ETV Bharat / state

சென்னை வரும் வட இந்தியத் தொழிலாளர்கள் என்ன செய்கின்றனர்? - கண்காணிக்க கோரிக்கை!

author img

By

Published : Jan 30, 2023, 6:37 PM IST

சென்னைக்கு வரும் வட இந்தியத் தொழிலாளர்கள் என்ன செய்கிறார்கள்? என்பதை மாநகராட்சி கண்காணிக்க வேண்டும் என மாமன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினர் சொக்கலிங்கம் கோரிக்கை வைத்துள்ளார்.

che
che

சென்னை: சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம், மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் இன்று(ஜன.30) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய ஐந்தாவது வார்டு திமுக உறுப்பினர் சொக்கலிங்கம், தமிழ்நாட்டிற்கு வருகை தரும் வட இந்தியர்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரினார்.

அவர் பேசும்போது, "அதிக எண்ணிக்கையிலான வட இந்தியத் தொழிலாளர்கள் ரயில் மூலம் சென்னை வருகின்றனர். ரயில்களில் 50 பேர் அமரும் பெட்டியில் வட இந்தியர்கள் 150 பேர் வருகின்றனர். அவர்கள் அனைவரும் இங்கு வந்து என்ன செய்கின்றனர்? என்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆய்வு செய்ய வேண்டும்.

வட இந்தியர்கள் பலர் வேலை பார்க்கும் வணிக நிறுவனங்களில் இந்தியில்தான் பேசுகின்றனர், அது நமக்குப் புரிவதில்லை. எனவே கடைகளில் வேலை செய்யும் இந்திக்காரர்களுக்கு தமிழ் சொற்களை கற்றுத்தர மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: சுமார் 4.4 லட்சம் பேர் பொங்கல் பரிசுத்தொகையை வாங்கவில்லை!

சென்னை: சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம், மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் இன்று(ஜன.30) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய ஐந்தாவது வார்டு திமுக உறுப்பினர் சொக்கலிங்கம், தமிழ்நாட்டிற்கு வருகை தரும் வட இந்தியர்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரினார்.

அவர் பேசும்போது, "அதிக எண்ணிக்கையிலான வட இந்தியத் தொழிலாளர்கள் ரயில் மூலம் சென்னை வருகின்றனர். ரயில்களில் 50 பேர் அமரும் பெட்டியில் வட இந்தியர்கள் 150 பேர் வருகின்றனர். அவர்கள் அனைவரும் இங்கு வந்து என்ன செய்கின்றனர்? என்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆய்வு செய்ய வேண்டும்.

வட இந்தியர்கள் பலர் வேலை பார்க்கும் வணிக நிறுவனங்களில் இந்தியில்தான் பேசுகின்றனர், அது நமக்குப் புரிவதில்லை. எனவே கடைகளில் வேலை செய்யும் இந்திக்காரர்களுக்கு தமிழ் சொற்களை கற்றுத்தர மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: சுமார் 4.4 லட்சம் பேர் பொங்கல் பரிசுத்தொகையை வாங்கவில்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.