ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 60 பேர் கரோனாவால் உயிரிழப்பு!

author img

By

Published : Jul 5, 2020, 6:39 PM IST

Updated : Jul 5, 2020, 7:34 PM IST

கரோனா வைரஸ்
கரோனா வைரஸ்

18:02 July 05

தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 05) 4,150 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 1,11, 151ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 05) மேலும் 4 ஆயிரத்து 150 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 151ஆக அதிகரித்துள்ளது. இன்று கரோனாவுக்கு 60 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 1,510ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் நான்காவது நாளாக, கரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

அதேபோல் இன்று ஒரேநாளில் 2186 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழ்நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை  62 ஆயிரத்து 778ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் 1173 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 254ஆக உயர்ந்துள்ளது. சென்னையை விட பிற மாவட்டங்களில் இன்று பாதிப்பு அதிகம். சென்னையில் நாளை (ஜூலை 6) முதல் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: மனிதக் கழிவுகள் மூலம் கரோனா பரவுகிறதா ?

18:02 July 05

தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 05) 4,150 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 1,11, 151ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 05) மேலும் 4 ஆயிரத்து 150 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 151ஆக அதிகரித்துள்ளது. இன்று கரோனாவுக்கு 60 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 1,510ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் நான்காவது நாளாக, கரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

அதேபோல் இன்று ஒரேநாளில் 2186 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழ்நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை  62 ஆயிரத்து 778ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் 1173 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 254ஆக உயர்ந்துள்ளது. சென்னையை விட பிற மாவட்டங்களில் இன்று பாதிப்பு அதிகம். சென்னையில் நாளை (ஜூலை 6) முதல் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: மனிதக் கழிவுகள் மூலம் கரோனா பரவுகிறதா ?

Last Updated : Jul 5, 2020, 7:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.