ETV Bharat / state

புயல் - அலுவலர்களுக்கும், மக்களுக்கும் தலைமைச்செயலர் சொன்ன அட்வைஸ்!

மாண்டஸ் புயலை எதிர்கொள்வது குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பிறகு அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார்.

author img

By

Published : Dec 8, 2022, 7:36 PM IST

cyclone
cyclone

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல், தென்கிழக்குப் பகுதியில் சென்னையிலிருந்து சுமார் 550 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை(டிச.9) நள்ளிரவு கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வரும் 11ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்றும், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று மற்றும் தரைக்காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளின் தயார் நிலை குறித்து, உயர் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு பின்வரும் அறிவுரைகளை வழங்கினார்.

  • தேசியப் பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 396 வீரர்கள் அடங்கிய 12 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன. பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளைத் தொடர்ந்து பல்துறை மண்டலக் குழுக்கள் மூலம் கண்காணிக்க வேண்டும்.
  • பலத்த காற்று காரணமாக விழும் மரங்களை உடனடியாக அகற்ற மர அறுப்பான்கள் மற்றும் இதர உபகரணங்களுடன் நடமாடும் குழுக்கள் அமைப்பதோடு, போதுமான அளவு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும்.
  • மின் கம்பங்கள், மின் கடத்திகள் ஆகியவற்றை இருப்பு வைத்திருப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகும் மின் இணைப்புகளை சீரமைக்க குழுக்கள் அமைக்க வேண்டும். மணல் மூட்டைகள், கம்பங்கள், அவசரகாலத்தில் தேவையான மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும்.
  • பாதிப்பிற்குள்ளாகும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
  • தங்குதடையின்றி குடிநீர் வழங்குவதற்கு போதுமான ஜெனரேட்டர்கள் வைத்திருக்க வேண்டும். பால் மற்றும் பால்பவுடர் விநியோகம் தடையில்லாமல் நடைபெற உரிய ஏற்பாடுகளை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும்.
  • பேரிடர் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களுக்கும், நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் சீரான போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நபர்களுக்கும், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் உணவு அளிக்கும் வகையில் சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உபரி நீர் வெளியேற்றும்போது பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க வேண்டும்.
  • நெடுஞ்சாலை, நீர் வள ஆதாரத்துறை, மின் வாரியம், தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட துறைகள் களப்பணியாற்ற தயார் நிலையில் இருக்க வேண்டும்.
  • நாளை இரவு புயல் கரையைக் கடக்க உள்ளதால், பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  • பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பலத்த காற்று வீசும் போது மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  • நீர் நிலைகளின் அருகிலும், பலத்த காற்று வீசும் போது திறந்த வெளியிலும் செல்ஃபி எடுப்பதைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி, நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  • இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் TNSMART செயலி மூலம் பகிரும் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும். மெழுகுவர்த்தி, டார்ச் லைட், தீப்பெட்டி, பேட்டரிகள், உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க: மாண்டஸ் புயல்: மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளுக்குச் செல்லத் தடை

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல், தென்கிழக்குப் பகுதியில் சென்னையிலிருந்து சுமார் 550 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை(டிச.9) நள்ளிரவு கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வரும் 11ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்றும், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று மற்றும் தரைக்காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளின் தயார் நிலை குறித்து, உயர் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு பின்வரும் அறிவுரைகளை வழங்கினார்.

  • தேசியப் பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 396 வீரர்கள் அடங்கிய 12 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன. பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளைத் தொடர்ந்து பல்துறை மண்டலக் குழுக்கள் மூலம் கண்காணிக்க வேண்டும்.
  • பலத்த காற்று காரணமாக விழும் மரங்களை உடனடியாக அகற்ற மர அறுப்பான்கள் மற்றும் இதர உபகரணங்களுடன் நடமாடும் குழுக்கள் அமைப்பதோடு, போதுமான அளவு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும்.
  • மின் கம்பங்கள், மின் கடத்திகள் ஆகியவற்றை இருப்பு வைத்திருப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகும் மின் இணைப்புகளை சீரமைக்க குழுக்கள் அமைக்க வேண்டும். மணல் மூட்டைகள், கம்பங்கள், அவசரகாலத்தில் தேவையான மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும்.
  • பாதிப்பிற்குள்ளாகும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
  • தங்குதடையின்றி குடிநீர் வழங்குவதற்கு போதுமான ஜெனரேட்டர்கள் வைத்திருக்க வேண்டும். பால் மற்றும் பால்பவுடர் விநியோகம் தடையில்லாமல் நடைபெற உரிய ஏற்பாடுகளை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும்.
  • பேரிடர் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களுக்கும், நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் சீரான போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நபர்களுக்கும், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் உணவு அளிக்கும் வகையில் சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உபரி நீர் வெளியேற்றும்போது பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க வேண்டும்.
  • நெடுஞ்சாலை, நீர் வள ஆதாரத்துறை, மின் வாரியம், தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட துறைகள் களப்பணியாற்ற தயார் நிலையில் இருக்க வேண்டும்.
  • நாளை இரவு புயல் கரையைக் கடக்க உள்ளதால், பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  • பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பலத்த காற்று வீசும் போது மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  • நீர் நிலைகளின் அருகிலும், பலத்த காற்று வீசும் போது திறந்த வெளியிலும் செல்ஃபி எடுப்பதைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி, நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  • இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் TNSMART செயலி மூலம் பகிரும் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும். மெழுகுவர்த்தி, டார்ச் லைட், தீப்பெட்டி, பேட்டரிகள், உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க: மாண்டஸ் புயல்: மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளுக்குச் செல்லத் தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.