ETV Bharat / state

காவிரியில் தண்ணீர் திறந்து விட திமுக, காங்கிரஸ் முறையிட வேண்டும் - தமிழிசை - DMK, Congress

சென்னை: காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி காங்கிரசாரும், திமுகவினரும் கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமியிடம் கேட்க வேண்டும் என தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

தமிழிசை
author img

By

Published : Jun 21, 2019, 10:50 AM IST

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி வளாகத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்த யோகா தினத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பாஜக மாநில தலைவர் தமிழிசை கூறுகையில், சர்வதேச யோகா தினம் கொண்டாடுவதற்கு பிரதமர் மோடிக்கு நாம் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய நாடுகள் உட்பட அனைவரும் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடிவருகின்றனர்.

யோகா பயிற்சி செய்யும் தமிழிசை சவுந்தரராஜன்
யோகா பயிற்சி செய்யும் தமிழிசை

மேலும் அவர் கூறுகையில், புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் தற்போது அதில் சில கருத்துகள்தான் முன்னிறுத்தப்படுகின்றன. இந்தியாவின் நிலையை பிரமாண்டமாக உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்டதான் இந்த புதிய கல்விக் கொள்கை எனத் தெரிவித்தார்.

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என மத்திய அமைச்சர் சதானந்தா கூறியது குறித்து கேட்டதற்கு, தன்னிடம் இந்த கேள்வியைக் கேட்பதற்கு முன்பு குமாரசாமி மேகதாதுவில் அணை கட்டியே தீருவேன் என கூறிவருகிறார்.

பாஜக தலைவர் தமிழிசை பேட்டி

அதற்கு திமுக தலைவர் ஸ்டாலினின் கருத்து என்ன என்பதை கேளுங்கள். பாஜக தெளிவாகக் கூறிவிட்டது. மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்பதில் மத்திய அரசு மீண்டும் கூறியுள்ளது. அதேபோல் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி காங்கிரசார், திமுகவினர் அம்மாநில முதலமைச்சரிடம் பேச வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி வளாகத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்த யோகா தினத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பாஜக மாநில தலைவர் தமிழிசை கூறுகையில், சர்வதேச யோகா தினம் கொண்டாடுவதற்கு பிரதமர் மோடிக்கு நாம் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய நாடுகள் உட்பட அனைவரும் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடிவருகின்றனர்.

யோகா பயிற்சி செய்யும் தமிழிசை சவுந்தரராஜன்
யோகா பயிற்சி செய்யும் தமிழிசை

மேலும் அவர் கூறுகையில், புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் தற்போது அதில் சில கருத்துகள்தான் முன்னிறுத்தப்படுகின்றன. இந்தியாவின் நிலையை பிரமாண்டமாக உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்டதான் இந்த புதிய கல்விக் கொள்கை எனத் தெரிவித்தார்.

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என மத்திய அமைச்சர் சதானந்தா கூறியது குறித்து கேட்டதற்கு, தன்னிடம் இந்த கேள்வியைக் கேட்பதற்கு முன்பு குமாரசாமி மேகதாதுவில் அணை கட்டியே தீருவேன் என கூறிவருகிறார்.

பாஜக தலைவர் தமிழிசை பேட்டி

அதற்கு திமுக தலைவர் ஸ்டாலினின் கருத்து என்ன என்பதை கேளுங்கள். பாஜக தெளிவாகக் கூறிவிட்டது. மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்பதில் மத்திய அரசு மீண்டும் கூறியுள்ளது. அதேபோல் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி காங்கிரசார், திமுகவினர் அம்மாநில முதலமைச்சரிடம் பேச வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Intro:காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது குறித்து
காங்கிரஸ் திமுக வினர் குமாரசாமியிடம் கேட்க வேண்டும்



Body:சென்னை, காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது குறித்து தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மற்றும் திமுக கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் கேட்க வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய் எம் சி ஏ கல்லூரி வளாகத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
இந்த யோகா தினத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், சர்வதேச யோகா தினம் கொண்டாடுவதற்கு பிரதமர் மோடிக்கு நாம் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள்ள வேண்டும். இன்று இஸ்லாமிய நாடுகள் உட்பட சர்வதேச யோகா தினத்தை கொண்டாடி வருகின்றனர். ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடுவது ஆண்டு முழுவதும் யோகா செய்து உடல் நலத்தையும் மன நலத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதுமட்டுமின்றி நமது நாட்டின் கலை உலகம் முழுவதும் இன்றுவரை உள்ளதால் இன்று மட்டுமின்றி என்றும் யோகா கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தனது கருத்து என கூறினார்.
யோகா மதம் சார்ந்தது என சிலர் கருதுகின்றனர். எனவே அதற்கு இருந்த எதிர்ப்புகள் எல்லாம் தற்போது குறைந்து விட்டது. யோகா மனம் சார்ந்து உடல் சார்ந்தது. எனவே எனவே மதம் சார்ந்தது இல்லை என்பதை உணர்ந்து இந்தியாவில் உள்ள நமது உடல் நலனை பாதுகாப்பதற்காக உரியது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் தற்போது அதில் சில கருத்துக்கள் தான் முன்னிறுத்தப்படுகின்றன. இந்தியாவின் நிலையை பிரம்மாண்டமாக உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை.
இந்த கல்விக் கொள்கையில் தாய்மொழிக்கல்வி ஊக்கப்படுத்தவும் குழந்தைகளுக்கு அனைத்து மொழியையும் கற்றுக் கொடுக்கும் அவர்கள் விரும்பும் ஒரு மொழியை கற்கவும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கல்வி என்பது ஆராய்ச்சிக்கு பயன்பெறும் வகையிலும் வாழ்க்கைக்கு பயன்படும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதற்காக திட்டமிடப்பட்டது தான் இந்த புதிய கல்விக் கொள்கை ஆகும். புதிய கல்விக் கொள்கையை திடீரென கொண்டுவரவில்லை. பல நாள் கல்விக் கொள்கையை இணையதளத்தில் போட்டு அப்போது கருத்துக்கள் கூறுங்கள் என கேட்டபோது கூறாதவர்கள் தற்போது இதனை அரசியலுக்காக பயன்படுத்துவது என்பது தவறாகும்.
தமிழகத்தில் எப்போதும் நல்லதை நேர்மறையாக கொண்டு சென்று விடுகின்றனர். அதன் நேர்மறை கருத்துக்களை நாங்கள் எடுத்து வைப்போம்.
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என சதானந்தா கூறியது குறித்து கேட்டதற்கு, தன்னிடம் இந்த கேள்வியைக் கேட்பதற்கு முன்னர் குமாரசாமி மேகதாதுவில் அணை கட்டியே தீருவேன் என கூறி வருகிறார். அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து என்ன என்பதை கேளுங்கள். பாஜக தெளிவாகக் கூறிவிட்டது. மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்பதில் மத்திய அரசு மீண்டும் கூறியுள்ளது. அதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் நீர் வழித்தடத்தில் எந்தப் பணியைச் செய்ய வேண்டும் என்றாலும் பிற மாநிலங்களில் ஒப்புதல் வேண்டும் என கூறியுள்ளது.
காவிரி நதிநீர் ஆணையம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கூறினாலும், அவர்கள் அதை திறந்து விட மாட்டேன் என மறுக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சியிலிருந்தும் திமுகவில் இருந்து எந்தக் குரலும் வரவில்லை.
காவிரியில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்திலும் கருத்து தெரிவிக்கப் படும். எனவே குமாரசாமி கூறியது போல் பொதுவாக அணைகட்டி விட முடியாது. ஆனால் அவர்கள் கூறினால் இங்கே உள்ளவர்கள் குரல் எழுப்ப மறுக்கிறார்கள் என்பதுதான் எனது குற்றச்சாட்டு இவ்வாறு அவர் கூறினார்.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.