ETV Bharat / state

பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் சில கோரிக்கைகளை விட்டுக்கொடுக்க தயார் - லட்சுமி நரசிம்மன்

author img

By

Published : Oct 31, 2019, 1:50 PM IST

சென்னை: பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் சில கோரிக்கைகளை விட்டுக்கொடுக்க தயார் என, அனைத்து அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் கூறியுள்ளார்.

கோரிக்கைகளை வலியுறுத்தி ஏழாவது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஏழாவது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தம், உண்ணாவிரதப் போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு, அனைத்து மருத்துவர்களும் இன்று மதியம் 2 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என எச்சரித்து உள்ளது. ஆனாலும் மருத்துவர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

இது தொடர்பாக சென்னையில் அனைத்து அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் கூறும்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு மருத்துவர்கள் உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்

அரசு எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, ஒழுங்கு நடவடிக்கை, பணியிட மாற்றம் போன்றவற்றை இரவு பகலாக மேற்கொண்டு வருகிறது. எங்களின் கோரிக்கைகளை ஏற்று முதலமைச்சர் அழைத்துப் பேசினால் பத்து நிமிடத்தில் தீர்வு காண முடியும்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், மருத்துவர்கள் அரசியல் செய்கிறார்கள் என கூறுவது வருத்தமாக உள்ளது. அனைத்து மருத்துவர்களும் அரசு மருத்துவர்கள் என்பதை முதலமைச்சர் உணர்ந்து, அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

மேலும், அரசு அழைத்து பேசினால் எங்களின் கோரிக்கைகளில் ஒரு சிலவற்றை விட்டுக் கொடுத்தும் அரசு கூறுவதை ஒப்புக் கொள்ளும் அளவிற்கு பேசி தீர்த்துக் கொள்ள தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

இதையும் படிங்க : தெலங்கானா அரசு ஊழியர்களுக்காக கொந்தளித்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள்

ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஏழாவது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தம், உண்ணாவிரதப் போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு, அனைத்து மருத்துவர்களும் இன்று மதியம் 2 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என எச்சரித்து உள்ளது. ஆனாலும் மருத்துவர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

இது தொடர்பாக சென்னையில் அனைத்து அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் கூறும்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு மருத்துவர்கள் உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்

அரசு எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, ஒழுங்கு நடவடிக்கை, பணியிட மாற்றம் போன்றவற்றை இரவு பகலாக மேற்கொண்டு வருகிறது. எங்களின் கோரிக்கைகளை ஏற்று முதலமைச்சர் அழைத்துப் பேசினால் பத்து நிமிடத்தில் தீர்வு காண முடியும்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், மருத்துவர்கள் அரசியல் செய்கிறார்கள் என கூறுவது வருத்தமாக உள்ளது. அனைத்து மருத்துவர்களும் அரசு மருத்துவர்கள் என்பதை முதலமைச்சர் உணர்ந்து, அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

மேலும், அரசு அழைத்து பேசினால் எங்களின் கோரிக்கைகளில் ஒரு சிலவற்றை விட்டுக் கொடுத்தும் அரசு கூறுவதை ஒப்புக் கொள்ளும் அளவிற்கு பேசி தீர்த்துக் கொள்ள தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

இதையும் படிங்க : தெலங்கானா அரசு ஊழியர்களுக்காக கொந்தளித்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள்

Intro:அரசு அழைத்துப் பேசி ஒப்புக்கொள்ளும்
அளவிற்கு கோரிக்கை நிறைவேற்ற வேண்டும்


Body:அரசு அழைத்துப் பேசி ஒப்புக்கொள்ளும்
அளவிற்கு கோரிக்கை நிறைவேற்ற வேண்டும்


சென்னை,

அரசு அழைத்து பேசினால் கோரிக்கைகளில் விட்டுக் கொடுத்தும் ஒப்புக் கொள்ளும் அளவிற்கு பேச்சுவார்த்தைக்கு தயார் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் சங்க நிர்வாகிகள் லக்ஷ்மி நரசிம்மன் தெரிவித்தார்.

அனைத்து அரசு மருத்துவர் கூட்டமைப்பின் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 7வது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அனைத்து மருத்துவர்களும் இன்று மதியம் 2 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என எச்சரித்து உள்ளது. ஆனாலும் மருத்துவர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
அனைத்து அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் கூறும்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு எங்களின் கோரிக்கைகளை அழைத்துப் பேசி தீர்ப்பதற்கு பதில் ஒழுங்கு நடவடிக்கை, பணியிட மாற்றம் போன்றவற்றை இரவு பகலாக மேற்கொண்டுள்ளது. எங்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் எடுத்துச்சென்று அழைத்துப் பேசினால் பத்து நிமிடத்தில் தீர்க்க முடியும்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர்கள் அரசியல் செய்கிறார்கள் என கூறியுள்ளது வருத்தமாக உள்ளது. முதலமைச்சர் அனைத்து மருத்துவர்களும் அரசு மருத்துவர்கள் என்பதை உணர்ந்து அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

பணியிட மாற்றம் ஒழுங்கு நடவடிக்கை என்பது வழக்கமான நிர்வாக நடவடிக்கை தான். ஆனால் என்னுடைய வாழ்வாதாரம் பிரச்சனைக்காவும், உயிருக்காகப் போராடும் பொழுது என்னை மிரட்டினால் நான் பயப்படவே மாட்டேன். எனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக போராடுவதைத் தவிர பயப்படவே மாட்டேன்.
அரசு அழைத்து பேசினால் எங்களின் கோரிக்கைகளில் ஒரு சிலவற்றை விட்டுக் கொடுத்து ஒப்புக் கொள்ளும் அளவிற்கு பேசித் தீர்த்துக் கொள்ள தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.