ETV Bharat / state

எடப்பாடிக்கு எடுபிடியாக இருக்கவே காவல் துறையிலும் இரட்டைத் தலைமை: துரைமுருகன்

சென்னை: அதிமுகவில் இரட்டைத் தலைமையால் நடக்கும் கூத்துகளைப் போல், 'டி.ஜி.பி.', 'ஸ்பெஷல் டி.ஜி.பி.' என்ற முதலமைச்சர் பழனிசாமியின் விபரீத விளையாட்டு தமிழ்நாடு காவல்துறையை அடியோடு நாசப்படுத்திவிடும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

author img

By

Published : Oct 25, 2020, 5:01 PM IST

dmk-duraimurugan-statement-on-tamil-nadu-police-reform-act
dmk-duraimurugan-statement-on-tamil-nadu-police-reform-act

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' கூடுதல் டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் ஐபிஎஸ் அலுவலருக்குப் பதவி உயர்வு அளித்து, சட்டம் ஒழுங்கு ஸ்பெஷல் டிஜிபியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்திருப்பது, உச்சநீதிமன்றத்தால் “பிரகாஷ் சிங்” வழக்கில் வழங்கப்பட்ட 7 கட்டளைகளுக்கும், தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் 2013க்கும் முற்றிலும் எதிரானதாகும்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே சட்டம் - ஒழுங்கு டிஜி.பியாக திரிபாதி ஐபிஎஸ் இரண்டு ஆண்டுகளுக்கு (ஜூன் 2021 வரை), பிரகாஷ் சிங் வழக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது, அவரது அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் தேர்தல் காலப் பணிகளில் “எடப்பாடிக்கு” எடுபிடியாக இருக்க வேண்டும் என்பதற்காக காவல் தலைமையகத்தில் இன்னொரு டிஜிபி அந்தஸ்துள்ள அலுவலரை சட்டம் ஒழுங்குப் பணிகளில் நியமித்திருப்பது, ஒட்டுமொத்த காவல்துறை நிர்வாகத்தையே சீரழிக்கும் மிக மோசமான முன்னுதாரணம் ஆகும்.

அரசியல் ரீதியான அழுத்தங்கள் சட்டவிரோத உத்தரவுகள் பிறப்பிப்பதைத் தவிர்க்கவே, தேசிய போலீஸ் கமிஷன் பரிந்துரைத்து பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றம், “சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.க்கு இரு வருடங்கள் பதவிக் காலம்” என்று வரையறுத்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசும் - குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு கொண்டு வந்த காவல்துறை சீர்திருத்தச் சட்டத்திற்கே எதிராக முதலமைச்சர் அதுவும் உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் பழனிசாமி செயல்படுகிறார்.

தனக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக, உலக அளவில் புகழ் பெற்ற தமிழகக் காவல்துறைக்கு, குறிப்பாக சட்டம் - ஒழுங்குப் பணிகளைக் கண்காணிக்க இரு ஐபிஎஸ் அலுவலர்களை நியமித்திருப்பது வேதனைக்குரியது.

ஆனால் இப்போது மட்டுமின்றி, கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள அதிமுக ஆட்சியின் டிஜிபி நியமனங்களில் எல்லாம் பிரகாஷ் சிங் வழக்கில் வரையறுத்துச் சொல்லப்பட்ட காவல்துறைச் சீர்திருத்தம் கைவிடப்பட்டுள்ளது. திட்டமிட்டு உள்நோக்கத்துடன் மீறப்பட்டுள்ளது.

ஓய்வு பெறும் நேரத்தில் இரு வருடப் பதவிக் காலம் கொடுத்து டிஜிபி ஆக்குவது, முறைப்படி 2 வருட பதவிக் காலத்தில் நியமிக்கப்பட்ட டிஜிபியை நள்ளிரவில் ராஜினாமா செய்ய வைப்பது என்று தொடர்ந்து, இப்போது புதிய உத்தியாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனரை டம்மியாக்குவதற்கு, அவருக்கு இணையாக ஒரு டிஜிபியை அதே பொறுப்பில் அமர்த்துவது வரை, அதிமுக அரசின் அத்துமீறல் படலம் நீண்டு வந்து நிற்கிறது. தமிழ்நாடு காவல்துறையைச் சீரழிக்கும் முதலமைச்சரின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

“இரட்டைத் தலைமையால்” அதிமுக விற்குள் நடக்கும் கூத்துகள், டிஜிபி அலுவலகத்திலும் அரங்கேறட்டும். அங்கும் நாமும் ஓ.பி.எஸ்ஸும் அடித்துக் கொள்வது போல் அலுவலர்களுக்குள் அடித்துக் கொள்ளட்டும் என்ற இந்த விபரீத விளையாட்டு தமிழ்நாடு காவல்துறையின் தலைமைப் பண்பை அடியோடு நாசப்படுத்தி விடும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

ஆகவே “ஒருங்கிணைப்பாளர்”, “இணை ஒருங்கிணைப்பாளர்” என்று அதிமுக விற்குள் உருவாக்கியுள்ளது போல், காவல்துறை தலைமையகத்தில் “டிஜிபி” “ஸ்பெஷல் டிஜிபி” என்று உருவாக்கியுள்ளதைத் திரும்பப் பெற்று, பிரகாஷ் சிங் வழக்கின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை மதிக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதுகெலும்பு இருந்தால் ஆளுநருக்கு கெடு விதித்து இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் பெறுங்கள்' - பொன்முடி சவால்

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' கூடுதல் டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் ஐபிஎஸ் அலுவலருக்குப் பதவி உயர்வு அளித்து, சட்டம் ஒழுங்கு ஸ்பெஷல் டிஜிபியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்திருப்பது, உச்சநீதிமன்றத்தால் “பிரகாஷ் சிங்” வழக்கில் வழங்கப்பட்ட 7 கட்டளைகளுக்கும், தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் 2013க்கும் முற்றிலும் எதிரானதாகும்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே சட்டம் - ஒழுங்கு டிஜி.பியாக திரிபாதி ஐபிஎஸ் இரண்டு ஆண்டுகளுக்கு (ஜூன் 2021 வரை), பிரகாஷ் சிங் வழக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது, அவரது அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் தேர்தல் காலப் பணிகளில் “எடப்பாடிக்கு” எடுபிடியாக இருக்க வேண்டும் என்பதற்காக காவல் தலைமையகத்தில் இன்னொரு டிஜிபி அந்தஸ்துள்ள அலுவலரை சட்டம் ஒழுங்குப் பணிகளில் நியமித்திருப்பது, ஒட்டுமொத்த காவல்துறை நிர்வாகத்தையே சீரழிக்கும் மிக மோசமான முன்னுதாரணம் ஆகும்.

அரசியல் ரீதியான அழுத்தங்கள் சட்டவிரோத உத்தரவுகள் பிறப்பிப்பதைத் தவிர்க்கவே, தேசிய போலீஸ் கமிஷன் பரிந்துரைத்து பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றம், “சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.க்கு இரு வருடங்கள் பதவிக் காலம்” என்று வரையறுத்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசும் - குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு கொண்டு வந்த காவல்துறை சீர்திருத்தச் சட்டத்திற்கே எதிராக முதலமைச்சர் அதுவும் உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் பழனிசாமி செயல்படுகிறார்.

தனக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக, உலக அளவில் புகழ் பெற்ற தமிழகக் காவல்துறைக்கு, குறிப்பாக சட்டம் - ஒழுங்குப் பணிகளைக் கண்காணிக்க இரு ஐபிஎஸ் அலுவலர்களை நியமித்திருப்பது வேதனைக்குரியது.

ஆனால் இப்போது மட்டுமின்றி, கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள அதிமுக ஆட்சியின் டிஜிபி நியமனங்களில் எல்லாம் பிரகாஷ் சிங் வழக்கில் வரையறுத்துச் சொல்லப்பட்ட காவல்துறைச் சீர்திருத்தம் கைவிடப்பட்டுள்ளது. திட்டமிட்டு உள்நோக்கத்துடன் மீறப்பட்டுள்ளது.

ஓய்வு பெறும் நேரத்தில் இரு வருடப் பதவிக் காலம் கொடுத்து டிஜிபி ஆக்குவது, முறைப்படி 2 வருட பதவிக் காலத்தில் நியமிக்கப்பட்ட டிஜிபியை நள்ளிரவில் ராஜினாமா செய்ய வைப்பது என்று தொடர்ந்து, இப்போது புதிய உத்தியாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனரை டம்மியாக்குவதற்கு, அவருக்கு இணையாக ஒரு டிஜிபியை அதே பொறுப்பில் அமர்த்துவது வரை, அதிமுக அரசின் அத்துமீறல் படலம் நீண்டு வந்து நிற்கிறது. தமிழ்நாடு காவல்துறையைச் சீரழிக்கும் முதலமைச்சரின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

“இரட்டைத் தலைமையால்” அதிமுக விற்குள் நடக்கும் கூத்துகள், டிஜிபி அலுவலகத்திலும் அரங்கேறட்டும். அங்கும் நாமும் ஓ.பி.எஸ்ஸும் அடித்துக் கொள்வது போல் அலுவலர்களுக்குள் அடித்துக் கொள்ளட்டும் என்ற இந்த விபரீத விளையாட்டு தமிழ்நாடு காவல்துறையின் தலைமைப் பண்பை அடியோடு நாசப்படுத்தி விடும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

ஆகவே “ஒருங்கிணைப்பாளர்”, “இணை ஒருங்கிணைப்பாளர்” என்று அதிமுக விற்குள் உருவாக்கியுள்ளது போல், காவல்துறை தலைமையகத்தில் “டிஜிபி” “ஸ்பெஷல் டிஜிபி” என்று உருவாக்கியுள்ளதைத் திரும்பப் பெற்று, பிரகாஷ் சிங் வழக்கின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை மதிக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதுகெலும்பு இருந்தால் ஆளுநருக்கு கெடு விதித்து இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் பெறுங்கள்' - பொன்முடி சவால்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.