ETV Bharat / state

மின் ஆளுமை விருது பெற்ற தமிழ்நாடு அரசு! - நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கௌரவ கிராம சபை விருது

ஊராட்சி நிர்வாகத்தில் தகவல் மற்றும் தொழில்நுட்ப முறைகளை திறம்பட செயல்படுத்தியமைக்காக தேசிய அளவில் தமிழ்நாடு இரண்டாவதாக தெரிவு செய்யப்பட்டு, மத்திய ஊராட்சி அமைச்சகத்தால் தமிழ்நாடு அரசிற்கு 2018–19ஆம் ஆண்டிற்கான மின் ஆளுமை விருது வழங்கப்பட்டது.

மின் ஆளுமை விருதுபெற்ற தமிழ்நாடு அரசு
மின் ஆளுமை விருதுபெற்ற தமிழ்நாடு அரசு
author img

By

Published : Sep 21, 2020, 3:10 AM IST

சென்னை: 2018-19ஆம் ஆண்டிற்கான மின் ஆளுமை விருது (e-Panchayat Puraskar) மற்றும் பாராட்டுச் சான்றிதழை காண்பித்து முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி.

ஊராட்சி நிர்வாகத்தில் தகவல் மற்றும் தொழில்நுட்ப முறைகளை திறம்பட செயல்படுத்தியமைக்காக தேசிய அளவில் தமிழ்நாடு இரண்டாவதாக தெரிவு செய்யப்பட்டு, மத்திய ஊராட்சி அமைச்சகத்தால் தமிழ்நாடு அரசிற்கு வழங்கப்பட்ட 2018–19ஆம் ஆண்டிற்கான மின் ஆளுமை விருதையும் பாராட்டுச் சான்றிதழையும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமியிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

மேலும், ஊராட்சி அமைப்புகளின் சிறந்த முயற்சிகளையும், செயல்பாடுகளையும் ஊக்குவிக்கும் வகையில் 2018–19ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் ஊராட்சி அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தீன் தயாள் உபாத்யாய ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருது பெற்ற தருமபுரி மாவட்ட ஊராட்சி, திருமங்கலம் மற்றும் கொங்கணாபுரம் வட்டார ஊராட்சிகள், ஆண்டாங்கோவில் கிழக்கு, குருமந்தூர், அம்புகோவில், நெடுங்கல், இக்கரை பொழுவாம்பட்டி மற்றும் மேவளூர்குப்பம் கிராம ஊராட்சிகள், நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கௌரவ கிராம சபை தேசிய விருது பெற்ற களவனூர் கிராம ஊராட்சி, கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்ட தேசிய விருது பெற்ற டி.சி. கண்டிகை கிராம ஊராட்சி, குழந்தை நேய கிராம ஊராட்சிக்கான தேசிய விருது பெற்ற அனுமந்தபுரம் கிராம ஊராட்சி ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் தனி அலுவலர்கள் முதலமைச்சரை சந்தித்து விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்கள்.

ஊராட்சி அமைப்புகளின் சிறந்த முயற்சிகளையும், செயல்பாடுகளையும் ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் ஊராட்சி அமைச்சகம் ஆண்டுதோறும் பல்வேறு இனங்களின் கீழ், மாவட்ட ஊராட்சி, வட்டார ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சி ஆகிய மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளுக்கு ஊக்கத் தொகையுடன் கூடிய விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தி வருகிறது.

6 கிராம ஊராட்சி விருதுகள்

அந்த வகையில் 2018–19ஆம் ஆண்டிற்கான தீன் தயாள் உபாத்யாய ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருதுகளின் கீழ், சிறந்த மாவட்ட ஊராட்சி விருது – தருமபுரி மாவட்டத்திற்கும், சிறந்த வட்டார ஊராட்சி விருதுகள் – சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம்; மதுரை மாவட்டம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கும், சிறந்த கிராம ஊராட்சி விருதுகள் – கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் (கிழக்கு) கிராம ஊராட்சி, ஈரோடு மாவட்டம், குருமந்தூர் கிராம ஊராட்சி, புதுக்கோட்டை மாவட்டம், அம்புகோவில் கிராம ஊராட்சி, கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுங்கல் கிராம ஊராட்சி, கோயம்புத்தூர் மாவட்டம், இக்கரை பொழுவாம்பட்டி கிராம ஊராட்சி, காஞ்சிபுரம் மாவட்டம், மேவளூர்குப்பம் கிராம ஊராட்சி ஆகிய ஆறு கிராம ஊராட்சிகளுக்கும் வழங்கப்பட்டது.

ஊரகப் பகுதி மக்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்களை வலுவான கிராம சபையின் பங்களிப்புடன் செயல்படுத்தியமைக்கான நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கௌரவ கிராம சபை விருது கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த களவனூர் கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டது.

கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தினை திறம்பட தயாரித்ததில் சிறப்பாக செயலாற்றியமைக்கான கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்ட தேசிய விருது திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த டி.சி. கண்டிகை கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டது.

கிராமப்புற குழந்தைகளின் நலனைப் பேணும் வகையிலான வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்கான, குழந்தை நேய கிராம ஊராட்சிக்கான தேசிய விருது விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த அனுமந்தபுரம் கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டது.

மேற்கண்ட விருதுகளை பெற்ற தருமபுரி மாவட்ட ஊராட்சித் தலைவர் எம். யசோதா, திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஜெ. லதா, கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கரட்டூர் கே.கே. மணி, ஆண்டாங்கோவில் கிழக்கு கிராம ஊராட்சித் தலைவர் எஸ். சாந்தி, குருமந்தூர் கிராம ஊராட்சித் தலைவர் என்.சி. தேவி, அம்புகோவில் கிராம ஊராட்சித் தலைவர் கா.சுமன் காளிதாஸ், நெடுங்கல் கிராம ஊராட்சித் தலைவர் பி.மகேஸ்வரன், இக்கரை பொழுவாம்பட்டி கிராம ஊராட்சித் தலைவர் ஏ. சதானந்தம், மேவளூர்குப்பம் கிராம ஊராட்சித் தனி அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர் பி. பிச்சையம்மாள், களவனூர் கிராம ஊராட்சி தனி அலுவலர் / வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.செந்தில்முருகன், அனுமந்தபுரம் கிராம ஊராட்சி தனி அலுவலர் / வட்டார வளர்ச்சி அலுவலர் பி. மணிவாசகம் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து, விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்கள்.

இந்த நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தலைமைச் செயலர் க. சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ் ராஜ் வர்மா, இயக்குநர் கே.எஸ். பழனிசாமி உள்ளிட்டோருடன் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

சென்னை: 2018-19ஆம் ஆண்டிற்கான மின் ஆளுமை விருது (e-Panchayat Puraskar) மற்றும் பாராட்டுச் சான்றிதழை காண்பித்து முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி.

ஊராட்சி நிர்வாகத்தில் தகவல் மற்றும் தொழில்நுட்ப முறைகளை திறம்பட செயல்படுத்தியமைக்காக தேசிய அளவில் தமிழ்நாடு இரண்டாவதாக தெரிவு செய்யப்பட்டு, மத்திய ஊராட்சி அமைச்சகத்தால் தமிழ்நாடு அரசிற்கு வழங்கப்பட்ட 2018–19ஆம் ஆண்டிற்கான மின் ஆளுமை விருதையும் பாராட்டுச் சான்றிதழையும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமியிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

மேலும், ஊராட்சி அமைப்புகளின் சிறந்த முயற்சிகளையும், செயல்பாடுகளையும் ஊக்குவிக்கும் வகையில் 2018–19ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் ஊராட்சி அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தீன் தயாள் உபாத்யாய ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருது பெற்ற தருமபுரி மாவட்ட ஊராட்சி, திருமங்கலம் மற்றும் கொங்கணாபுரம் வட்டார ஊராட்சிகள், ஆண்டாங்கோவில் கிழக்கு, குருமந்தூர், அம்புகோவில், நெடுங்கல், இக்கரை பொழுவாம்பட்டி மற்றும் மேவளூர்குப்பம் கிராம ஊராட்சிகள், நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கௌரவ கிராம சபை தேசிய விருது பெற்ற களவனூர் கிராம ஊராட்சி, கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்ட தேசிய விருது பெற்ற டி.சி. கண்டிகை கிராம ஊராட்சி, குழந்தை நேய கிராம ஊராட்சிக்கான தேசிய விருது பெற்ற அனுமந்தபுரம் கிராம ஊராட்சி ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் தனி அலுவலர்கள் முதலமைச்சரை சந்தித்து விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்கள்.

ஊராட்சி அமைப்புகளின் சிறந்த முயற்சிகளையும், செயல்பாடுகளையும் ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் ஊராட்சி அமைச்சகம் ஆண்டுதோறும் பல்வேறு இனங்களின் கீழ், மாவட்ட ஊராட்சி, வட்டார ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சி ஆகிய மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளுக்கு ஊக்கத் தொகையுடன் கூடிய விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தி வருகிறது.

6 கிராம ஊராட்சி விருதுகள்

அந்த வகையில் 2018–19ஆம் ஆண்டிற்கான தீன் தயாள் உபாத்யாய ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருதுகளின் கீழ், சிறந்த மாவட்ட ஊராட்சி விருது – தருமபுரி மாவட்டத்திற்கும், சிறந்த வட்டார ஊராட்சி விருதுகள் – சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம்; மதுரை மாவட்டம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கும், சிறந்த கிராம ஊராட்சி விருதுகள் – கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் (கிழக்கு) கிராம ஊராட்சி, ஈரோடு மாவட்டம், குருமந்தூர் கிராம ஊராட்சி, புதுக்கோட்டை மாவட்டம், அம்புகோவில் கிராம ஊராட்சி, கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுங்கல் கிராம ஊராட்சி, கோயம்புத்தூர் மாவட்டம், இக்கரை பொழுவாம்பட்டி கிராம ஊராட்சி, காஞ்சிபுரம் மாவட்டம், மேவளூர்குப்பம் கிராம ஊராட்சி ஆகிய ஆறு கிராம ஊராட்சிகளுக்கும் வழங்கப்பட்டது.

ஊரகப் பகுதி மக்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்களை வலுவான கிராம சபையின் பங்களிப்புடன் செயல்படுத்தியமைக்கான நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கௌரவ கிராம சபை விருது கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த களவனூர் கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டது.

கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தினை திறம்பட தயாரித்ததில் சிறப்பாக செயலாற்றியமைக்கான கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்ட தேசிய விருது திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த டி.சி. கண்டிகை கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டது.

கிராமப்புற குழந்தைகளின் நலனைப் பேணும் வகையிலான வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்கான, குழந்தை நேய கிராம ஊராட்சிக்கான தேசிய விருது விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த அனுமந்தபுரம் கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டது.

மேற்கண்ட விருதுகளை பெற்ற தருமபுரி மாவட்ட ஊராட்சித் தலைவர் எம். யசோதா, திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஜெ. லதா, கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கரட்டூர் கே.கே. மணி, ஆண்டாங்கோவில் கிழக்கு கிராம ஊராட்சித் தலைவர் எஸ். சாந்தி, குருமந்தூர் கிராம ஊராட்சித் தலைவர் என்.சி. தேவி, அம்புகோவில் கிராம ஊராட்சித் தலைவர் கா.சுமன் காளிதாஸ், நெடுங்கல் கிராம ஊராட்சித் தலைவர் பி.மகேஸ்வரன், இக்கரை பொழுவாம்பட்டி கிராம ஊராட்சித் தலைவர் ஏ. சதானந்தம், மேவளூர்குப்பம் கிராம ஊராட்சித் தனி அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர் பி. பிச்சையம்மாள், களவனூர் கிராம ஊராட்சி தனி அலுவலர் / வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.செந்தில்முருகன், அனுமந்தபுரம் கிராம ஊராட்சி தனி அலுவலர் / வட்டார வளர்ச்சி அலுவலர் பி. மணிவாசகம் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து, விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்கள்.

இந்த நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தலைமைச் செயலர் க. சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ் ராஜ் வர்மா, இயக்குநர் கே.எஸ். பழனிசாமி உள்ளிட்டோருடன் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.