ETV Bharat / state

போதையில் தகராறு செய்த ஆசாமிகள்: தட்டிக்கேட்ட தலைமைக் காவலர் மீது தாக்குதல்

author img

By

Published : Jan 17, 2021, 4:28 PM IST

சென்னை: மதுபோதையில் தகராறு ஈடுபட்ட நபர்களை ரோந்து பணியில் இருந்த காவலர்கள் கண்டித்துள்ளனர். போதையில் மதி மயங்கிய ஆசாமிகள் காவலர்களையும் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

drunk men fight with police in chennai
போதையில் தகராறு செய்த ஆசாமிகள்

சென்னை புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி நகரில் பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் மதுபோதையில் ரகளையில் ஈடுபடுவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. தகவலறிந்த புதுவண்ணாரப்பேட்டை தலைமை காவலர் மற்றும் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது தளபதி என்பவரின் மகன்கள் மற்றும் நண்பர்களை தலைமை காவலர் விசாரணை செய்தார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் தலைமைக் காவலரின் தலைக்கவசத்தை பிடுங்கி உடைத்ததுடன், அவரை கீழே தள்ளிவிட்டு தப்பியோடினர்.

இதையடுத்து காவல் துறையினரை அவமதித்த போதை ஆசாமிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த இளம்பரிதி மற்றும் அவரது நண்பர் சஞ்சய் குமார் ஆகிய இருவரை கைது செய்த காவல் துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:'பிரைவேட் ஃபோட்டோஸை லீக் செய்வேன்'- மனைவியை மிரட்டிய கணவன்!

சென்னை புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி நகரில் பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் மதுபோதையில் ரகளையில் ஈடுபடுவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. தகவலறிந்த புதுவண்ணாரப்பேட்டை தலைமை காவலர் மற்றும் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது தளபதி என்பவரின் மகன்கள் மற்றும் நண்பர்களை தலைமை காவலர் விசாரணை செய்தார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் தலைமைக் காவலரின் தலைக்கவசத்தை பிடுங்கி உடைத்ததுடன், அவரை கீழே தள்ளிவிட்டு தப்பியோடினர்.

இதையடுத்து காவல் துறையினரை அவமதித்த போதை ஆசாமிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த இளம்பரிதி மற்றும் அவரது நண்பர் சஞ்சய் குமார் ஆகிய இருவரை கைது செய்த காவல் துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:'பிரைவேட் ஃபோட்டோஸை லீக் செய்வேன்'- மனைவியை மிரட்டிய கணவன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.