ETV Bharat / state

பள்ளிகள் திறப்பது குறித்து அவசரம் வேண்டாம் -  பொதுப்பள்ளிக்கான மாநில மேடை கருத்து!

சென்னை : தமிழ்நாடு அரசு அவசரம் காட்டாமல், மருத்துவ ஆலோசனையின்படி பள்ளிகள் திறப்பது குறித்த முடிவெடுக்க வேண்டுமென பொதுப்பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தியுள்ளது.

author img

By

Published : Nov 5, 2020, 2:53 AM IST

 பள்ளி திறப்பு குறித்து அவசரம் வேண்டாம் -  பொதுப்பள்ளிக்கான மாநில மேடை கருத்து!         
பள்ளி திறப்பு குறித்து அவசரம் வேண்டாம் -  பொதுப்பள்ளிக்கான மாநில மேடை கருத்து!         

இது தொடர்பாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”ஒன்பது வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை நவம்பர் 16 முதல் பள்ளிகளைத் திறப்பது குறித்து, பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகளிடமும், ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களது பெற்றோரிடமும், பள்ளிகளின் தலைமையாசிரியர் தலைமையில் நவம்பர் 9ஆம் தேதியன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி, அதனடிப்படையில் அந்தந்தப் பள்ளிகள் திறப்பு முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தற்போது உள்ள நோய்த் தொற்றின் தன்மை குறித்த முழுமையான புரிதல் இல்லாமல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு நடந்து, அங்கு தொற்று ஏற்பட்டால், அப்பள்ளியில் பயிலும் அந்த வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமே அதன் தாக்கம் இருக்குமா? அல்லது அவர்கள் வசிக்கும் மொத்தப் பகுதிக்கும் அதன் தாக்கம் இருக்குமா? தனிப்பட்ட மனிதர்களுக்கு ஏற்படும் சிக்கல் போல இந்த நோய்த்தொற்றை அணுகுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

கடந்த சில நாள்களாக மருத்துவர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் பண்டிகைக் காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைபிடிக்காவிட்டால் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது என்று எச்சரித்து வருகின்றனர்.

நவம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் பண்டிகை முடிந்து நவம்பர் 16ஆம் தேதி அன்று நேரடியாக பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்களும் மாணவர்களும் நோய்த்தொற்று பரவலுக்கு காரணமாக மாட்டார்களா? நோய்த்தொற்றுக்கு ஆளாகி, நோய் அறிகுறிகள் இல்லாதவர்கள் நோய்த்தொற்று பரவ காரணமாக மாட்டார்களா?

மருத்துவம் சார்ந்த பேரிடர் குறித்து மருத்துவர்களே மக்களுக்குரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். மருத்துவர்களிடம் ஆலோசனைபெற்று எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு பெற்றோர் கருத்துக் கேட்டு முடிவு செய்கிறோம் என்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.

பண்டிகைக் காலம் முடிந்த பிறகு, நோய்த்தொற்று தன்மை எவ்வாறு உருவெடுத்துள்ளது என்று கவனித்து, பள்ளிகள் திறப்பது குறித்து பொது சுகாதாரத்துறையின் மருத்துவக் குழு உரிய ஆய்வை மேற்கொள்ள வேண்டும். பின்னர் அனைவரின் கருத்தையும் கேட்டு அதன் பிறகு தான் பள்ளிகள் திறப்பு குறித்து அரசு உரிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு எந்த ஆய்வும் இல்லாமல், பள்ளிகள் திறப்பதற்கு அரசு அனுமதித்தால் இத்தனை நாள்களாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பயனற்றதாகிவிடுவதோடு, மிகப் பெரும் சவாலை சந்திக்க வேண்டிய சூழலை உருவாக்கிவிடும். அத்தகைய சூழலுக்கு யார் பொறுப்பேற்பது? 2020-2021ஆம் கல்வி ஆண்டிற்கான வேலை நாள்கள் பாதிப்பைக் கருத்தில் எடுத்து பாடத்திட்டத்தைக் குறைத்து வகுப்பு வாரியாக குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்த அறிவிப்பை மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் அறிவித்துள்ளது‌.

பாடத்தைக் குறைப்பது, பள்ளி திறப்பது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவைத் தமிழ்நாடு அரசு அறிவித்தது. அக்குழு அறிக்கை தந்ததா, இல்லையா என்ற தகவல்கூட இதுவரை வெளியாகவில்லை. பாடத்திட்டம் குறைக்கப்படுமா, குறைப்படாதா என்ற கேள்விக்கு இதுநாள் வரை பதில் இல்லை.

பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லாமல் பள்ளிகளை திறக்கச்சொல்வது மேலும் குழப்பத்தை அதிகரிக்கும். இக்கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டம் குறித்த தெளிவான அறிவிப்பை பள்ளி திறப்பிற்கு முன்பாக தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.

சுகாதாரப் பேரிடரை உணர்ந்து பள்ளிகள் மூடப்பட்டன. பேரிடரின் தன்மையை சுகாதாரத்துறைதான் கணிக்க முடியும். தமிழ்நாடு அரசு பள்ளிகள் திறப்பு குறித்து அவசரம் காட்டாமல் மருத்துவ ஆலோசனைப் படி, பொதுசுகாதாரத் துறையின் பரிந்துரையின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து பொதுமக்கள் கருத்து கேட்டு முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”ஒன்பது வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை நவம்பர் 16 முதல் பள்ளிகளைத் திறப்பது குறித்து, பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகளிடமும், ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களது பெற்றோரிடமும், பள்ளிகளின் தலைமையாசிரியர் தலைமையில் நவம்பர் 9ஆம் தேதியன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி, அதனடிப்படையில் அந்தந்தப் பள்ளிகள் திறப்பு முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தற்போது உள்ள நோய்த் தொற்றின் தன்மை குறித்த முழுமையான புரிதல் இல்லாமல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு நடந்து, அங்கு தொற்று ஏற்பட்டால், அப்பள்ளியில் பயிலும் அந்த வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமே அதன் தாக்கம் இருக்குமா? அல்லது அவர்கள் வசிக்கும் மொத்தப் பகுதிக்கும் அதன் தாக்கம் இருக்குமா? தனிப்பட்ட மனிதர்களுக்கு ஏற்படும் சிக்கல் போல இந்த நோய்த்தொற்றை அணுகுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

கடந்த சில நாள்களாக மருத்துவர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் பண்டிகைக் காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைபிடிக்காவிட்டால் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது என்று எச்சரித்து வருகின்றனர்.

நவம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் பண்டிகை முடிந்து நவம்பர் 16ஆம் தேதி அன்று நேரடியாக பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்களும் மாணவர்களும் நோய்த்தொற்று பரவலுக்கு காரணமாக மாட்டார்களா? நோய்த்தொற்றுக்கு ஆளாகி, நோய் அறிகுறிகள் இல்லாதவர்கள் நோய்த்தொற்று பரவ காரணமாக மாட்டார்களா?

மருத்துவம் சார்ந்த பேரிடர் குறித்து மருத்துவர்களே மக்களுக்குரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். மருத்துவர்களிடம் ஆலோசனைபெற்று எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு பெற்றோர் கருத்துக் கேட்டு முடிவு செய்கிறோம் என்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.

பண்டிகைக் காலம் முடிந்த பிறகு, நோய்த்தொற்று தன்மை எவ்வாறு உருவெடுத்துள்ளது என்று கவனித்து, பள்ளிகள் திறப்பது குறித்து பொது சுகாதாரத்துறையின் மருத்துவக் குழு உரிய ஆய்வை மேற்கொள்ள வேண்டும். பின்னர் அனைவரின் கருத்தையும் கேட்டு அதன் பிறகு தான் பள்ளிகள் திறப்பு குறித்து அரசு உரிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு எந்த ஆய்வும் இல்லாமல், பள்ளிகள் திறப்பதற்கு அரசு அனுமதித்தால் இத்தனை நாள்களாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பயனற்றதாகிவிடுவதோடு, மிகப் பெரும் சவாலை சந்திக்க வேண்டிய சூழலை உருவாக்கிவிடும். அத்தகைய சூழலுக்கு யார் பொறுப்பேற்பது? 2020-2021ஆம் கல்வி ஆண்டிற்கான வேலை நாள்கள் பாதிப்பைக் கருத்தில் எடுத்து பாடத்திட்டத்தைக் குறைத்து வகுப்பு வாரியாக குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்த அறிவிப்பை மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் அறிவித்துள்ளது‌.

பாடத்தைக் குறைப்பது, பள்ளி திறப்பது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவைத் தமிழ்நாடு அரசு அறிவித்தது. அக்குழு அறிக்கை தந்ததா, இல்லையா என்ற தகவல்கூட இதுவரை வெளியாகவில்லை. பாடத்திட்டம் குறைக்கப்படுமா, குறைப்படாதா என்ற கேள்விக்கு இதுநாள் வரை பதில் இல்லை.

பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லாமல் பள்ளிகளை திறக்கச்சொல்வது மேலும் குழப்பத்தை அதிகரிக்கும். இக்கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டம் குறித்த தெளிவான அறிவிப்பை பள்ளி திறப்பிற்கு முன்பாக தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.

சுகாதாரப் பேரிடரை உணர்ந்து பள்ளிகள் மூடப்பட்டன. பேரிடரின் தன்மையை சுகாதாரத்துறைதான் கணிக்க முடியும். தமிழ்நாடு அரசு பள்ளிகள் திறப்பு குறித்து அவசரம் காட்டாமல் மருத்துவ ஆலோசனைப் படி, பொதுசுகாதாரத் துறையின் பரிந்துரையின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து பொதுமக்கள் கருத்து கேட்டு முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.