ETV Bharat / state

10 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு மருத்துவர் சங்கம் எதிர்ப்பு!

author img

By

Published : Aug 7, 2019, 7:45 PM IST

சென்னை: பொருளாதார ரீதியில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முயலும் தமிழ்நாடு அரசிற்கு மருத்துவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது

doctors association national medical council bill

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், பாரா மெடிக்கல் லேப் கல்வி நலச்சங்கத்தின் சார்பில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், "தமிழ்நாடு அரசு சிறிய ரத்த பரிசோதனை நிலையங்களை மூடும் வகையில் செயல்பட்டுவருகிறது.

நகர்புறங்களில் உள்ள ரத்த பரிசோதனை நிலையங்களுக்கு 700 முதல் 1,500 சதுர அடியும், கிராமப்புற பரிசோதனை நிலையங்களில் 200 சதுரடி பரப்பளவில் இருக்க வேண்டும் என 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் அரசு ஆணை வெளியிட்டது.

இது கார்ப்ரேட் கிளினிக் லேப்களுக்கு சாதகமாகவும் சிறிய கிளினிக்குகளுக்கு பாதகமாகவும் அமைந்தது. இந்த அரசாணையைத் திருத்தி நகர்ப்புறங்களில் உள்ள ரத்த பரிசோதனை நிலையங்களுக்கு 200 சதுர அடியாகவும், கிராமப்புறங்களில் உள்ள ரத்த பரிசோதனை நிலையங்கள் 150 சதுர அடியாகவும் நிர்ணயிக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

மருத்துவர் சங்க பொதுச்செயலாளர் பேட்டி


இந்தக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவிட்டால் செப்டம்பர் 8ஆம் தேதி தலைநகர் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவோம். மேலும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாத தமிழ்நாடு அரசு பொருளாதார ரீதியில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்த முயலுவது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்தார்.

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், பாரா மெடிக்கல் லேப் கல்வி நலச்சங்கத்தின் சார்பில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், "தமிழ்நாடு அரசு சிறிய ரத்த பரிசோதனை நிலையங்களை மூடும் வகையில் செயல்பட்டுவருகிறது.

நகர்புறங்களில் உள்ள ரத்த பரிசோதனை நிலையங்களுக்கு 700 முதல் 1,500 சதுர அடியும், கிராமப்புற பரிசோதனை நிலையங்களில் 200 சதுரடி பரப்பளவில் இருக்க வேண்டும் என 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் அரசு ஆணை வெளியிட்டது.

இது கார்ப்ரேட் கிளினிக் லேப்களுக்கு சாதகமாகவும் சிறிய கிளினிக்குகளுக்கு பாதகமாகவும் அமைந்தது. இந்த அரசாணையைத் திருத்தி நகர்ப்புறங்களில் உள்ள ரத்த பரிசோதனை நிலையங்களுக்கு 200 சதுர அடியாகவும், கிராமப்புறங்களில் உள்ள ரத்த பரிசோதனை நிலையங்கள் 150 சதுர அடியாகவும் நிர்ணயிக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

மருத்துவர் சங்க பொதுச்செயலாளர் பேட்டி


இந்தக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவிட்டால் செப்டம்பர் 8ஆம் தேதி தலைநகர் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவோம். மேலும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாத தமிழ்நாடு அரசு பொருளாதார ரீதியில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்த முயலுவது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்தார்.

Intro:முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு
தமிழக அரசின் நடவடிக்கைக்கு மருத்துவர் சங்கம் எதிர்ப்பு


Body:சென்னை,
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் சார்பில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், தமிழக அரசு சிறிய ரத்த பரிசோதனை.மையங்களை மூடும் வகையில் செயல்பட்டு வருகிறது. நகர்ப்புறத்தில் உள்ள ரத்த பரிசோதனை நிலையங்களுக்கு 700 முதல் 1,500 சதுர அடியும், கிராமப்புற பரிசோதனை நிலையங்கள் 200 சதுரடி பரப்பளவில் இருக்க வேண்டும் என 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அரசு ஆணை வெளியிட்டது. இதன் மூலம் பெரிய மற்றும் கார்ப்பரேட் கிளினிக்கல் லேப்கள் சாதகமாக அமைந்தது. சிறிய மற்றும் கிளினிக்கல் லேப்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே இந்த அரசாணையை எதிர்த்து பல கட்டப் போராட்டங்கள் சங்கங்களின் சார்பில் நடத்தப்பட்டது. நகர்ப்புறங்களில் உள்ள ரத்த பரிசோதனை நிலையங்களுக்கு 150 சதுர அடியாகவும், கிராமப்புறங்களில் உள்ள ரத்த பரிசோதனை நிலையங்கள் 200 சதுர அடி ஆகும் நிர்ணயிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம்.
சென்னையில் மருத்துவ கழிவுகளை எடுக்கக்கூடிய நிறுவனம் பரிசோதனைக் கூடங்களில் மருத்துவ கழிவுகளை எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் போடுவதற்கு மறுக்கிறது. தஞ்சை மதுரை போன்ற முக்கிய நகரங்களை தலைமை இடமாகக் கொண்ட மருத்துவ கழிவுகளை அகற்ற கூடிய நிறுவனங்கள் பரிசோதனைக் கூடங்களுடன் ஒப்பந்தத்தை போட்டுவிட்டு கழிவுகளை எடுப்பதற்கு தாமதம் செய்கிறார்கள். இந்த சூழ்நிலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பரிசோதனைக் கூடங்கள் அனுமதி பெற வேண்டும் என்று அரசு நெருக்கடி கொடுக்கிறது. இதனால் கிளினிக்கல் லேப்கள் அடுத்தவர்கள் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். எனவே எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 8ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.

தமிழக அரசு முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அறிகிறோம். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது 27 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு நிறைவேற்றாத சூழ்நிலையில் முன்னேறிய வகுப்பினர் 10 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்த நடவடிக்கை மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது.


தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் சில பிரிவுகளை நீக்குவதாக மத்திய அரசு கூறுவதை நம்ப கூடாது. தேசிய வரைவு கல்வி கொள்கையினையும் முழுமையாகத் திரும்பப் பெறுவது தான் இதற்கு தீர்வாகும். இந்திய மருத்துவ கவுன்சிலின் ஒழிக்கக் கூடாது என்பதுதான் எங்களின் கோரிக்கையாகும்.
தமிழக அரசு ஏற்கனவே சந்தர்ப்பவாதத்துடன் செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசு போராடும் மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே இந்திய மருத்துவச் சங்கத்தை உடைப்பதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் என்பது மருத்துவர்களுக்கு எதிரானது மட்டுமல்லாமல் மருந்தாளுநர்கள் உள்ளிட்டவர்களுக்கும் எதிராக அமைந்துள்ளது என தெரிவித்தார்.





Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.