ETV Bharat / state

பரிசு பொருள் என்ற பெயரில் வந்த பார்சல்களில் விஷப்பூச்சி

அமெரிக்காவிலிருந்து சென்னை வந்தடைந்த சரக்கு விமானத்தில் இருந்து கொடிய விஷமுடைய 10 சிலந்தி பூச்சிகள், ரூ.10 லட்சம் மதிப்புடைய உயர் ரக போதை மாத்திரைகள், பதப்படுத்தப்பட்ட கஞ்சா உள்ளிட்டவைகளை சுங்கத்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author img

By

Published : Sep 16, 2021, 9:34 PM IST

chennai airport  drugs seized in chennai air port  chennai news  chennai latest news  Customs officers seized drug in chennai airport  Customs  Customs officers  சுங்கத்துறை  போதை மாத்திரைகள்  கஞ்சா  சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள்  விமான நிலையம்  சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்துக்கு அமெரிக்காவிலிருந்து சரக்கு விமானம் இன்று (செப்.16) காலை வந்தது. அதில் வந்த பார்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.

அதில் ஒரு பாா்சல் போலந்து நாட்டிலிருந்து சென்னை வழியாக ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணம் முகவரிக்கு வந்திருந்தது. அந்த பார்சலில் பரிசு பொருள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

பரிசு பொருள் என்ற பெயரில் சிலந்தி பூச்சிகள்

இந்த பார்சல்கள் மீது சுங்கத்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவற்றை பிரித்து பார்த்த அலுவலர்கள் அதிர்ச்சி காத்திருந்தது. அதன் உள்ளே 10 சிலந்தி பூச்சிகள் தனித்தனி கூம்பு வடிவ பாட்டில்களில் உயிருடன் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து சுங்கத்துறையினர் உடனடியாக சென்னையில் உள்ள மத்திய வன குற்றப்புலனாய்வு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த மத்திய வன குற்றப்புலனாய்வு துறையினர், சிலந்தி பூச்சிகளை பார்வையிட்டனர்.

chennai airport  drugs seized in chennai air port  chennai news  chennai latest news  Customs officers seized drug in chennai airport  Customs  Customs officers  சுங்கத்துறை  போதை மாத்திரைகள்  கஞ்சா  சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள்  விமான நிலையம்  சென்னை விமான நிலையம்
மிகக்கொடிய விஷமுடைய சிலந்தி பூச்சிகள்

பின்னர் இவை மிகக்கொடிய விஷமுடைய ஆப்ரிக்கா நாடுகளில் உள்ள சிலந்தி பூச்சிகள் எனவும், இவைகளை இந்தியாவுக்குள் அனுமதித்தால், வெளிநாட்டு நோய் கிருமிகள் பரவும் அபாயம் இருப்பதாக கூறினர். அத்துடன் இந்த சிலந்திப் பூச்சிகள் எங்கிருந்து வந்ததோ அங்கே திருப்பி அனுப்பிவிட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து சுங்கத்துறையினர் கொடிய விஷமுடைய 10 வெளிநாட்டு சிலந்தி பூச்சிகளையும், சரக்கு விமானம் மூலம் போலந்து நாட்டுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்தனர். அதோடு இந்த சிலந்தி பூச்சிகளை பரிசு பொருள் என்ற பெயரில் இறக்குமதி செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

போதை மாத்திரை, உயர் ரக கஞ்சா பறிமுதல்

அதே சரக்கு விமானத்தில் அமெரிக்காவிலிருந்து சென்னை முகவரிக்கு மருத்துவ பொருள்கள் என்ற பெயரில் ஒரு பார்சல் வந்திருந்தது. அதை திறந்து பாா்த்தபோது, அதனுள் 274 கிராம் பதப்படுத்தப்பட்ட உயர் ரக கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.

chennai airport  drugs seized in chennai air port  chennai news  chennai latest news  Customs officers seized drug in chennai airport  Customs  Customs officers  சுங்கத்துறை  போதை மாத்திரைகள்  கஞ்சா  சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள்  விமான நிலையம்  சென்னை விமான நிலையம்
உயா் ரக கஞ்சா

இதேபோல் நெதர்லாந்து நாட்டிலிருந்து வந்திருந்த மேலும் 2 பார்சல்களையும் சந்தேகத்தில் பிரித்து பார்த்தபோது, 92 கிராம் எடையுள்ள உயர் ரக போதை மாத்திரைகள் இருந்தது கண்டறிப்பட்டது. இதைப்போல் மொத்தம் 9 பார்சல்களில் போதை மாத்திரைகள், உயர் ரக கஞ்சா இருந்துள்ளது.

chennai airport  drugs seized in chennai air port  chennai news  chennai latest news  Customs officers seized drug in chennai airport  Customs  Customs officers  சுங்கத்துறை  போதை மாத்திரைகள்  கஞ்சா  சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள்  விமான நிலையம்  சென்னை விமான நிலையம்
போதை மாத்திரைகள்

இவைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் என தெரியவந்துள்ளது. இந்த பார்சல்கள் அனைத்துமே போலி முகவரிகளில் சென்னைக்கு வந்துள்ளன.

இதையடுத்து சுங்கத்துறையினர் போதை மாத்திரைகள், உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்து, இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கார் கொள்ளையரை சேஸ் செய்த காவலர் - பரபரக்கும் சிசிடிவி காட்சி

சென்னை விமான நிலையத்துக்கு அமெரிக்காவிலிருந்து சரக்கு விமானம் இன்று (செப்.16) காலை வந்தது. அதில் வந்த பார்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.

அதில் ஒரு பாா்சல் போலந்து நாட்டிலிருந்து சென்னை வழியாக ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணம் முகவரிக்கு வந்திருந்தது. அந்த பார்சலில் பரிசு பொருள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

பரிசு பொருள் என்ற பெயரில் சிலந்தி பூச்சிகள்

இந்த பார்சல்கள் மீது சுங்கத்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவற்றை பிரித்து பார்த்த அலுவலர்கள் அதிர்ச்சி காத்திருந்தது. அதன் உள்ளே 10 சிலந்தி பூச்சிகள் தனித்தனி கூம்பு வடிவ பாட்டில்களில் உயிருடன் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து சுங்கத்துறையினர் உடனடியாக சென்னையில் உள்ள மத்திய வன குற்றப்புலனாய்வு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த மத்திய வன குற்றப்புலனாய்வு துறையினர், சிலந்தி பூச்சிகளை பார்வையிட்டனர்.

chennai airport  drugs seized in chennai air port  chennai news  chennai latest news  Customs officers seized drug in chennai airport  Customs  Customs officers  சுங்கத்துறை  போதை மாத்திரைகள்  கஞ்சா  சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள்  விமான நிலையம்  சென்னை விமான நிலையம்
மிகக்கொடிய விஷமுடைய சிலந்தி பூச்சிகள்

பின்னர் இவை மிகக்கொடிய விஷமுடைய ஆப்ரிக்கா நாடுகளில் உள்ள சிலந்தி பூச்சிகள் எனவும், இவைகளை இந்தியாவுக்குள் அனுமதித்தால், வெளிநாட்டு நோய் கிருமிகள் பரவும் அபாயம் இருப்பதாக கூறினர். அத்துடன் இந்த சிலந்திப் பூச்சிகள் எங்கிருந்து வந்ததோ அங்கே திருப்பி அனுப்பிவிட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து சுங்கத்துறையினர் கொடிய விஷமுடைய 10 வெளிநாட்டு சிலந்தி பூச்சிகளையும், சரக்கு விமானம் மூலம் போலந்து நாட்டுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்தனர். அதோடு இந்த சிலந்தி பூச்சிகளை பரிசு பொருள் என்ற பெயரில் இறக்குமதி செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

போதை மாத்திரை, உயர் ரக கஞ்சா பறிமுதல்

அதே சரக்கு விமானத்தில் அமெரிக்காவிலிருந்து சென்னை முகவரிக்கு மருத்துவ பொருள்கள் என்ற பெயரில் ஒரு பார்சல் வந்திருந்தது. அதை திறந்து பாா்த்தபோது, அதனுள் 274 கிராம் பதப்படுத்தப்பட்ட உயர் ரக கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.

chennai airport  drugs seized in chennai air port  chennai news  chennai latest news  Customs officers seized drug in chennai airport  Customs  Customs officers  சுங்கத்துறை  போதை மாத்திரைகள்  கஞ்சா  சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள்  விமான நிலையம்  சென்னை விமான நிலையம்
உயா் ரக கஞ்சா

இதேபோல் நெதர்லாந்து நாட்டிலிருந்து வந்திருந்த மேலும் 2 பார்சல்களையும் சந்தேகத்தில் பிரித்து பார்த்தபோது, 92 கிராம் எடையுள்ள உயர் ரக போதை மாத்திரைகள் இருந்தது கண்டறிப்பட்டது. இதைப்போல் மொத்தம் 9 பார்சல்களில் போதை மாத்திரைகள், உயர் ரக கஞ்சா இருந்துள்ளது.

chennai airport  drugs seized in chennai air port  chennai news  chennai latest news  Customs officers seized drug in chennai airport  Customs  Customs officers  சுங்கத்துறை  போதை மாத்திரைகள்  கஞ்சா  சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள்  விமான நிலையம்  சென்னை விமான நிலையம்
போதை மாத்திரைகள்

இவைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் என தெரியவந்துள்ளது. இந்த பார்சல்கள் அனைத்துமே போலி முகவரிகளில் சென்னைக்கு வந்துள்ளன.

இதையடுத்து சுங்கத்துறையினர் போதை மாத்திரைகள், உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்து, இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கார் கொள்ளையரை சேஸ் செய்த காவலர் - பரபரக்கும் சிசிடிவி காட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.