ETV Bharat / state

ஊரடங்கு: தமிழ்நாடு முழுவதும் வெறிச்சோடிய சாலைகள்!

தமிழ்நாடு முழுவதும் பகல் 12 மணிக்குப் பிறகு புதிய விதிமுறைகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்ததால், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

author img

By

Published : May 6, 2021, 9:08 PM IST

தமிழ்நாடு முழுவதும் வெறிச்சோடிய சாலைகள்
deserted roads in tamil nadu due to lockdown

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாகிவருகிறது. இதைத் தடுக்க மாநில அரசு ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அதன்படி, இன்று காலை 4 மணி முதல் 20ஆம் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். அதில், அரசு மற்றும் பொது போக்குவரத்துகளில் 50விழுக்காடு பயணிகள் மட்டும் பயணிக்க வேண்டும், ரயில் போக்குவரத்தில் அரசு ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் மட்டும் செல்ல அனுமதி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடு விதிமுறைகளை கடுமையான முறையில் கடைபிடிப்பதற்காக, தமிழ்நாடு காவல் துறையின் சார்பில் ஐபிஎஸ் அலுவலர்கள் தலைமையிலான கண்காணிப்பு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

சென்னை

சென்னை புறநகர் பகுதிகளில் பேருந்துகளின் இருக்கைகளில் 50 விழுக்காடு பணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் யாருக்கும் அனுமதி இல்லை. விதிமுறைகள் தெரியாமல் ரயில் நிலையத்திற்கு வரும் பொதுமக்களை அலுவலர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படவில்லை. பொதுமக்கள் ரயிலில் பயணிக்க முடியாத காரணத்தால் கூடுதல் பேருந்துகளை மாநில அரசு இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் காந்தி சாலையில் விதிகளை மீறி திறக்கப்பட்டுள்ள பல்வேறு பட்டுச்சேலை கடைகளில் காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். விதிகளை மீறி இயங்கி வந்த பட்டுச்சேலை கடைகள், அத்தியாவசியமின்றி திறக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட கடைகளை மூட உத்தரவிட்டார்.

ஆய்வு மேற்கொண்ட நகராட்சி ஆணையர்
ஆய்வு மேற்கொண்ட நகராட்சி ஆணையர்

ராஜாஜி மார்க்கெட் பகுதியில் இயங்கும் அத்தியாவசிய கடைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, தலா 500 ரூபாய் அபராதம் விதித்ததோடு, விதிகளை மீறி செயல்பட்டால் சீல் வைக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

கடைகள் அடைப்பு
கடைகள் அடைப்பு

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இன்று பகல் 11.45 மணிக்கு வணிகர்கள், தேநீர் கடைகள், சில்லறை வியாபாரக் கடைகள் மூடப்பட்டன. மாநகராட்சியின் முக்கிய சாலைகளில் உள்ள நகைக்கடைகள், துணிக்கடைகள், மற்றும் காய்கறி சந்தை உள்ளிட்டவைகளும் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி அடைக்கப்பட்டது.

வெறிச்சோடிய ரயில் நிலையம்
வெறிச்சோடிய ரயில் நிலையம்

நகரத்திற்குள் தேவையற்ற போக்குவரத்தைத் தவிர்க்கும் பொருட்டு முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் சட்ட ஒழுங்கு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை

மருந்தகங்கள், பால் விநியோகம் தவிர தனியாகச் செயல்படும் மளிகை மற்றும் காய்கறிகள் விற்பனைக் கடைகள் நண்பகல் 12 மணியுடன் மூடப்பட்டன. காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

கரூர்

கரூர் நகர் பகுதியில் உள்ள மருந்தகங்கள், வங்கிகள் மற்றும் மருத்துவமனைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் நண்பகல் 12 மணியுடன் மூடப்பட்டன. இதனால் கரூர் -கோயம்புத்தூர் சாலை, திண்டுக்கல் சாலை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன . கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் 50 விழுக்காடு பயணிகளுடன் இயக்கப்பட்டன.

அலைமோதும் மக்கள் கூட்டம்
அலைமோதும் மக்கள் கூட்டம்

குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட கடைவீதி சுங்கக்கேட், பெரியபாலம் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய கடைகள் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, கிருஷ்ணராயபுரம், புஞ்சை புகழூர், காகிதப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு புதிய விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

திருவள்ளூர்

அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளை தவிர பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. இருப்பினும் சில கடைகளில் வியாபாரம் நடந்து வருகிறது. அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் 50 விழுக்காடு இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், 100 விழுக்காடு இருக்கைகள் தாண்டியும் பயணிகள் பேருந்தில் பயணித்தனர்.

வெறிச்சோடிய சாலைகள்
வெறிச்சோடிய சாலைகள்

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஏற்கனவே பிற்பகல் 12 மணிக்கு திறந்து இரவு 9 மணிவரை செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள், இன்று முதல் காலை 8மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மதுப்பிரியர்கள் காலை முதலே கடைக்கு படையெடுத்தனர்.

விருதுநகர்

விருதுநகரில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.இதனால் விருதுநகர் சாலைகள் போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டன. இன்று காலை கிருமிநாசனி தெளிக்கப்பட்டு அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து குறைந்தளவு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன.

அரசு, தனியார் பேருந்துகளில் 50 விழுக்காடு பயணிகளுக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவு காரணமாக, பெரும்பாலான தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

கடைகள் மூடல்
கடைகள் மூடல்

ஈரோடு

சத்தியமங்கலத்தில் சாகுபடி செய்யப்படும் மல்லிகை பூ வெளிமாவட்டத்துக்கு வேன் மூலம் அனுப்பப்படுவது வழக்கம். இந்நிலையில், ஊரடங்கை முன்னிட்டு வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பூ விவசாயிகள் பேருந்துகளில் பூக்களை ஏற்றி அனுப்பினர். குறைந்த அளவு பயணிகளே பயணித்ததால், பேருந்துகளில் மல்லிகைப்பூ மூட்டைகள் ஏற்றப்பட்டன.

ராமநாதபுரம்

நண்பகல் 12 மணிக்கு அத்தியாவசியக் கடைகளைத் தவிர மற்றவை மூடப்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ள நிலையில், மக்கள் காலை முதல் கடைகளில் பொருள்கள் வாங்கிச் சென்றனர். 12 மணிக்குப் பின் காவல் துறையினர் கடைகளை அடைக்கக் கூறி ஒலிப்பெருக்கியில் அறிவித்தனர்.

இதன் பின்னர் சாலைகளில் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. புதிய வழிகாட்டுதல்களை முறையாக கடைப்பிடிக்கும் பட்சத்தில் நிச்சயமாக இரண்டாவது அலையின் தாக்கத்தை குறைக்க முடியும் என காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் வெறிச்சோடிய சாலைகள்
கோயம்புத்தூரில் வெறிச்சோடிய சாலைகள்

நண்பகல் 12 மணி வரை செயல்பட்டு வந்த இறைச்சிக் கடைகள், மளிகை கடைகள் போன்றவை மூடப்பட்டன. பெரிய ஜவுளிக்கடைகள், நகைக் கடைகள் ஆகியவை காலை முதலே மூடப்பட்டிருந்தன. காய்கறி மார்கெட்கள் செயல்பட 12 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்ததால், சுமார் 11:30 மணியளவில் காய்கறி மார்கெட்டில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாய் காணப்பட்டது.

இது குறித்து பேசிய கோவை சில்லரை மீன் சந்தை செயலாளர் ஜாஃபர் அலி, ’மக்களின் நலன் கருதி அரசிற்கு ஒத்துழைப்பு நல்குகிறோம். அதே சமயம் எங்கள் வேலை தொடங்குவதற்கே காலை 10, 11 மணி ஆகும் நிலையில், சுமார் 2 மணி நேரம் மட்டுமே கடைகளை திறந்து வைக்கமுடிகிறது.

இதனால் வியாபாரம் மந்தமாகியுள்ளது. எங்களிடம் வேலை செய்வோருக்கே சம்பளம் வழங்க இயலாத சூழல் தான் நிலவுகிறது. வேலை நேரத்தை சற்று அதிகரித்து கொடுத்தால் நன்மையாக இருக்கும். அரசு கூறியுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வியாபாரம் செய்வோம்’என்றார்.

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாகிவருகிறது. இதைத் தடுக்க மாநில அரசு ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அதன்படி, இன்று காலை 4 மணி முதல் 20ஆம் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். அதில், அரசு மற்றும் பொது போக்குவரத்துகளில் 50விழுக்காடு பயணிகள் மட்டும் பயணிக்க வேண்டும், ரயில் போக்குவரத்தில் அரசு ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் மட்டும் செல்ல அனுமதி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடு விதிமுறைகளை கடுமையான முறையில் கடைபிடிப்பதற்காக, தமிழ்நாடு காவல் துறையின் சார்பில் ஐபிஎஸ் அலுவலர்கள் தலைமையிலான கண்காணிப்பு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

சென்னை

சென்னை புறநகர் பகுதிகளில் பேருந்துகளின் இருக்கைகளில் 50 விழுக்காடு பணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் யாருக்கும் அனுமதி இல்லை. விதிமுறைகள் தெரியாமல் ரயில் நிலையத்திற்கு வரும் பொதுமக்களை அலுவலர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படவில்லை. பொதுமக்கள் ரயிலில் பயணிக்க முடியாத காரணத்தால் கூடுதல் பேருந்துகளை மாநில அரசு இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் காந்தி சாலையில் விதிகளை மீறி திறக்கப்பட்டுள்ள பல்வேறு பட்டுச்சேலை கடைகளில் காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். விதிகளை மீறி இயங்கி வந்த பட்டுச்சேலை கடைகள், அத்தியாவசியமின்றி திறக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட கடைகளை மூட உத்தரவிட்டார்.

ஆய்வு மேற்கொண்ட நகராட்சி ஆணையர்
ஆய்வு மேற்கொண்ட நகராட்சி ஆணையர்

ராஜாஜி மார்க்கெட் பகுதியில் இயங்கும் அத்தியாவசிய கடைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, தலா 500 ரூபாய் அபராதம் விதித்ததோடு, விதிகளை மீறி செயல்பட்டால் சீல் வைக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

கடைகள் அடைப்பு
கடைகள் அடைப்பு

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இன்று பகல் 11.45 மணிக்கு வணிகர்கள், தேநீர் கடைகள், சில்லறை வியாபாரக் கடைகள் மூடப்பட்டன. மாநகராட்சியின் முக்கிய சாலைகளில் உள்ள நகைக்கடைகள், துணிக்கடைகள், மற்றும் காய்கறி சந்தை உள்ளிட்டவைகளும் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி அடைக்கப்பட்டது.

வெறிச்சோடிய ரயில் நிலையம்
வெறிச்சோடிய ரயில் நிலையம்

நகரத்திற்குள் தேவையற்ற போக்குவரத்தைத் தவிர்க்கும் பொருட்டு முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் சட்ட ஒழுங்கு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை

மருந்தகங்கள், பால் விநியோகம் தவிர தனியாகச் செயல்படும் மளிகை மற்றும் காய்கறிகள் விற்பனைக் கடைகள் நண்பகல் 12 மணியுடன் மூடப்பட்டன. காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

கரூர்

கரூர் நகர் பகுதியில் உள்ள மருந்தகங்கள், வங்கிகள் மற்றும் மருத்துவமனைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் நண்பகல் 12 மணியுடன் மூடப்பட்டன. இதனால் கரூர் -கோயம்புத்தூர் சாலை, திண்டுக்கல் சாலை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன . கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் 50 விழுக்காடு பயணிகளுடன் இயக்கப்பட்டன.

அலைமோதும் மக்கள் கூட்டம்
அலைமோதும் மக்கள் கூட்டம்

குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட கடைவீதி சுங்கக்கேட், பெரியபாலம் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய கடைகள் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, கிருஷ்ணராயபுரம், புஞ்சை புகழூர், காகிதப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு புதிய விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

திருவள்ளூர்

அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளை தவிர பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. இருப்பினும் சில கடைகளில் வியாபாரம் நடந்து வருகிறது. அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் 50 விழுக்காடு இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், 100 விழுக்காடு இருக்கைகள் தாண்டியும் பயணிகள் பேருந்தில் பயணித்தனர்.

வெறிச்சோடிய சாலைகள்
வெறிச்சோடிய சாலைகள்

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஏற்கனவே பிற்பகல் 12 மணிக்கு திறந்து இரவு 9 மணிவரை செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள், இன்று முதல் காலை 8மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மதுப்பிரியர்கள் காலை முதலே கடைக்கு படையெடுத்தனர்.

விருதுநகர்

விருதுநகரில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.இதனால் விருதுநகர் சாலைகள் போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டன. இன்று காலை கிருமிநாசனி தெளிக்கப்பட்டு அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து குறைந்தளவு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன.

அரசு, தனியார் பேருந்துகளில் 50 விழுக்காடு பயணிகளுக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவு காரணமாக, பெரும்பாலான தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

கடைகள் மூடல்
கடைகள் மூடல்

ஈரோடு

சத்தியமங்கலத்தில் சாகுபடி செய்யப்படும் மல்லிகை பூ வெளிமாவட்டத்துக்கு வேன் மூலம் அனுப்பப்படுவது வழக்கம். இந்நிலையில், ஊரடங்கை முன்னிட்டு வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பூ விவசாயிகள் பேருந்துகளில் பூக்களை ஏற்றி அனுப்பினர். குறைந்த அளவு பயணிகளே பயணித்ததால், பேருந்துகளில் மல்லிகைப்பூ மூட்டைகள் ஏற்றப்பட்டன.

ராமநாதபுரம்

நண்பகல் 12 மணிக்கு அத்தியாவசியக் கடைகளைத் தவிர மற்றவை மூடப்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ள நிலையில், மக்கள் காலை முதல் கடைகளில் பொருள்கள் வாங்கிச் சென்றனர். 12 மணிக்குப் பின் காவல் துறையினர் கடைகளை அடைக்கக் கூறி ஒலிப்பெருக்கியில் அறிவித்தனர்.

இதன் பின்னர் சாலைகளில் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. புதிய வழிகாட்டுதல்களை முறையாக கடைப்பிடிக்கும் பட்சத்தில் நிச்சயமாக இரண்டாவது அலையின் தாக்கத்தை குறைக்க முடியும் என காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் வெறிச்சோடிய சாலைகள்
கோயம்புத்தூரில் வெறிச்சோடிய சாலைகள்

நண்பகல் 12 மணி வரை செயல்பட்டு வந்த இறைச்சிக் கடைகள், மளிகை கடைகள் போன்றவை மூடப்பட்டன. பெரிய ஜவுளிக்கடைகள், நகைக் கடைகள் ஆகியவை காலை முதலே மூடப்பட்டிருந்தன. காய்கறி மார்கெட்கள் செயல்பட 12 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்ததால், சுமார் 11:30 மணியளவில் காய்கறி மார்கெட்டில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாய் காணப்பட்டது.

இது குறித்து பேசிய கோவை சில்லரை மீன் சந்தை செயலாளர் ஜாஃபர் அலி, ’மக்களின் நலன் கருதி அரசிற்கு ஒத்துழைப்பு நல்குகிறோம். அதே சமயம் எங்கள் வேலை தொடங்குவதற்கே காலை 10, 11 மணி ஆகும் நிலையில், சுமார் 2 மணி நேரம் மட்டுமே கடைகளை திறந்து வைக்கமுடிகிறது.

இதனால் வியாபாரம் மந்தமாகியுள்ளது. எங்களிடம் வேலை செய்வோருக்கே சம்பளம் வழங்க இயலாத சூழல் தான் நிலவுகிறது. வேலை நேரத்தை சற்று அதிகரித்து கொடுத்தால் நன்மையாக இருக்கும். அரசு கூறியுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வியாபாரம் செய்வோம்’என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.