ETV Bharat / state

உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீட்டை ரத்து செய்க - திருமுருகன் காந்தி வலியுறுத்தல்

சென்னை: ஸ்டேட் பேங்க் கட் ஆஃப் மார்க் இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே சீரழிக்கும் உயர் சாதியினருக்கு பொருளாதார அளவுகோளில் 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

author img

By

Published : Jul 29, 2019, 9:41 PM IST

உயர்சாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கிட்டை ரத்து செய் - திருமுருகன் காந்தி வலியுறுத்தல்

இந்த ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மருத்துவர் எழிலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனையடுத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “முற்பட்ட சாதியினருக்கு பொருளாதார அளவுகோளில் இடஒதுக்கீடு என்பது முற்றிலுமாக உள்நோக்கம் உடையது. தமிழ்நாட்டில் இந்த 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது சமூகநீதியை குலைக்கின்ற வகையில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் வாய்ப்புகளை முற்றிலுமாக நசுக்குகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கை விரும்புகிறோம்.

உயர்சாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கிட்டை ரத்து செய் - திருமுருகன் காந்தி வலியுறுத்தல்

இந்த நிலையில்தான் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, உயர் சாதியினர் 28 விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்தால் போதும் என்ற வரையறையை நிர்ணயித்துள்ளது. மேற்கு வங்கத்தில் இது பூஜ்ஜியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் தேர்வு எழுதாமலேயே பணிகளுக்கு சென்றுவிட முடியும் என்று அந்த வங்கி ஒரு வரையறையை வைத்திருக்ககூடிய அளவில்தான் இந்த சட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வங்கித் துறைகளில் உயர் சாதியினருக்கு இடம் என்பது மிக அதிகளவில் இருக்கும்போது, இவர்களுக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி சாதி மக்களுக்கான வேலை வாயப்பினை முற்றிலுமாக அழிக்கின்றது. எனவே இந்த 10 விழுக்காடு இடஒதுக்கீடு ஜனநாயகத்திற்கும் அரசியல் சாசனத்திற்கும் விரோதமானது. அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்பதை சட்ட விரோதமானது என்றே புரிந்துகொள்ள முடியும்.

அதனால் சட்ட விரோதமான இந்த 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்” என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மருத்துவர் எழிலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனையடுத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “முற்பட்ட சாதியினருக்கு பொருளாதார அளவுகோளில் இடஒதுக்கீடு என்பது முற்றிலுமாக உள்நோக்கம் உடையது. தமிழ்நாட்டில் இந்த 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது சமூகநீதியை குலைக்கின்ற வகையில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் வாய்ப்புகளை முற்றிலுமாக நசுக்குகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கை விரும்புகிறோம்.

உயர்சாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கிட்டை ரத்து செய் - திருமுருகன் காந்தி வலியுறுத்தல்

இந்த நிலையில்தான் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, உயர் சாதியினர் 28 விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்தால் போதும் என்ற வரையறையை நிர்ணயித்துள்ளது. மேற்கு வங்கத்தில் இது பூஜ்ஜியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் தேர்வு எழுதாமலேயே பணிகளுக்கு சென்றுவிட முடியும் என்று அந்த வங்கி ஒரு வரையறையை வைத்திருக்ககூடிய அளவில்தான் இந்த சட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வங்கித் துறைகளில் உயர் சாதியினருக்கு இடம் என்பது மிக அதிகளவில் இருக்கும்போது, இவர்களுக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி சாதி மக்களுக்கான வேலை வாயப்பினை முற்றிலுமாக அழிக்கின்றது. எனவே இந்த 10 விழுக்காடு இடஒதுக்கீடு ஜனநாயகத்திற்கும் அரசியல் சாசனத்திற்கும் விரோதமானது. அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்பதை சட்ட விரோதமானது என்றே புரிந்துகொள்ள முடியும்.

அதனால் சட்ட விரோதமான இந்த 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்” என்றார்.

Intro:Body:
ஸ்டேட் பேங்க் கட் ஆஃப் மார்க். இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே சீரழிக்கும் உயர்சதியினருக்கு பொருளாதார அளவுகோளில் 10 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்து செய் என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மருத்துவர் எழிலன் உள்ளிட்டோஎ கல்ந்துகொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

பின்னர் பேசிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், “மத்திய அரசு கொண்டுவந்துள்ள பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட வேண்டும். அது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இடஒதுக்கீட்டின் அடிப்படையை சிதைக்கக்கூடியது. இந்த சட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் மட்டுமே இங்கே செயல்படுத்த முடியும். இது சம்பந்தமாக தமிழக அரசு நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் தமிழக அரசு இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கக்கூடாது.

ஸ்டேட் பேங்க் சுமார் 8000 க்ளார்க் பணியிடங்களுக்கு கட் ஆஃப் மார்க் வெளியிடப்பட்டது. இதில் தலித், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 62 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றும் உயர்சாதி வகுப்பினர் 28 சதவிகிதம் மதிப்பெண் எடுத்தாலே போதும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஏன் உயர்சாதியினருக்கு என்று ஒரு கட் ஆஃப் தகுதி நிர்ணயத்தை அவர்கள் நிர்ணயிக்கவில்லை என்பது எங்கள் கேள்வி. 2 வருடம் ஆசிரியர் பயிற்சி பெறுபவர்கள் டெட் தேர்வு எழுத வேண்டும் என்று மத்திய அரசு 2011 ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது. அதன்படி அந்த டெட் தேர்வில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று நிர்ணயித்துள்ள போது ஏன் இந்த வங்கி தேர்வில் உயர்சாதியினருக்கு மட்டும் கட் ஆஃப் மார்க் நிர்ணயிக்காமல் 28 சதவிகித மதிப்பெண்கள் பெற்றால் போதும் அடுத்த தேர்வுக்கு தகுதி பெறலாம் என்ற அளவுகோள் வைத்துள்ளீர்கள். இன்னும் சொல்ல போனால் மேற்கு வங்காள மாநிலத்தில் உயர்சாதியினருக்கு கட் ஆஃப் மார்க் பூஜ்ஜியம். அவர்கள் தங்கள் பெயரை எழுதி கொடுத்தாலே அவர்கள் அந்த வேலைக்கு தேர்வானவர்களாக தகுதி அடைவார்கள். அந்த அளவுக்கு இந்த உயர்சாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டுவருவதில் சட்ட விரோதமாக, நடைமுறைக்கு எதிராக, ஏற்கெனவே நிர்னயித்த வரம்புகளுக்கு மாறாக மத்திய அரசு வேக வேகமாக பார்ப்பனர்களை திருப்தி படுத்துவதில் பா.ஜ.க அரசு துடித்து கொண்டிருக்கிறது. சமூகநீதிக்கு எதிரான இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க கூடாது. அதுவரை சமூகநீதி சக்திகள் இந்த போராட்டங்களை தொடர்ந்து நடத்தும்” என்று தெரிவித்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.