சென்னை துறைமுகத்திலுள்ள சுங்க சரகத்தில் இருந்து கடல் வழியாக துபாய்க்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் கண்டெய்னர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது துபாய் அனுப்புவதற்காக வைத்திருந்த கண்டெய்னர்களில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய இயந்திரத்தில் வைத்து செம்மரக்கட்டைகளை கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக சுமார் 5 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 230 கிலோ எடை கொண்ட செம்மரக்கட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தல் கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பழங்காலத்து தங்க துகள்கள் - பெண் ஒருவரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி