணி முதல் மூர்மார்க்கெட் வரையும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு ஆவடி வரை இயக்கப்படுகிறது.

வேளச்சேரிக்கு சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 2. 00 மணி முதல் ரயில்கள் இயக்கப்படும். அதேபோல், வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரை பிற்பகல் 2.10 மணி முதல் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், ஃபோனி புயல் காரணமாக திப்ரூகர்-தாம்பரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் நாளையும், முஷார்பூர்-யஷ்வந்த்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் 6ஆம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

24 மின்சார ரயில் சேவைகள் ரத்து - ரயில்வே அறிவிப்பு 

சென்னை மூர்மார்கெட்டில் இருந்து வில்லிவாக்கம் வரையிலும், சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரையிலும் பல்வேறு பராமரிப்பு பணிகள்  காரணமாக நாளை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துளதாவது :  மூர்மார்க்கெட்டில் இருந்து திருத்தணி வரை இயக்கப்படும் மின்சார ரயில் மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி வரை ரத்து செய்யப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு ஆவடி முதல் திருத்தணி வரை இயக்கப்படுகிறது. 

மேலும் அரக்கோணம் முதல் மூர்மார்க்கெட் வரையும், திருவள்ளூர் முதல் மூர்மார்க்கெட் வரையும், பட்டாபிராம் முதல் மூர்மார்க்கெட் வரையும், திருத்தணி முதல் மூர்மார்க்கெட் வரையும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு ஆவடி வரை இயக்கப்படுகிறது.

மதியம்  1.50 மணிக்கு ஆவடி- பட்டாபிராம் சைட்டிங் வரையும், காலை 9.45 மணிக்கு மூர்மார்க்கெட்- அரக்கோணம் வரையும், காலை 8.50, 11.55, 1.50, 2.25 மணிக்கு அரக்கோணம்- திருத்தணி வரையும், பிற்பகல் 1.15 மணிக்கு திருவள்ளூர்-மூர்மார்க்கெட் வரையும், காலை 11.45 மணிக்கு ஆவடி- அரக்கோணம் வரையும் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 

கும்மிடிப்பூண்டி- சென்னை கடற்கரை இடையே கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 8.50 மணிக்கு இயக்கப்படும் ரயில் கடற்கரை ரயில் நிலையத்திற்கு பதில் மூர்மார்க்கெட் ரயில் நிலையத்திற்கு சென்றடையும். அதேப்போல், அரக்கோணம்- மூர்மார்க்கெட் இடையே இயக்கப்படும் மின்சார ரயில் அரக்கோணத்தில் இருந்து காலை 10.50 மணிக்கு புறப்படும் ரயில் பட்டாபிராம்- மூர்மார்க்கெட் இடையே விரைவு ரயிலாக இயக்கப்படும். 
மேலும், பானி புயல்  காரணமாக திப்ரூகர்-தாம்பரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் நாளையும்,  முஷார்பூர்-யஷ்வந்த்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் 6ம் தேதியும் ரத்து  செய்யப்படுகிறது என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

வேளச்சேரி மார்க்கமாக 
சென்னை கடற்கரையில் இருந்து நாளை காலை  8.00, 8.20, 8.40, 9.00, 9.20, 9.40, 9.50, 10.00, 10.20, 10.40, 11.00, 11.20, 11.40,  12.00, 12.20, 12.40, 1.00, 1.20, 1.40 ஆகிய நேரங்களில் வேளச்சேரிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து  செய்யப்படுகிறது எனவும் பிற்பகல் 2. 00 மணி முதல் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு ரயில்கள் இயக்கப்படும். 
அதேப்போல்,  வேளச்சேரியில் இருந்து காலை 8.10, 8.30, 8.50, 9.10, 9.30, 9.50, 10.10, 10.30, 10.40, 10.50,  11.10, 11.30, 11.50, 12.10, 12.30, 12.50, 1.10, 1.30 மற்றும் 1.50 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து  செய்யப்படுகிறது. பிற்பகல் 2.10 மணி முதல் வேளச்சேரி- சென்னை கடற்கரை இடையே ரயில்கள் இயக்கப்படும்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.