ETV Bharat / state

மலேசிய சபாநாயகருடன் பேசியது 'மகிழ்ச்சி': கல்விச் சுற்றுலா மாணவர்கள்

சென்னை: மலேசியாவில் தமிழுடன் ஆங்கிலம் கலக்காமல் பேசுவது தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமையாக இருந்தது என்று மலேசியாவிற்கு கல்விச் சுற்றுலா சென்ற மாணவர்கள் தெரிவித்தனர்.

author img

By

Published : May 15, 2019, 9:39 AM IST

File pic

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பாக பள்ளி மாணவர்கள் வெளிநாட்டிற்கு கல்விச் சுற்றுலா செல்லும் திட்டத்தில் 25 மாணவர்கள் சிங்கப்பூர், மலேசியாவிற்கு கல்விச் சுற்றுலா சென்று சென்னை திரும்பினர்.

மாணவர்களை பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், மலேசியாவின் முன்னாள் கல்வித் துறை துணை அமைச்சர் கமலநாதன், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் ஆகியோர் வாழ்த்தி வரவேற்றனர்.
இதனையடுத்து கல்விச் சுற்றுலா பற்றிய தங்கள் அனுபவத்தை மாணவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

மலேசிய தமிழ் மாணவர்கள் தமிழில் நம்மை விடச் சிறந்தவர்களாக உள்ளனர். தமிழ் பள்ளிகளில் தமிழ் புலவர்களின் படங்களை பெரிய அளவில் பார்க்கலாம். இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பெருமையாகும்.

கல்விச் சுற்றுலா மாணவர்கள்

தமிழ்நாட்டை விட மலேசியாவில் எங்குப் பார்த்தாலும் பசுமையாக இருந்தது. அதேபோல் நாமும் அதிகளவில் மரங்களை வளர்த்து பசுமையை காக்க வேண்டும். அங்கு தூய்மையை அனைவரும் கடைப்பிடிக்கின்றனர். அதேபோல் நாமும் இருக்க வேண்டும். தமிழ் மொழியையும் தமிழ் பாரம்பரியத்தையும் நன்கு பேணி காக்கிறார்கள்.

மலேசியாவில் உள்ள ஒரு தமிழ் பள்ளியில் அப்துல் கலாம், சீனிவாச ராமானுஜம் போன்ற பெயர்கள் வைக்கப்பட்டிருந்தது. மலேசியாவில் தமிழுடன் ஆங்கிலம் கலக்காமல் பேசுவது தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமையாக இருந்தது.

மேலும் மலேசிய நாடாளுமன்ற சபாநாயகருடன் கலந்துரையாடும் மிகப்பெரும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. நாங்கள் அவருடன் சமமாக அமர்ந்து பேசினோம். அவர் எங்களுக்கு பரிசு அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் நாம் அமர்ந்து பேச முடியாது என மாணவர்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பாக பள்ளி மாணவர்கள் வெளிநாட்டிற்கு கல்விச் சுற்றுலா செல்லும் திட்டத்தில் 25 மாணவர்கள் சிங்கப்பூர், மலேசியாவிற்கு கல்விச் சுற்றுலா சென்று சென்னை திரும்பினர்.

மாணவர்களை பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், மலேசியாவின் முன்னாள் கல்வித் துறை துணை அமைச்சர் கமலநாதன், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் ஆகியோர் வாழ்த்தி வரவேற்றனர்.
இதனையடுத்து கல்விச் சுற்றுலா பற்றிய தங்கள் அனுபவத்தை மாணவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

மலேசிய தமிழ் மாணவர்கள் தமிழில் நம்மை விடச் சிறந்தவர்களாக உள்ளனர். தமிழ் பள்ளிகளில் தமிழ் புலவர்களின் படங்களை பெரிய அளவில் பார்க்கலாம். இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பெருமையாகும்.

கல்விச் சுற்றுலா மாணவர்கள்

தமிழ்நாட்டை விட மலேசியாவில் எங்குப் பார்த்தாலும் பசுமையாக இருந்தது. அதேபோல் நாமும் அதிகளவில் மரங்களை வளர்த்து பசுமையை காக்க வேண்டும். அங்கு தூய்மையை அனைவரும் கடைப்பிடிக்கின்றனர். அதேபோல் நாமும் இருக்க வேண்டும். தமிழ் மொழியையும் தமிழ் பாரம்பரியத்தையும் நன்கு பேணி காக்கிறார்கள்.

மலேசியாவில் உள்ள ஒரு தமிழ் பள்ளியில் அப்துல் கலாம், சீனிவாச ராமானுஜம் போன்ற பெயர்கள் வைக்கப்பட்டிருந்தது. மலேசியாவில் தமிழுடன் ஆங்கிலம் கலக்காமல் பேசுவது தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமையாக இருந்தது.

மேலும் மலேசிய நாடாளுமன்ற சபாநாயகருடன் கலந்துரையாடும் மிகப்பெரும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. நாங்கள் அவருடன் சமமாக அமர்ந்து பேசினோம். அவர் எங்களுக்கு பரிசு அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் நாம் அமர்ந்து பேச முடியாது என மாணவர்கள் தெரிவித்தனர்.

Intro:மலேசிய சபாநாயகருடன் பேசியது நெகிழ்ச்சி
மனம் திறந்த வெளிநாடு கல்விச் சுற்றுலா மாணவர்கள்




Body:சென்னை, தமிழக பள்ளிக்கல்வித் துறையின் திட்டமான மாணவர்கள் வெளிநாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்லும் திட்டத்திற்கு 25 மாணவர்கள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கல்வி சுற்றுலா சென்று சென்னை திரும்பினர்.
மாணவர்களை பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், மலேசியாவின் முன்னாள் கல்வித் துறை துணை அமைச்சர் கமலநாதன், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் ஆகியோர் வாழ்த்தி வரவேற்றனர்.
மலேசியாவிற்கு கல்விச் சுற்றுலா சென்று திரும்பிய மாணவர்கள் தங்கள் அனுபவத்தை தெரிவித்தனர்.
மே 3-ம் தேதி முதல் 14ம் தேதி வரை மலேசியா மற்றும் சிங்கப்பூர் கல்வி சுற்றுலா சென்று வந்தோம். மலேசியாவிலுள்ள டுவின் டவர் எனப்படும் 86 மாட்டிக்கொண்ட கட்டிடத்தின் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டில் உள்ள மாணவரும் சென்று பார்த்து வந்துள்ளேன். அங்குள்ள தமிழ் மாணவர்கள் தமிழில் நம்மை விடச் சிறந்தவர்களாக உள்ளனர். தமிழ் பள்ளிகளில் தமிழ் புலவர்களின் படங்களை பெரிய அளவில் பார்க்கலாம். இது தமிழகத்திற்கு மிகப்பெரிய பெருமையாகும்.

மலேசிய பாராளுமன்றத்தில் எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவில் உள்ள பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் நாம் அமர்ந்து பேச முடியாது. சபாநாயகருடன் வட்டமேஜை மாநாட்டில் அமர்ந்து பேசுவது போல் சமமாக அமர்ந்து பேசினோம். அவர் எங்களுக்கு பரிசாக அளித்த தொகை அதிக நெகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தைவிட மலேசியாவில் எங்கு பார்த்தாலும் பசுமையாக இருந்தது. அதேபோல் நாமும் அதிகளவில் மரங்களை வளர்த்து பசுமையை காக்க வேண்டும். அங்கு தூய்மையை அனைவரும் கடைபிடிக்கின்றனர். அதேபோல் நாமும் இருக்க வேண்டும்.
தமிழ் மொழியும் தமிழ் பாரம்பரியத்தையும் நன்கு பேணி காக்கிறார்கள். தமிழகத்தில் இருந்து நாம் தமிழ் பேச வெட்கப்படுகிறோம். ஆனால் மலேசியாவில் தூய தமிழில் பேசுகின்றனர். அது பெருமையாக இருந்தது.

மலேசியாவில் உள்ள ஒரு தமிழ் பள்ளியில் அப்துல் கலாம், சீனிவாச ராமானுஜம் போன்ற பெயர்கள் வைக்கப்பட்டிருந்தது. அங்குள்ள தமிழ் பள்ளிகளில் தமிழை விரும்பி முழுமையாக கற்று வருகின்றனர். தமிழகத்தில் தமிழ்வழியில் கற்றாலும் ஆங்கிலத்தில் முதன்மையாக கற்கிறோம். மலேசியாவில் தமிழுடன் ஆங்கிலம் கலக்காமல் பேசுவது தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமையாக இருந்தது என மாணவர்கள் கூறினர்.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.