ETV Bharat / state

'இத அப்பவே கேட்டிருக்கலாம்...!' - முதலமைச்சருக்கு துரைமுருகன் அறிவுரை

சென்னை: கண்டலேறு அணையிலிருந்து பூண்டி வரை குழாய் அமைக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்தால் ரூ. 3000 கோடி விரயமாகும் என திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

author img

By

Published : Oct 4, 2019, 10:42 AM IST

திமுக எதிர்கட்சி தலைவர் துரைமுருகன்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அக்டோபர் 1ஆம் தேதி கொடுங்கையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த பின் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு திட்டத்தை அறிவித்தார். அதாவது, கண்டலேறு அணையில், பூண்டி ஏரிக்கு நீர் வரும் கால்வாய் அடிக்கடி சேதமடைகிறது. அதைத் தவிர்க்க கண்டலேறுவிலிருந்து பூண்டி வரை குழாய் அமைக்க ஆலோசித்து வருகிறோம் என்பது தான் அந்தத் திட்டம்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தத் திட்டம் குறித்து முழு விவரம் அறிந்து பேசினாரா, இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் இத்திட்டம் முதலமைச்சரின் சிந்தனையில் உதித்தத் திட்டம் அல்ல. ஸ்ரீசைலம் முதல் பூண்டி வரை கிருஷ்ணா நீரை கொண்டு வருவதற்கு பல திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டு இறுதியில் எடுக்கப்பட்ட முடிவு தான் கால்வாய் மூலம் நீரைக் கொண்டு வருவது என்பது. இந்தத் திட்டத்திற்கு அன்று ஒப்புதல் கையொப்பமிட்டது அதிமுக அரசுதான்.

இந்தத் திட்டம் நிறைவேறிய பிறகும் குறிப்பாகக் கண்டலேறு முதல் பூண்டி ஏரி வரை உள்ள கால்வாய் அடிக்கடி பழுதடைந்தும், நீர் சேதாரமும் ஏற்பட்டுவந்தது. இதனால் பூண்டிக்கு வரும் நீர் குறைந்ததது. இதனையறிந்த தவத்திரு புட்டபர்த்தி சாய்பாபா, சென்னை மக்களுக்குத் தடையின்றி குடிநீர் கிடைக்க, அவராகவே முன்வந்து கண்டலேறு முதல் பூண்டி வரை குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்வதோடு அதற்காக ஆகும் செலவையும் அவரே ஏற்றுக் கொள்ளவதாகவும் அறிவித்தார்.

ஆனால் அதிமுக அரசு இந்தத் திட்டத்தை ஏற்க முடியாது என்று அறிவித்துவிட்டது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் கண்டலேறு முதல் பூண்டி வரை நிலச்சரிவு சரியாக இல்லை. எனவே குழாய் மூலம் தண்ணீரைக் கொண்டு செல்வது சிரமம். தண்ணீர் சரியாக கிடைக்காது என்பதாகும். இந்த விவரமெல்லாம் கற்பனை கதை அல்ல. முதலமைச்சர் விவரம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் பேராசிரியர் மோகன கிருஷ்ணன் எழுதி தமிழ்நாடு அரசு வெளியிட்ட கிருஷ்ண நதி நீர் விநியோகம் குறித்த புத்தகத்தினை எடுத்துப் படித்து தெரிந்து கொள்ளலாம்.

முதலமைச்சரிடம் நான் தெரிந்து கொள்ள விரும்புவதெல்லாம், கண்டலேறு முதல் பூண்டி வரை நிலச்சரிவு சரி செய்யப்பட்டு விட்டதா? இன்றைக்கு அந்தத் திட்டத்தை அறிவித்திருப்பதும் அதிமுக அரசுதான். அன்று இதே திட்டத்திற்கு மறுப்பு சொன்னதும் இதே அதிமுக அரசு தான்.

சத்யசாய்பாபா சொன்னபோது அதிமுக அரசு ஒத்துப்போயிருந்தால் அரசுக்கு பணமும் மிச்சம். திட்டமும் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிந்திருக்கும், 15 ஆண்டுகளாக தட்டுப்பாடின்றி தண்ணீரும் வந்திருக்கும். இன்றைய நிலவரப்படி இந்த திட்டத்தை நிறைவேற்ற சுமார் 3 ஆயிரம் கோடிக்கு மேல் ஆகும் என்று பொறியாளர்கள் கூறுகிறார்கள். ரூ. 3000 கோடியா நல்ல வேட்டை'' என துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அக்டோபர் 1ஆம் தேதி கொடுங்கையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த பின் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு திட்டத்தை அறிவித்தார். அதாவது, கண்டலேறு அணையில், பூண்டி ஏரிக்கு நீர் வரும் கால்வாய் அடிக்கடி சேதமடைகிறது. அதைத் தவிர்க்க கண்டலேறுவிலிருந்து பூண்டி வரை குழாய் அமைக்க ஆலோசித்து வருகிறோம் என்பது தான் அந்தத் திட்டம்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தத் திட்டம் குறித்து முழு விவரம் அறிந்து பேசினாரா, இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் இத்திட்டம் முதலமைச்சரின் சிந்தனையில் உதித்தத் திட்டம் அல்ல. ஸ்ரீசைலம் முதல் பூண்டி வரை கிருஷ்ணா நீரை கொண்டு வருவதற்கு பல திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டு இறுதியில் எடுக்கப்பட்ட முடிவு தான் கால்வாய் மூலம் நீரைக் கொண்டு வருவது என்பது. இந்தத் திட்டத்திற்கு அன்று ஒப்புதல் கையொப்பமிட்டது அதிமுக அரசுதான்.

இந்தத் திட்டம் நிறைவேறிய பிறகும் குறிப்பாகக் கண்டலேறு முதல் பூண்டி ஏரி வரை உள்ள கால்வாய் அடிக்கடி பழுதடைந்தும், நீர் சேதாரமும் ஏற்பட்டுவந்தது. இதனால் பூண்டிக்கு வரும் நீர் குறைந்ததது. இதனையறிந்த தவத்திரு புட்டபர்த்தி சாய்பாபா, சென்னை மக்களுக்குத் தடையின்றி குடிநீர் கிடைக்க, அவராகவே முன்வந்து கண்டலேறு முதல் பூண்டி வரை குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்வதோடு அதற்காக ஆகும் செலவையும் அவரே ஏற்றுக் கொள்ளவதாகவும் அறிவித்தார்.

ஆனால் அதிமுக அரசு இந்தத் திட்டத்தை ஏற்க முடியாது என்று அறிவித்துவிட்டது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் கண்டலேறு முதல் பூண்டி வரை நிலச்சரிவு சரியாக இல்லை. எனவே குழாய் மூலம் தண்ணீரைக் கொண்டு செல்வது சிரமம். தண்ணீர் சரியாக கிடைக்காது என்பதாகும். இந்த விவரமெல்லாம் கற்பனை கதை அல்ல. முதலமைச்சர் விவரம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் பேராசிரியர் மோகன கிருஷ்ணன் எழுதி தமிழ்நாடு அரசு வெளியிட்ட கிருஷ்ண நதி நீர் விநியோகம் குறித்த புத்தகத்தினை எடுத்துப் படித்து தெரிந்து கொள்ளலாம்.

முதலமைச்சரிடம் நான் தெரிந்து கொள்ள விரும்புவதெல்லாம், கண்டலேறு முதல் பூண்டி வரை நிலச்சரிவு சரி செய்யப்பட்டு விட்டதா? இன்றைக்கு அந்தத் திட்டத்தை அறிவித்திருப்பதும் அதிமுக அரசுதான். அன்று இதே திட்டத்திற்கு மறுப்பு சொன்னதும் இதே அதிமுக அரசு தான்.

சத்யசாய்பாபா சொன்னபோது அதிமுக அரசு ஒத்துப்போயிருந்தால் அரசுக்கு பணமும் மிச்சம். திட்டமும் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிந்திருக்கும், 15 ஆண்டுகளாக தட்டுப்பாடின்றி தண்ணீரும் வந்திருக்கும். இன்றைய நிலவரப்படி இந்த திட்டத்தை நிறைவேற்ற சுமார் 3 ஆயிரம் கோடிக்கு மேல் ஆகும் என்று பொறியாளர்கள் கூறுகிறார்கள். ரூ. 3000 கோடியா நல்ல வேட்டை'' என துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.