ETV Bharat / state

கிராம சபையில் கல்வி அலுவலர்கள் கலந்துகொள்ள உத்தரவு

author img

By

Published : Sep 30, 2021, 10:54 PM IST

சென்னை: அக்டோபர் இரண்டாம் தேதி நடக்கவிருக்கும் கிராம சபை கூட்டத்தில் அனைத்து நிலை கல்வி அலுவலர்கள் கலந்துகொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

கிராம சபை
கிராம சபை

தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 26 (குடியரசு தினம்), மே 1 (உழைப்பாளர் தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி) ஆகிய நான்கு நாட்களில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் கரோனா பரவலால் கிராம சபை கூட்டம் நடக்காமல் இருந்தது. இச்சூழலில் அக்டோபர் இரண்டாம் தேதி கரோனா வழிகாட்டுதல் நெறிமுறையுடன் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதியளித்தது.

இந்நிலையில், நடக்கவிருக்கும் கிராம சபையில் அனைத்து நிலை கல்வி அலுவலர்கள் கலந்துகொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி இழப்பு குறைப்பதற்கு தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் " மக்கள் பள்ளி என்கிற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதன் தொடர்ச்சியாக , பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் கடிதத்தின் படி , எதிர்வருகின்ற அக்டோபர் 2 , 2021 அன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் பள்ளிக் கல்வி சார்ந்து விவாதிக்கப்பட உள்ள கூட்டப்பொருளோடு , இந்த மக்கள் பள்ளித் திட்டமானது அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி நலனுக்காக செயல்படுத்தப்பட உள்ளது என்பது சார்ந்த கூட்டப்பொருளையும் தவறாது சேர்த்து , கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு , அக்டோபர் 2 , 2021 அன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் அனைத்து நிலை கல்வி அலுவலர்களும் ( CEO , DEO , DIET- Principal and Facuities , BEO , ADPC , APO , HMs , EDCS , DCs and BRTES ) கிராம சபை கூட்டங்களில் கண்டிப்பாக கலந்து கொண்டு இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதற்கான ஆலோசனைகளை வழங்கி அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களும் இத்திட்டத்தின் வாயிலாகப் பயனடைவதை உறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எனவே , இந்நிகழ்வினை சிறப்பு கவனத்துடன் கண்காணித்திட உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 26 (குடியரசு தினம்), மே 1 (உழைப்பாளர் தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி) ஆகிய நான்கு நாட்களில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் கரோனா பரவலால் கிராம சபை கூட்டம் நடக்காமல் இருந்தது. இச்சூழலில் அக்டோபர் இரண்டாம் தேதி கரோனா வழிகாட்டுதல் நெறிமுறையுடன் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதியளித்தது.

இந்நிலையில், நடக்கவிருக்கும் கிராம சபையில் அனைத்து நிலை கல்வி அலுவலர்கள் கலந்துகொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி இழப்பு குறைப்பதற்கு தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் " மக்கள் பள்ளி என்கிற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதன் தொடர்ச்சியாக , பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் கடிதத்தின் படி , எதிர்வருகின்ற அக்டோபர் 2 , 2021 அன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் பள்ளிக் கல்வி சார்ந்து விவாதிக்கப்பட உள்ள கூட்டப்பொருளோடு , இந்த மக்கள் பள்ளித் திட்டமானது அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி நலனுக்காக செயல்படுத்தப்பட உள்ளது என்பது சார்ந்த கூட்டப்பொருளையும் தவறாது சேர்த்து , கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு , அக்டோபர் 2 , 2021 அன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் அனைத்து நிலை கல்வி அலுவலர்களும் ( CEO , DEO , DIET- Principal and Facuities , BEO , ADPC , APO , HMs , EDCS , DCs and BRTES ) கிராம சபை கூட்டங்களில் கண்டிப்பாக கலந்து கொண்டு இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதற்கான ஆலோசனைகளை வழங்கி அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களும் இத்திட்டத்தின் வாயிலாகப் பயனடைவதை உறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எனவே , இந்நிகழ்வினை சிறப்பு கவனத்துடன் கண்காணித்திட உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.