ETV Bharat / state

ஊரடங்கு மீறல் : 16 கோடியை நெருங்கும் அபராதம்! - Chennai District News

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை மீறுபவர்களிடமிருந்து15 கோடி ரூபாய்க்கும் மேல் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

ஊரடங்கு மீறல்
ஊரடங்கு மீறல்
author img

By

Published : Jun 28, 2020, 12:09 PM IST

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் வருகிற ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும், தடை உத்தரவை மீறி வெளியே வருபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குகள் பதிவு செய்து, வாகனங்களைப் பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்தது முதல் இதுவரை தடையை மீறியதாக 7,53,558 பேரை காவல் துறை கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளது. மேலும், 5,64,823 வாகனங்களைப் பறிமுதல் செய்து, 15,87,38,445 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளதாகவும் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மாவட்ட எல்லைகள் வரை பேருந்து இயக்கம்: சிரமப்படும் பொதுமக்கள்!

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் வருகிற ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும், தடை உத்தரவை மீறி வெளியே வருபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குகள் பதிவு செய்து, வாகனங்களைப் பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்தது முதல் இதுவரை தடையை மீறியதாக 7,53,558 பேரை காவல் துறை கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளது. மேலும், 5,64,823 வாகனங்களைப் பறிமுதல் செய்து, 15,87,38,445 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளதாகவும் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மாவட்ட எல்லைகள் வரை பேருந்து இயக்கம்: சிரமப்படும் பொதுமக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.